இலக்கியம்

கைகளின் மாயம்

Glass 1958ம் ஆண்டு வெளியான டச்சு ஆவணப்படமாகும். இயக்குநரும் தயாரிப்பாளருமான பெர்ட் ஹான்ஸ்ட்ராவின் இந்தப் படம் 1959 இல் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. சர்வதேச அளவில் நடைபெறும் சினிமா பயிலரங்குகளில் தவறாமல் இப்படம் இடம்பெறுகிறது. இதை ஒரு பாடமாகவே மாணவர்கள் பயிலுகிறார்கள். 60 ஆண்டுகளைக் கடந்த போதும் இந்தப் படத்தின் தனித்துவமும் ஈர்ப்பும் மறையவேயில்லை. நெதர்லாந்தில் உள்ள கண்ணாடித் தொழிற்சாலையினைப் படமாக்கியிருக்கிறார்கள். கண்ணாடிப் பாட்டில்களை எப்படிக் கையால் தயாரிக்கிறார்கள் என்பது வியப்பளிக்கிறது. படத்தின் தனித்துவம் …

கைகளின் மாயம் Read More »

வாக்கியங்களின் சாலை

– வாசிப்பனுபவம் முனைவர் ப. சரவணன், மதுரை        உலக மொழிகளுள் எழுதப்பட்ட எந்த வகையான இலக்கியமானாலும் அது மனிதனின் அகமனவோட்டத்தை நிச்சயமாகக் காட்சிப்படுத்தத்தான் செய்யும். அந்த இலக்கியத்தைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரும் அந்த மனவோட்டங்களுள் ஏதாவது ஒன்றைத் தன் வாழ்வில் தனக்கு நிகழ்ந்த அனுபவத்தோடு பொருத்திப் பார்ப்பார். அப்போது அந்த இலக்கியப் படைப்பு அவருக்கு நெருக்கமானதாக அமைந்துவிடும். சில வாசகருக்குத் தன்னனுபவத்தோடு இலக்கியம் முன்வைக்கும் மனவோட்டத்தைப் பொருத்திப் பார்ப்பதில் பயிற்சி இருக்காது. அந்தப் பயிற்சியை அளிக்கும் …

வாக்கியங்களின் சாலை Read More »

மன்னரின் மூக்குக் கண்ணாடி

The Last Emperor படத்தில் சீனாவின் கடைசி அரசர், புய் ஒரு அரசியல் கைதியாகவும், போர்க்குற்றவாளியாகவும் இருக்கிறார். அங்கே அவரை அடையாளம் கண்டு கொண்ட சிலர் மரியாதை செய்கிறார்கள். அது அவரை அதிகக் குற்றவுணர்வுக்கு ஆளாக்குகிறது. வீழ்ச்சியின் போது ஒரு மனிதன் தனது பழைய மரியாதையைப் பெறுவதை விலக்கவே முற்படுகிறான். ஆனால் அவனது வீழ்ச்சி தற்காலிகமானது என்பது போலவே மக்கள் பழைய மரியாதையை அளிக்க முற்படுகிறார்கள். படம் புய்  தற்கொலை செய்ய முயல்வதிலிருந்து துவங்குகிறது. மன்னர்களில் தற்கொலை …

மன்னரின் மூக்குக் கண்ணாடி Read More »

இரண்டும் கப்பல் தான்.

புதிய சிறுகதை சூயஸ் கால்வாயைத் தடுத்து நின்றிருந்த அந்தக் கப்பல் பிடிபட்ட திமிங்கலம் ஒன்றைப் போலிருந்தது தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்தபடியே திரையில் தெரியும் அந்தக் கப்பலைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபால் ரத்னம். மணி மூன்றைக் கடந்திருந்தது. பின்னிரவில் பாதி உறக்கத்திலிருந்து எழுந்து வந்து எதற்காக இப்படிச் சூயஸ் கால்வாயில் மாட்டிக் கொண்டிருந்த கப்பலைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என அவருக்கே புரியவில்லை. ஆனால் அந்தக் கப்பல் அவரைச் சில நாட்களாகத் தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது. அதை எப்போது மீட்பார்கள். …

இரண்டும் கப்பல் தான். Read More »

அதிர்ஷ்டத்தின் சுண்டுவிரல்

புதிய சிறுகதை டாக்டர் மோகன் தங்கையா தனது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு இரண்டாம் முறையாகப் பிள்ளையார் கோவில் தெரு வரை போய் வந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு புதிதாகத் துவங்கியிருந்த அன்பரசன் கிளினிக் வெளியே முப்பது நாற்பது பேருக்கும் மேலாகக் காத்திருந்தார்கள். மணி ஐந்தாகியிருந்த போதும் இன்னமும் டாக்டர் வரவில்லை. ஒருவேளை ராயல் ஹாஸ்பிடலில் இருப்பாரோ என்னவோ. பெட்டிக்கடையினை ஒட்டித் தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு மருத்துவமனை வெளியே காத்திருப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி என்ன அன்பரசனிடம் யாரும் …

அதிர்ஷ்டத்தின் சுண்டுவிரல் Read More »

டால்ஸ்டாயின் ஒவியம்

டால்ஸ்டாயின் உருவச்சிலையை முதன்முறையாக வடித்தவர் அவரது மனைவி சோபியா. அவர் தான் மார்பளவு சிலை ஒன்றை செய்து கொடுத்தார். Ilya Repin என்ற புகழ்பெற்ற ஒவியர் டால்ஸ்டாயை சிறப்பான ஒவியம் தீட்டியிருக்கிறார். டால்ஸ்டாயின் புகழ்பெற்ற ஒவியங்களை வரைந்தவர் லியோனிட் பாஸ்டர்நாக். இவரே. டால்ஸ்டாயின் தொடர்களுக்குச் சித்திரம் வரைந்தவர். இவரது மகன் தான் நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் போரிஸ் பாஸ்டர்நாக். லியோனர்ட் பாஸ்டர்நாக்  1862 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி ஒடேஸாவில் ஒரு  …

டால்ஸ்டாயின் ஒவியம் Read More »

தமிழ்க் கவிதையின் இடம்.

ஆங்கிலத்தில் வெளியாகும் பெரும்பான்மையான INDIAN POETRY ANTHOLOGY களில் தமிழ்க் கவிதையே இடம்பெறுவதில்லை. அபூர்வமாக இடம்பெற்றாலும் மிக மோசமான கவிதையாக உள்ளது. அதைப் படிக்கும் வாசகன் இவ்வளவு தானா தமிழ்க் கவிதையின் தரம் என நொந்துபோவான். சமீபத்தில் அப்படி இரண்டு கவிதைத் தொகுதிகளைப் படித்தேன். இரண்டிலும் தமிழ்க் கவிதைகள் இடம்பெறவில்லை. இன்று இந்திய அளவில் தமிழின் நவீன கவிதை மிகச் சிறந்த இடத்தைக் கொண்டிருக்கிறது. தமிழில் உள்ளது போலப் புதுக்குரல்கள். புதிய மொழி, புதிய கவிதையாக்கம் வேறு …

தமிழ்க் கவிதையின் இடம். Read More »

வராத ரயில்

புதிய சிறுகதை அந்த ரயில் நிலையத்திற்கு மதுரை பாசஞ்சர்  பத்தரை மணிக்கு வந்து நிற்பது வழக்கம். சின்னஞ்சிறிய ரயில் நிலையமது. ஸ்டேஷன் மாஸ்டர் அறை புறாக்கூண்டு போல இருக்கும். அருகில் சிறிய ஸ்டோர் ரூம். அதையொட்டி கல்லால் ஆன இரண்டு பெஞ்சுகள். மூன்று தூங்குமூஞ்சி மரங்கள். ஒரு தண்ணீர்தொட்டி. அதில் எப்போதும் குடிதண்ணீர் இருக்காது. சிவப்பு ஒடு வேய்ந்த கட்டிடமது. சிவமணியை அழைத்துக் கொண்டு கிழவி அந்த ரயில் நிலையத்திற்கு வந்திருந்தாள். அவளை விட்டால் சிவமணிக்கு வேறு …

வராத ரயில் Read More »

இரவின் சிறுபாடல்

புதிய சிறுகதை கடைசிப் பஸ்ஸைத் தவறவிட்டிருந்தான் ரகுபதி. வேலை தேடிச் சுற்றியலைகிறவன் சரியான நேரத்திற்கு வீட்டிற்குப் போய் என்ன ஆகப்போகிறது என்ற அவனது நினைப்பு தான் பேருந்தைத் தவறவிட முக்கியக் காரணம். இனி காலை ஐந்தரை மணிக்கு தான் அவனது கிராமத்திற்குச் செல்லும் பேருந்து வரும். அதுவரை இந்தப் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டியது தான். என்ன செய்வது எனத் தெரியவில்லை. நேரத்தை கழிக்க வேண்டும். நெருக்கடியான சூழலில் காலம் நீண்டுபோய்விடக்கூடியது. அன்றைக்கும் அப்படித்தான். இப்போது தான் …

இரவின் சிறுபாடல் Read More »

இந்திய இலக்கியத்தின் முகம்

.ரஷ்ய இலக்கியங்களையும் உலகின் சிறந்த படைப்புகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் நீங்கள் ஏன் இந்திய இலக்கியங்களை அறிமுகம் செய்யவில்லை என்று நர்மதா என்ற இளம் வாசகி மின்னஞ்சலில் கேட்டிருந்தார். நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் சாகித்ய அகாதமி மூலம் நிறைய இந்திய நாவல்கள், சிறுகதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு மலிவு விலையில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மிகச்சிறந்த சில நாவல்களுக்கு ஒரு விமர்சனம் கூட வெளியானதில்லை என்பது வருத்தமான விஷயமே என் கல்லூரி நாட்களில் எந்த எழுத்தாளரைச் சந்திக்கச் சென்றாலும் …

இந்திய இலக்கியத்தின் முகம் Read More »