admin

கவிதை கேட்ட நரி

ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களில் மிக முக்கியமானவர் மட்சுவோ பாஷோ, அவரைப்பற்றிய Basho And The Fox என்ற புத்தகத்தைப் படித்தேன், டிம்.ஜே,மேயர்ஸ் குழந்தைகளுக்காக எழுதிய சித்திரங்களுடன் உள்ள புத்தகமது பாஷோ டோக்கியோ நகரின் புறவெளியில் இயற்கையோடு இணைந்தபடி சிறிய குடிலை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தவர், பாஷோ என்பதற்கு வாழைமரம் என்று தான் பொருள், அவரது வீட்டின் அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஒரு செர்ரி மரமிருந்தது, இந்த மரத்தடியில் அமர்ந்தபடியே அதன் பூக்களை ரசிப்பது பாஷோவிற்கு பிடித்தமான …

கவிதை கேட்ட நரி Read More »

தண்ணீரின் சிறகுகள்

கனடாவில் பயணம் செய்யும் வரை தண்ணீரைப் பற்றி என் மனதில் பதிந்திருந்த சித்திரம் வேறாகவே இருந்தது, கனடாவின் பிரம்மாண்டமான ஏரிகள் அந்த பிம்பத்தை முற்றிலும் மாற்றிவிட்டன தண்ணீருக்குச் சிறகுகள் இருப்பதைக் கனடாவின் ஒன்டாரியோ ஏரியையும், சிம்கோ ஏரியையும்,  பார்த்த போது தான் உணர்ந்தேன், கண்கொள்ளமுடியாதபடி அகன்று விரிந்து கிடக்கிறது ஏரி, கடலிடமுள்ள ஆர்ப்பரிப்பு கிடையாது, சுவையான நல்ல தண்ணீர், அடிவானத்தோடு தண்ணீர் ஒன்று சேர்ந்திருப்பதால் ஆகாசம் தான் தண்ணீராக உருமாறியிருக்கிறதோ எனும்படியாக நீர்பரப்பு விரிந்து கிடக்கிறது, குட்டி …

தண்ணீரின் சிறகுகள் Read More »

ஒவியன் வாங்ஃபோ

மார்கெரித் யூர்ஸ்னார் (Marguerite Yourcenar) நவீன பிரெஞ்ச் இலக்கியத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர். இவரது சிறுகதைகளின் தொகுப்பு கீழை நாட்டுக்கதைகள் என்ற பெயரில் க்ரியா வெளியீடாக தமிழில் வெளியாகி உள்ளது. யூர்ஸ்னார் பிரெஞ்ச் கலை இலக்கிய அகாதமியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் பெண் எழுத்தாளர். முக்கிய நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், இவரது எழுத்துகள் குறித்து இன்றளவும் தொடர்ந்து சர்சைகள் இருந்து வருகின்றன தொன்மங்களையும் பழங்கதைகளையும் கொண்டு உருவாக்கபடும் இவரது நவீன சிறுகதைகள் கதை சொல்லும் …

ஒவியன் வாங்ஃபோ Read More »

நேர்காணல்

இந்தவார சண்டே இன்டியன் இதழில் எனது விரிவான நேர்காணல் வெளியாகி உள்ளது, அதை வாசிப்பதற்கான இணைப்பு https://www.thesundayindian.com/ta/story/34/2611/

ஷேக்ஸ்பியரின் முன்னால்

டொரன்டோவில் இருந்து மூன்று மணி நேரப்பயணத்தில் உள்ளது ஸ்ட்ராட்போர்ட்,  பிரிட்டீஷ்காரர்கள் அதிகம் வசிக்கும் அழகிய சிறிய நகரம், இங்கே ஆண்டு முழுவதும் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன, இதற்காக ஷேக்ஸ்பியரின் காலத்தில் இருந்தது போலவே பிரத்யேகமான குளோப் தியேட்டர் எனும் விஷேச அரங்கினை உருவாக்கியிருக்கிறார்கள், இந்தக் கோளவடிவ அரங்கில் ஒரு நேரத்தில் 1800 பேர் உட்கார்ந்து நாடகம் பார்க்க முடியும் இங்கே ஷேக்ஸ்பியரின் நாடகப்பிரதிகள் நவீனகால ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்படாமல் மூலவடிவத்திலே நிகழ்த்தப்படுகின்றன, ஒரு நாடகம் மூன்று …

ஷேக்ஸ்பியரின் முன்னால் Read More »

லெபனான்

சமீபத்தில் பார்த்த இஸ்ரேலியத்திரைப்படம் லெபனான், முழுப்படமும் ஒரு பீரங்கி வண்டிக்குள்ளாகவே எடுக்கப்பட்டிருப்பது இதன் முதற்சிறப்பு, பீரங்கிவண்டியை ஒரு வலிமையான போர்கருவியாக மட்டுமே அறிந்து வைத்திருந்த நமது பொதுப்புத்தியை இப்படம் கேள்விக்குள்ளாக்குகிறது, யுத்த முனையில் பீரங்கிகள் கடந்து போவதையும் அவை இலக்குகளைத் தாக்கி அழிப்பதையும் பல படங்களில் பார்த்திருக்கிறோம்,  ஆனால் பீரங்கி வண்டி என்பது ஒரு தனியுலகம், அந்த வாகனத்தினுள் நாலு போர்வீரர்கள் பகலிரவாகத் தங்கியிருக்கிறார்கள், இலக்கைக் குறிவைத்துத் தாக்க ஒருவர், வண்டியை இயக்க மற்றவர், யாரைத் தாக்குவது …

லெபனான் Read More »

ரிவேரா வளாகம்.

கனடா மற்றும் அமெரிக்கப் பயணத்தில் அதிகம் நான் பார்வையிட்டது  அருங்காட்சியகங்கள் மற்றும் கலைக்கூடங்களையே, குறிப்பாக பிகாசோவின் நூற்றுக்கும் மேற்பட்ட ஒவியங்கள், ரெம்பிராண்ட், வான்கோ,  டாலி,  கோயா, பிரைடா காலோ, மடீசி,  வெர்மர், ரெனார், பால்காகின், ரூசோ, பிளேக், எட்கர் டீகாஸ், புரூகேல், வில்லியம் பிளேக், மிரோ, காடீன்ஸ்கி, முன்ச், கிளிம்ட், எட்வர்ட் ஹாபர், மார்சல் டச்ஹாம், பால் செசான், மார்க் செகால், மோடில்யானி, கமிலோ பிசாரோ, டூரர் போன்ற ஒவியமேதைகளின் படைப்புகளைக் கண்டது வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவம், …

ரிவேரா வளாகம். Read More »

அழகே அழகு

சில திரையிசைப் பாடல்கள் கேட்ட முதல்நாளில் இருந்து இன்று வரை அதன் ஈர்ப்பை அப்படியே வைத்திருக்கின்றன, அதில் ஒன்று ராஜபார்வை படத்தில் இடம் பெற்ற ஜேசுதாஸ் பாடியுள்ள அழகே அழகு தேவதை பாடல் கவியரசர்  கண்ணதாசன் எழுதிய இப்பாடல் பாதாதி கேசம் பெண்ணை வர்ணிக்கும் மரபில் உருவானது, பாடலை ரசித்து அழகாக எழுதியிருக்கிறார் கவியரசர், எளிமையும், வியப்பும் ஒருங்கே கொண்ட பாடலது, கண்ணை மூடிக் கொண்டுவிட்டால் மனதில் ஒரு பெண்உருவம் தோன்றி பாடல் கேட்பவரை தன்வசமாக்குகிறது, ராஜபார்வை …

அழகே அழகு Read More »

போர்ஹேயின் வகுப்பறை

அமெரிக்கப் பயணத்தை திட்டமிடும் போதே மிஷிகன் மாநிலத்தில் உள்ள கிழக்கு லான்சிங் பல்கலைகழகத்தை ஒரு முறைப் பார்வையிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன், அங்கே தான் எனது விருப்பத்திற்குரிய எழுத்து ஆளுமை ஜோர்ஜ் லூயி போர்ஹே (Jorge Luis Borges ) 1975ல் கௌரவ டாக்டர் பெற்றார், கவிதை குறித்து அப்பல்கலைகழகத்தில் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார், லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் தனிப்பெரும் கவிஞர், புனைகதையாசிரியர் என்று கொண்டாடப்படும் ஜோர்ஜ் லூயி போர்ஹே பார்வையற்றவர், ஆனால் அதை ஒரு தடையாகக் …

போர்ஹேயின் வகுப்பறை Read More »

சென்னை திரும்பல்

அமெரிக்கா மற்றும் கனடா பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு இரண்டு மணிக்கு சென்னை திரும்பினேன், விமானத் தாமதம் காரணமாக 26 மணி நேர தொடர் பயணம் அலுப்பாகி விட்டது, பகலிரவாக பறப்பது சலிப்பூட்டும் அனுபவம் அமெரிக்கப்பயணத்தினை எனது நண்பர் திருமூர்த்தியுடன் இணைந்து நண்பர் பாலாஜி சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்,   பயணத்தின் ஊடே திண்ணை இணைய இதழின் ஆசிரியரும் எனது விருப்பத்திற்குரிய நண்பருமான கோ. ராஜாராம், மற்றும் நண்பர்கள்சொர்ணவேல், வார்த்தை பி.கே. சிவக்குமார்,டைனோ, நிர்மல்,  கார்த்திகேயன், மயிலாடுதுறை சிவா, நிர்மல், மெய்யப்பன், …

சென்னை திரும்பல் Read More »