அறிவிப்பு

திரைப்படக் கலந்துரையாடல்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் திரைப்படக் கலந்தாய்வு குழு மாற்றுச்சினிமாவுக்கான கலந்துரையாடல் என்ற தலைப்பில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வின் முதல் திரைப்படமாக பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 திரைப்படம் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. வருகிற 19ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில்,சென்னை வடபழனியில் உள்ள திரை இசை கலைஞர்கள் சங்கத்தில் நடக்கவிருக்கும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் “வழக்கு எண் 18/9” திரைப்படத்தில் திரைக்கதை யுக்திகள், படிமங்கள் என்ற தலைப்பில் நான் …

திரைப்படக் கலந்துரையாடல் Read More »

கனடா மற்றும் அமெரிக்கப் பயணம்

இயல்விருது பெறுவதற்காக கனடா செல்ல இருக்கிறேன், டொரன்டோ நகரில் ஜுன் 16 அன்று நடைபெறும் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்கிறேன், அதை ஒட்டிப் பத்து நாட்கள் கனடாவில் இருக்கிறேன், பின்பு அங்கிருந்து அமெரிக்கா சென்று மூன்று வார காலம் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறேன் கனடாவில் நடைபெறும் நிகழ்வுகளை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் மற்றும் நண்பர் செல்வம் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்கிறார்கள் அமெரிக்கப் பயணத்தை பாஸ்டன் பாலாஜி ஒருங்கிணைப்பு செய்கிறார் இன்னமும் பயணத்திட்டம் முழுமையாக வடிவம் பெறவில்லை, …

கனடா மற்றும் அமெரிக்கப் பயணம் Read More »

எனது உரைகள்

டால்ஸ்டாயின் அன்னாகரீனினா . தஸ்தாயெவ்ஸ்கின் குற்றமும் தண்டனையும். பாஷோவின் ஜென் கவிதைகள். ஷேக்ஸ்பியரின் மெக்பெத், ஹெமிங்வேயின் கிழவனும் கடலும்.  ஆயிரத்தோரு அரேபிய இரவுகள் , ஹோமரின் இலியட் உள்ளிட்ட எனது உலக இலக்கியப்பேருரைகளின் டிவிடி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது, பல்கலைகழகங்கள்,கல்லூரிகள், மற்றும் இலக்கிய அமைப்புகள் அதைத் திரையிட்டு மாணவர்களுக்கு அறிமுகம் செய்துவருகிறார்கள், இலக்கியப்பேருரைகளின் டிவிடி எங்கே கிடைக்கும் என்று பலரும் தொடர்ந்து கேட்டுவருகிறார்கள், இந்த டிவிடி ஒன்றின் விலை ரூ 100, ஏழு டிவிடிகள் உள்ளது, மொத்தம் …

எனது உரைகள் Read More »

கல்விக்கு உதவுங்கள்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முன்மாதிரியான ஒன்று இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, இந்த சாதனையை நிகழ்த்தியவர் பள்ளி ஆசிரியர் பிராங்கிளின், இது பற்றி இணையத்தில் நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். தற்போது இப்பள்ளி விரிவுபடுத்தபடும் பணி நடைபெறுகிறது, அதற்கான நிதி உதவி கேட்டு பிராங்கிளின் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார் நண்பர்கள் அனைவரும் அவசியம் இந்தப் பணிக்கு உதவும்படி கேட்டுக் கொள்கிறேன் •• மணல் சுமக்கும் அணில்களைத் தேடி… அன்புடையீர், வணக்கம். இராமம்பாளையம் பள்ளியிலிருந்து தங்களைத்தொடர்பு கொள்வதில் …

கல்விக்கு உதவுங்கள் Read More »

வானெங்கும் பறவைகள்

கடந்த ஐந்து நாட்களாக திருச்சி எஸ்ஆர்வி பள்ளி நடத்திய மாணவர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொணடேன். இந்த முகாமில் எழுத்தாளர் வண்ணதாசன், எழுத்தாளர் தமிழ்செல்வன், பத்திரிக்கையாளர் ஞாநி, எழுத்தாளர் பவா.செல்லத்துரை, எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், சரஸ்வதி மகால் நூலகர் பெருமாள், புகைப்படக்கலைஞர் வைட் ஆங்கிள் ரவிசங்கர், நாடக கலைஞர் பார்த்திபராஜா, ஒவியர் டிராட்ஸ்கி மருது, நடிகை ரோகிணி, பத்திரிக்கையாளர் கவின்மலர், கவிதா முரளிதரன், பெண்ணியசிந்தனையாளர் பத்மாவதி, விஜயா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். பெரிய இலக்கியவிழா …

வானெங்கும் பறவைகள் Read More »

பிறந்த நாள்

இன்று எனது பிறந்த நாள், இதற்காக மின்னஞ்சலிலும், தொலைபேசியிலும் வாழ்த்து தெரிவித்த நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ***

புன்னகை விற்பனைக்கு

எனது காதல்மேஜை என்ற குறுங்கதையை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட குறும்படமிது, நித்திலன் இயக்கிய இப்படம் கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது *** புன்னகை விற்பனைக்கு — https://www.youtube.com/watch?v=rfpG8YlhHEE

சிங்கப்பூர் பதிவு

சிங்கப்பூரில் நான் நடத்திய சிறுகதைப் பயிலரங்கு பற்றி THE WALL STREET JOURNALல் வெளியாகி உள்ள கட்டுரை https://blogs.wsj.com/searealtime/2012/04/09/creating-the-next-generation-of-tamil-storytellers/ •••

இணையத்தாக்குதல்

எனது இணையம் சில விஷமிகளால் தொடர்ந்து வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது, இது போலவே எனது மின்னஞ்சலுக்குப் போலி பெயர்களில் மின்னஞ்சல் அனுப்பி வக்ரபுத்தி கொண்ட சிலர் விளையாடுகிறார்கள், இரண்டையும் பற்றி முழுமையான தகவல்கள், அவர்களின் ஐபி முகவரி திரட்டப்பட்டுள்ளது, இது குறித்து போலீஸ் கமிஷனரிடம் முறையான புகார் ஒன்றினை அளிக்க இருக்கிறேன், கூடுதலாக சைபர் கிரைம் பிரிவிலும் எனது வலைத்தளம் மற்றும் மெயிலில் புகுந்து விளையாடும் நபர்கள் பற்றி தனிப்புகார் அளிக்க இருக்கிறேன், விரைவில் அவர்கள் …

இணையத்தாக்குதல் Read More »

சிங்கப்பூர் செல்கிறேன்

சிங்கப்பூரில் நடைபெறும் சிறுகதைப் பயிலரங்கில் கலந்து கொள்வதற்காக இன்றிரவு செல்கிறேன், சிங்கப்பூரில் சந்திக்க விரும்பும் நண்பர்கள் ஆதிமூலம் 81500707 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் பத்தாம் தேதி சென்னை திரும்புகிறேன் ***