இலக்கியம்

ஒரு கொசுவின் கதை

பெர்னாண்டோ ஸோரன்டினோ ஸ்பானிய எழுத்தாளர். அவரது சிறுகதைகள் மாயமும் விசித்திரமான நிகழ்வுகளும் கொண்டவை. அன்றாட வாழ்க்கையினை இத்தனை நுட்பமாக, குறிப்பாக அதன் அபத்த நிகழ்வுகளை துல்லியமாக யாரும் எழுதியதில்லை. அவர் கொசுவைப் பற்றி ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். கொசுவைப் பற்றி எழுத என்ன இருக்கிறது என்று தான் எவருக்கும் தோன்றும். வேறு எவராது இந்தக் கதையை எழுதியிருந்தால் இரண்டு வரிகளுக்கு மேல் எழுத இயலாது. ஆனால் ஸோரன்டினோ எத்தனை அழகாக இந்தக் கதையை எழுதியிருக்கிறார். கதையை விவரிப்பவர் …

ஒரு கொசுவின் கதை Read More »

ஷேக்ஸ்பியர் சினிமா

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகியுள்ள ஜோஜி திரைப்படம் ஷேக்ஸ்பியரின் மேக்பெத்தை தழுவி உருவாக்கபட்டுள்ளது. இதில் பகத் பாசில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். மேக்பெத்தை விடவும் கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய இரகள் படத்தினை தான் இப்படம் அதிகம் தழுவியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது பத்து திரைப்படங்கள் உலகின் வேறுவேறு மொழிகளில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை தழுவி உருவாக்கபடுகின்றன. உலகிலே ஒரு எழுத்தாளரின் படைப்புகள் அதிகம் திரைப்படமாக்கட்டுள்ளது ஷேக்ஸ்பியருக்கு மட்டுமே. பைபிளுக்கு அடுத்து இதுவே அதிகமுறை திரைப்படமாக்கபட்டிருக்கிறது. இதுவரை ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மையமாகக் கொண்டு 410 …

ஷேக்ஸ்பியர் சினிமா Read More »

புகைப்படம் சொல்லாதது

கன்னட எழுத்தாளர் எஸ். திவாகர் புகைப்படம் என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறார். மிகச்சிறிய கதை. ஒரு பழைய காலப் புகைப்படத்தைப் பற்றியது. பாணன் என்ற நண்பர் இந்தக் கதையினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியிருந்தார். இந்தக் கதையில் இரண்டு விஷயங்கள் என் கவனத்தை ஈர்த்தன. கல்யாணப் பெண்ணிற்கு நிகராக அவளது கணவன் அணிந்துள்ள நகைகள் மற்றும் சட்டை அணியாத அவரது தோற்றம் மாப்பிள்ளை முகபாவத்தில் கல்யாணம் ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பது போன்ற உணர்ச்சி வெளிப்படுகிறது. எதையோ மறைக்கும் கண்கள். …

புகைப்படம் சொல்லாதது Read More »

கவிதையும் கவிஞனும்

மணல் கடிகை என்ற தனது வலைப்பக்கத்தில் எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் ரமாகாந்த் ரத்தின் கவிதை குறித்த எண்ணங்களைப் பகிர்ந்திருந்தார். மிக நல்ல கட்டுரையது. “ஒரு கலைஞன் என்ற முறையில் அவன் ஒரு குயவனிலிருந்து அல்லது ஒரு தச்சனிலிருந்து வேறுபடுகிறான். தாங்கள் உருவாக்க நினைப்பதை செய்து முடிப்பதில் அவர்களால் எப்போதும் வெற்றி பெற முடிகிறது. தங்களது படைப்புக்கு அவர்களால் நேர்மையுடன் உரிமை கோரமுடிகிறது. ஆனால், கவிஞனின் நிலை அவ்வாறில்லை. முன்னர் அறியாத ஒரு உயிர்துடிப்பான ஒரு தருணத்தின் கருவியாக …

கவிதையும் கவிஞனும் Read More »

உலகின் முதற்புத்தகம்

நண்பர்கள், வாசகர்கள், சக எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையாளர்கள், ஆசிரியர்கள். நூலகர் மற்றும் நூலகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த உலகப் புத்தகத் தின வாழ்த்துகள். படிப்பதற்காகவே வாழுகிறவர்கள் என்று சிலரை நினைத்துக் கொள்வேன். அதில் முக்கியமானவர்கள் வேலூர் லிங்கம் மற்றும் ஆம்பூர் அசோகன். இருவரும் ஆண்டு முழுவதும் படித்துக் கொண்டேயிருக்கிறார்கள். புதிய புத்தகங்களைத் தேடித்தேடி வாங்குகிறார்கள். புத்தகங்களுடனே வாழுகிறார்கள். வேலூர் லிங்கம் ஒரு புத்தகக் கண்காட்சி தவறாமல் சென்றுவிடுவார். ஆன்லைன் மூலமாகவும் தமிழ் …

உலகின் முதற்புத்தகம் Read More »

‘இந்திய வானம்’ – வாசிப்பனுபவம்

முனைவர் ப. சரவணன், மதுரை நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தபோது, என்னுடைய தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பிரபாகர் வேதமாணிக்கம் அவர்கள் வகுப்பறையில் நவீன இலக்கியங்கள் தொடர்பான பாடத்தை நடத்திக்கொண்டிருக்கும் போது, “எல்லாத்துக்கும் உதாரணம் இந்தியாவுல இருக்கும்” என்றார். அப்போது அந்தத் தொடருக்கான பொருள் எனக்குப் புரியவில்லை. ஆனால், எழுத்தாளர் உயர்திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ‘இந்திய வானம்’ புத்தகத்தைப் படித்ததும் அந்தத் தொடருக்கான பொருள் எனக்குப் புரிந்துவிட்டது. ‘மேன்மைகளும் கீழ்மைகளும் சம அளவில் நிறைந்த பெருநிலம்தான் …

‘இந்திய வானம்’ – வாசிப்பனுபவம் Read More »

காதலின் ஒளியில்

நோபல் பரிசு பெற்ற கவிஞரான ஆக்டோவியா பாஸ் பற்றிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். The Labyrinth of Octavio Paz”என்ற இந்த ஆவணப்படத்தில் அவரது ஆளுமையின் பன்மைத்தன்மை மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஸ் இந்தியாவில் மெக்சிகத் தூதுவராகப் பணியாற்றியவர். டெல்லியில் வசித்த நாட்களில் பிரெஞ்சு தூதரகத்தில் பணியாற்றிய அரசியல் ஆலோசகரின் மனைவியான மேரி ஜோஸ் உடன் நெருக்கமான காதல் உருவானது. அந்த ரகசியக்காதல் தான் இந்தியாவை அவர் நேசிக்க ஒரு காரணம் என்கிறார்கள். பாஸ் ஏற்கனவே …

காதலின் ஒளியில் Read More »

மகிழ் ஆதனின் கவிதைகள்

நகுலன் “எட்டு வயது பெண் குழந்தையும், நவீன மலையாளக் கவிதையும்” என்றொரு கதை எழுதியிருக்கிறார். இந்தக் கதைஅவரது பக்கத்துவீட்டில் வசிக்கும் சிமி என்ற சிறுமியைப் பற்றியது. ஒரு நாள் அவள் நகுலனிடம் படிக்க ஏதாவது புத்தகம் வேண்டும் என்று கேட்கிறாள். அவர் குஞ்சுண்ணி என்ற மலையாளக் கவிஞரின் புத்தகத்தைத் தருகிறார். மறுநாள் அந்தக் கவிதைகளை வாசித்து முடித்துவிட்டு அந்தச் சிறுமி ஒரு கவிதை எழுதிக் கொண்டு வருகிறாள் “சிமி குமி உமிக்கரி” என்ற அந்தக் கவிதையை வாசித்துச் …

மகிழ் ஆதனின் கவிதைகள் Read More »

கறை படிந்த உறவு.

ராஜீந்தர் சிங் பேதி (Rajinder Singh Bedi) உருது மொழியின் முக்கிய எழுத்தாளர். பேதியின் நாவல் மற்றும் சிறுகதைகள் தமிழில் வெளியாகியுள்ளன. உருதுக் கதைகள் என்ற சிறுகதைத்தொகுப்பில் உங்கள் துயரை எனக்குத் தாருங்கள் என்று ஒரு கதையிருக்கிறது மிக அற்புதமான கதையது. ராஜீந்தர் சிங் பேதியின் பொலிவு இழந்த போர்வை நாவலை சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது. இந்தி சினிமாவில் அவரது பங்களிப்பு பற்றிச் சதத் ஹசன் மண்டோ விரிவாக எழுதியிருக்கிறார். ஒரு கட்டுரையில் அசோகமித்ரனும் ராஜீந்தர் சிங் …

கறை படிந்த உறவு. Read More »

தலைகீழ் அருவி

புதிய சிறுகதை “குற்றாலத்துக்குப் போவமா“ என்று சங்கரன் கேட்டபோது அவர்கள் டீக்கடையில் அமர்ந்திருந்தார்கள். சங்கரனை மறுப்பது போல மதன் தலையை அசைத்தபடியே சொன்னான் “அருவியில் இப்போ ஒரு சொட்டுத் தண்ணி கூட இருக்காது. “ “அது தான் நமக்கு வேணும்“ “மொட்டைப்பாறையைப் பாக்க அவ்வளவு தூரம் போகணுமா“ “சீசன்ல குளிக்க நிறையத் தடவை போயிருக்கோம்லே . இப்போ ஒரு தடவை மொட்டைப் பாறையைப் பாத்துட்டு வருவோம்“ “அதுல என்னடா இருக்கு“ என்று கேட்டான் கேசவன் “உனக்குச் சொன்னா …

தலைகீழ் அருவி Read More »