இலக்கியம்

அன்னையின் பாலில் ஊறியவை

உடன்பிறந்தவளின் திட்டுகள் உடன்பிறந்தவர்களைப் பாதிப்பதில்லை! அவை அன்னையின் பாலில் ஊறியவை. என்றொரு வரியை எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய் எழுதிய பச்சோ அத்தை சிறுகதையில் படித்தேன். அற்புதமான வரியது. அக்கா அல்லது தங்கையின் கோபம் அல்லது திட்டு அண்ணன் தம்பிகளைப் பாதிப்பதில்லை. அந்தக் கோபம் அன்பின் வெளிப்பாடு. உடன்பிறந்தவளின் திட்டுகள் என்பது உரிமையில் வெளிப்படும் சொற்கள். ஒற்றைப் பிள்ளையாக வளரும் இன்றைய குழந்தைகளுக்கு இந்தக் கோபம் அறியாமல் இருக்கக் கூடும். ஆனால் கடந்த காலங்களில் வீட்டிற்கு நான்கு ஐந்து …

அன்னையின் பாலில் ஊறியவை Read More »

அரூ சிறப்பிதழ்

சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் அரூ இணைய இதழ் எனது விரிவான நேர்காணலை வெளியிட்டுள்ளது. அத்தோடு எனது படைப்புகள் குறித்த கட்டுரைகளைக் கொண்ட சிறப்பு பகுதியும் வெளியிட்டுள்ளது. இந்தச் சிறப்பிதழை முன்னெடுத்த அரூ நண்பர்களுக்கும் கட்டுரையாளர்கள் பிருந்தா சாரதி, பு. பிரியதர்சினி, ராம் தங்கம் ,வினோத், கணேஷ் பாபுக்கும் எனது மனம் நிரம்பிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நேர்காணலை எடுப்பதற்காக ஆறு மாதங்களுக்கும் மேலாக எனது புத்தகங்களைப் படித்து கேள்விகளைத் தயாரித்து தொகுத்து அனுப்பி வைத்தார்கள். பதில்கள் கிடைத்தவுடன் …

அரூ சிறப்பிதழ் Read More »

ஒரே கிராமத்தினர்

ரஷ்யச்சிறுகதை வாலென்டின் காத்தயேவ் தமிழில் பாஸ்கரன் “பெண்கள் என்னைக் காதலிக்கின்றனர்” என்று சிலிர்த்த தலை மயிரையுடைய கட்டையான அழகிய சிப்பாய் ஒருவன் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் தனது சகாக்களிடம் கூறினான்.  அவன் அந்தக் குடிசையின் நடுவில் நின்று கொண்டிருந்தான். அவனைத் தவிர அங்கே மூன்று நோயாளிகள் இருந்தனர். மக்கிப்போன வைக்கோல் நாரினால் கட்டப்பட்ட அகன்ற அட்டைகளில் அவர்கள் படுத்திருந்தார்கள். அதில் இருவர்  அசிரத்தையாக கூரையைப் பார்த்தவண்ணமிருந்தனர். மூன்றாவது ஆசாமி மூலையில்  படுத்தவாறே கிழிந்த துணிகளினால் பெண்ணைப் போல் சுற்றிக் …

ஒரே கிராமத்தினர் Read More »

ஆல்பெர் காம்யுவின் அம்மா

ஆல்பெர் காம்யு எழுதிய முதல் நாவல் அந்நியன். ( Albert Camus’s ‘The Stranger’)  வெ.ஸ்ரீராம் மொழிபெயர்ப்பில் க்ரியா பதிப்பக வெளியீடாகத் தமிழில் வெளியாகியுள்ளது. இந்த நாவல் 1942-ல் எழுதப்பட்டது. “இன்று அம்மா இறந்துவிட்டாள். ஒருவேளை நேற்றாகவும் இருக்கலாம்; எனக்குத் தெரியாது” என்று ‘மெர்சோ’சொல்வதிலிருந்து நாவல் துவங்குகிறது. என் கல்லூரி நாட்களில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியைக் காணச் சென்றிருந்த போது அவர் இந்த நாவல் குறித்து வியந்து பேசிக் கொண்டிருந்தார். மெர்சோவைப் பற்றிய அவரது அவதானிப்பு மறக்கமுடியாதது. …

ஆல்பெர் காம்யுவின் அம்மா Read More »

எழுத்தாளர்களின் உலகம்

 ‘எனதருமை டால்ஸ்டாய்’ – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர்கள் முனைவர் சாமுவேல் சுதானந்தா அவர்களும் முனைவர் பிரபாகர் வேதமாணிக்கம் அவர்களும் வகுப்பறையில் ‘நாவல் இலக்கியம்’ பாடத்தை நடத்தினார்கள். அவர்கள் பிற ஆசிரியர்களைப் போலக் ‘கதைச்சுருக்கம்’ கூறுபவர்கள் அல்லர்; தம்மோடு மாணவர்களையும் இணைத்துக்கொண்டு, அந்த நாவலின் வழியாக அந்தப் படைபாளரின் படைப்பு மனத்தைப் பின்தொடர்பவர்கள். நாவலையும் சிறுகதையையும் பல கோணத்தில் புரிந்துகொள்ளவும் ஆராயவும் கற்றுக்கொடுத்தவர்கள்.  கி. ராஜநாராயணனையும் தி. ஜானகிராமனையும் …

எழுத்தாளர்களின் உலகம் Read More »

வாழ்வின் தேவை

சிறுகதை குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காகத் தான் ஸ்வேதா அம்மாவை வரவழைத்திருந்தாள். இரண்டாவது பிரசவத்தின் போது சிக்கலாகிவிட்டது. நிறையக் குருதிப்போக்கு. அறுவைசிகிச்சை. அவளை இரண்டுமாதகாலம் படுக்கையில் கிடத்திவிட்டது. இதற்கு மேல் லீவு போட முடியாது என்ற சூழலில் அலுவலகம் போய்வரத்துவங்கினாள். அப்பா இருக்கும்வரை அம்மா தனியே பயணம் செய்ததேயில்லை. ஆனால் இப்போதெல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ் ஏற்றிவிட்டால் தானே பெங்களூர் வந்துவிடுகிறாள். கன்னடம் தெரியாத போதும் அவளாக ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்துவிடுகிறாள். இந்த முறை அப்படித்தான் வந்து …

வாழ்வின் தேவை Read More »

கைதட்டுகள் போதும்

சிறுகதை அந்த ஊரில் ரங்கசாமியின் வீட்டிற்கு மட்டும் கதவில்லை. தனக்குக் கதவு தேவையில்லை என்று பிடுங்கி எறிந்துவிட்டார். கதவற்ற அவரது வீட்டிற்கு யார் வரப்போகிறார்கள். காற்றையும் சூரிய வெளிச்சத்தையும் அபூர்வமாக வரும் மழையையும் தவிர வேறு மனிதர்கள் அந்த வீட்டிற்கு வருவதேயில்லை. ரங்கசாமி சர்க்கஸில் வேலை செய்ததன் அடையாளமாக அவரிடம் மிஞ்சமிருந்தது ஒற்றைச் சக்கரம் கொண்ட சைக்கிள் மட்டுமே. அந்தச் சைக்கிளில் தான் இப்போதும் அவர் வெளியே போய் வருகிறார். விளாம்பட்டி என்ற அந்தச் சிறிய கிராமத்தில் …

கைதட்டுகள் போதும் Read More »

இலக்கற்ற பயணம்

 ‘தேசாந்திரி’ – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை வீட்டின் சாளரங்களின் (ஜன்னல்களின்) வழியாக நிலாவைப் பார்ப்பதற்கும் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று அல்லது வீட்டின் தோட்டத்தில், முற்றத்தில் நின்று நிலாவைப் பார்ப்பதற்கும் வேறுபாடு உண்டு. சாளரங்கள் நம் பார்வைக் கோணத்தைக் கட்டுப்படுத்தும்; நமது சுதந்திரத்தைத் தடுக்கும். ஆனால், மொட்டை மாடியும் தோட்டமும் முற்றமும் நமக்கு அனைத்துச் சுதந்திரத்தையும் கொடுக்கும்; எல்லாக் கோணத்திலும் நிலாவைப் பார்க்க நம்மை அனுமதிக்கும். பயணங்கள் சுதந்திரமானவை. அவை தரும் காட்சிப் பதிவுகள் …

இலக்கற்ற பயணம் Read More »

புனைவெழுத்தின் வரைபடம்.

‘விழித்திருப்பவனின் இரவு – வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை அக இருளிலிருந்து முளைத்து, தலைநீட்டி வளர்ந்து, புறத்தில் பல வண்ணங்களில் ஒளிர்ந்து, மலர்வதுதானே படைப்பு! உலக அளவில் மிகவும் கவனிக்கத்தக்க படைப்பாளர்களுள் 28 பேரின் அகவாழ்வை அறிமுகப்படுத்தும் வகையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள புத்தகம் ‘விழித்திருப்பவனின் இரவு’. ஓர் எழுத்தாளரின் படைப்பைப் பற்றி முழுதும் அறிய வேண்டுமென்றால், நாம் அந்தப் படைப்பாளரின் அகவாழ்வை முழுதும் அறிந்துகொள்ள வேண்டும். அவர்களின் அகவாழ்வை அறிந்துகொள்வது அவ்வளவு …

புனைவெழுத்தின் வரைபடம். Read More »

முதல் இந்தியச் சிற்பம்

இந்தியாவின் மிகப்பெரிய பதிப்பாளர் சாகித்ய அகாதமி. 24 மொழிகளில் புத்தகங்களை வெளியிடும் ஒரே நிறுவனம் சாகித்ய அகாதமி மட்டுமே. அரசு நிதி உதவியுடன் செயல்படும் இந்தப் பதிப்பகம் மலிவு விலையில் மிகச்சிறப்பான நூல்களை வெளியிட்டுவருகிறது சாகித்ய அகாதமி வெளியிடும் புத்தகங்களின் உள் அட்டையில் ஒரு சிற்பத்தின் படம் அச்சிடப்பட்டிருப்பதைக் கண்டிருப்பீர்கள். அது எழுதும் கலையைச் சித்தரிக்கும் முதல் இந்தியச் சிற்பமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு முறை சாகித்ய அகாதமி நூலைக் கையில் எடுக்கும் போதும் இந்தச் சிற்பத்தை ரசித்துப் …

முதல் இந்தியச் சிற்பம் Read More »