ரிவேரா

மெக்சிகோவின் தலைசிறந்த ஓவியர் டீகோ ரிவேரா. டெட்ராயிட் நகரிலுள்ள ம்யூசியத்தில் ரிவேரா வரைந்த மிகப்பெரிய சுவரோவியத்தைக் கண்டிருக்கிறேன். மறக்க முடியாத ஓவியமது, அவரது வாழ்க்கையையும் ஓவியங்களையும் புரிந்து கொள்வதற்கு எளிய அறிமுக நூலாக உள்ளது ஜேநெட் மற்றும் ஜோனாஹ்வின்ட்டர் எழுதிய டீகோ ரிவேரா. நிவேதா இதைத் தமிழாக்கம் செய்திருக்கிறார். இரட்டைபிள்ளைகளில்  ஒருவராகப் பிறந்த ரிவேரா தனது சகோதரன் நோயினால் இறந்துவிடவே   அந்தோனியா என்ற பூர்வகுடி இந்தியப் பெண் பொறுப்பில் மலைகிராமத்தில் வளர்க்கபடுகிறார். அந்த வாழ்க்கை அவருக்குள் எப்படி …

ரிவேரா Read More »

ஞானக்கூத்தன்

கவிஞர் ஞானக்கூத்தனின் அபூர்வமான  புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் இன்று பார்த்தேன். சில நாட்களுக்கு முன்பு கவிஞர் தேவதச்சனோடு பேசிக் கொண்டிருக்கையில் ஞானக்கூத்தனின் மறைவை தன்னால் இன்னமும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிக் கொண்டிருந்தார். ஞானக்கூத்தனின் புன்னகை வசீகரமானது.  பெரும்பான்மை புகைப்படங்களில் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் அவரது இளமையின் புன்னகையை அடையாளப்படுத்துகிறது. நன்றி https://www.gnanakoothan.com/

இனவரைவியலாளர்

ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் தமிழில் : ஷங்கர்ராமசுப்ரமணியன் அது டெக்சாசில் நடந்ததாக எனக்குச் சொல்லப்பட்டது. ஆனால் இன்னொரு மாநிலத்தில் நடந்த சம்பவம் அது. அந்தச்சம்பவத்தில் ஒரேயொரு முதன்மைப் பாத்திரம்தான் (ஒவ்வொரு கதையிலும் ஆயிரக்கணக்கான முதன்மைப் பாத்திரங்கள், தெரிந்தும் தெரியாமலும் உயிருடனும் இறந்தும் இருக்கத்தானே செய்கிறார்கள்). அந்த மனிதனின் பெயர், ப்ரெட் முர்டாக் என்று கருதுகிறேன். அவன் அமெரிக்கர்களைப் போலவே உயரமானவன்; அவனது முடி பொன்னிறமும் அல்ல, கருப்பும் அல்ல, அவனது தோற்றம் கூர்மையானது, அவன் மிகவும் குறைவாகவே …

இனவரைவியலாளர் Read More »

வாழ்த்துகள்

சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் One Story Project-இன் ஒரு பகுதியாக எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜின் தர்மரதம் கதை தேர்வு செய்யப்பட்டு மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள் சித்துராஜ் பொன்ராஜின் கதைகள் புதிய கதைமொழியில் நாம் அறியாத உலகை அடையாளம் காட்டுகின்றன.  மிகத் தீவிரமான வாசகர். உலக இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர்.  சிங்கப்பூரின் வரலாற்றையும் சமகாலத்தையும் புதிய வெளிச்சத்தில் எழுதும் அவரது படைப்புகள் அங்கீகாரம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது ••

காந்தியின் நிழலில் 1 காந்தியும் அருவியும்.

காந்தியின் சீடர்களில் முக்கியமானவர் காகா காலேல்கர். தண்டி யாத்திரைக்குச் செல்லும் போது காந்தி ஒரு ஊன்றுகோலை ஊன்றியபடியே செல்லும் புகைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அந்த ஊன்றுகோல் காகா காலேல்கருடையது. அவர் தான் நெடும்பயணம் செல்லும் காந்திக்குத் தனது ஊன்றுகோலைக் கொடுத்து உதவினார். காகா காலேல்கருக்கு அந்த ஊன்றுகோல் அவரது நண்பரான கோவிந்த் பாயால் பரிசாக வழங்கப்பட்டது. நாகப் பெட்டா என்று அழைக்கப்படும் அந்த மூங்கில் கழி நெருக்கமாக முடிச்சுகள் கொண்டது. உப்பு சத்தியாகிரகத்திற்காகக் காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்ட …

காந்தியின் நிழலில் 1 காந்தியும் அருவியும். Read More »

காலச்சுவடு இதழில்

ஆகஸ்ட் மாத காலச்சுவடு இதழில் எழுத்தாளர் ஜே.டி.சாலிஞ்சர்  பற்றிய ஆவணப்படம் குறித்து கட்டுரை எழுதியிருக்கிறேன் காலச்சுவடு இதழை வாசிக்க : https://www.kalachuvadu.com ** august 1 20

மூன்று கடல் தாண்டி.

மக்கள் தொலைக்காட்சியில் தினமும் மதியம் மூன்று மணிக்குச் சிறந்த அயல்நாட்டுத் திரைப்படங்களைத் தமிழ் சப்டைட்டிலுடன்  திரையிடுகிறார்கள். புகழ்பெற்ற ரஷ்யத் திரைப்படங்கள் இதில் ஒளிபரப்பாகியுள்ளன. சில படங்கள் பலமுறை திரையிடப்படுகின்றன. அப்படி ஒளிபரப்பான Journey Beyond Three Seas திரைப்படத்தைப் பார்த்தேன். இதே படத்தை முன்பு தூர்தர்ஷன் ஒளிபரப்பு ஒன்றில் பார்த்திருக்கிறேன். இப்படம் 1957 ல் “Pardesi” என்ற பெயரில் இந்தியில் வெளியாகியிருக்கிறது. ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த குதிரை வர்த்தகரான அஃபனாசி நிகிதின் எழுதிய பயணக்குறிப்புகளை மையமாகக் கொண்டு …

மூன்று கடல் தாண்டி. Read More »

அஞ்சலி

தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளியும் அன்புமிக்க நண்பருமான எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களின் மறைவிற்கு இதயப் பூர்வமான அஞ்சலி

குறுங்கதைகளின் வழியே

இந்த ஊரடங்கு காலத்தில் 125 குறுங்கதைகள் எழுதியிருக்கிறேன். குறுங்கதை எழுதுவது பெரிய நாவல் எழுதுவதை விடவும் மிகச் சவாலானது குறுங்கதை எனும் வடிவம் இல்லாத நாடேயில்லை. அதை மிக அதிகமாக மதம் பயன்படுத்தியிருக்கிறது. கதை சொல்லாத ஞானியே இல்லை. நாட்டுப்புறக்கதைகளில் குறுங்கதை வடிவமே பிரதானமாக உள்ளது. எழுத்து மரபு உருவானபிறகு தான் குறுங்கதைகள் நீட்சியடைந்தன. நவீன இலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகள் பலரும் குறுங்கதை வடிவத்தைப் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். மெய் தேடல், தத்துவம் மிகைபுனைவு. மயா யதார்த்தம், கனவுத்தன்மை, …

குறுங்கதைகளின் வழியே Read More »

குறுங்கதை 125 கவலைகளின் குளியலறை

அந்த நகரில் கவலைகளின் குளியலறை ஒன்றிருந்தது. அது ஒரு பொதுக்குளியலறை. நாள் முழுவதும் மக்கள் அங்கே குளிக்கக் காத்திருந்தார்கள் உண்மையில் அது ஒரு நீரூற்று. அந்த நீரூற்று பொங்கி வழிந்து தாரையாகச் செல்லும் வழியினைத் தடுத்து பதினாறு குளியலறைகளை உருவாக்கியிருந்தார்கள். ஆண்களுக்கு எட்டு. பெண்களுக்கு எட்டு. கவலைகளின் குளியலறையில் மரத்தால் செய்யப்பட்ட தொட்டி ஒன்றிருந்தது. அந்த தொட்டியினுள் இறங்கிக் குளிக்க வேண்டும். குளித்து வெளியேறும் போது கவலைகள் அத்தனையும் மனதிலிருந்து நீங்கிவிடும். துவைத்த உடையைப் போலப் புதிதாக …

குறுங்கதை 125 கவலைகளின் குளியலறை Read More »