மலையாளத்தில்

அவளது வீடு என்ற எனது சிறுகதை மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. பாலக்காடு தினேஷ் கதையை மொழியாக்கம் செய்துள்ளார்

திரைநாயகன்

ஹிந்தி சினிமாவின் உச்ச நட்சத்திரமான திலீப்குமாரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்தேன். Dilip Kumar: The Substance and the Shadow என்ற நூல் யூசுப்கான் என்ற பெஷாவரைச் சேர்ந்த இளைஞன் திலீப்குமார் என்ற நட்சத்திரமாக உருவான கதையை மிக அழகாகப் பதிவு செய்துள்ளது. சினிமாவோடு எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு குடும்பத்திலிருந்து உருவானவர் திலீப்குமார். அவர் சினிமாவில் நடிக்கிற விஷயம் அவரது தந்தைக்குக் கூடத் தெரியாது. போஸ்டரில் திலீப்குமாரின் படத்தைப் பார்த்தபிறகே தந்தை அது பற்றி விசாரித்து …

திரைநாயகன் Read More »

தேசாந்திரி புதிய வெளியீடுகள்

ஜுனியர் விகடனில் தொடராக வெளிவந்து வாசகர்களின் பாராட்டினைப் பெற்ற நூல் விலை ரூ 275 இன்றைய இளைஞனின் மனநிலையை அழுத்தமாகப் பதிவு செய்துள்ள  நாவல் புதிய பதிப்பாக வெளிவந்துள்ளது விலை ரூ 175 தி இந்து தமிழ் நாளிதழில் தொடராக வெளிவந்து பாராட்டினைப் பெற்ற நூல். சாலையோர புத்தகக் கடைகளில் கிடைத்த அரிய நூல்களையும், பழைய புத்தக்கடைக்காரர்களின் வாழ்க்கையும் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு விலை ரூ 250 தொடர்புக்கு தேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி …

தேசாந்திரி புதிய வெளியீடுகள் Read More »

புதிய வெளியீடுகள்

தேசாந்திரி பதிப்பகத்தின் புதிய வெளியீடுகளுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கபட்டுள்ளது. உலக இலக்கியத்தில் மிக முக்கியமான படைப்பாக கருதப்படும் தேவமலர் குறுநாவலை மீள்பதிப்பு செய்துள்ளது தேசாந்திரி. தேசாந்திரி பதிப்பகத்தின் நூல்களை ஆன்லைனில் பெறலாம் அல்லது அலுவலக முகவரியில் தொடர்பு கொண்டு பணம் செலுத்தி கூரியரில் பெறலாம்.

தேவதச்சனுக்கு விருது

பொள்ளாச்சியில் செயல்படும் கவிஞர் சிற்பி அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கி வருகிறது. 2019ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் தேவதச்சனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. தேவதச்சனுக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகள் ஜுலை 27 அன்று விருது வழங்கும் விழா பொள்ளாச்சி என்.ஜி. எம் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தேவதச்சன் கவிதைகள் குறித்து நான் உரையாற்றுகிறேன் ••••

கர்நாடகப் பயணம்

கடந்த பதினைந்து நாட்களாக கர்நாடகாவின் கூர்க்கில் இருந்தேன். விட்டு விட்டுப் பெய்யும் மழை. இதமான காற்று.    காபித்தோட்டத்தின்  நடுவே அமைந்த விடுதி. மிகவும் அமைதியானது.  பரபரப்பான நகரவாழ்விலிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டேன். குஷால் நகர் எனும் பகுதியில் 4 கி.மீ தாண்டி ‘பைலகொப்பா’ எனும் இடத்தில் அமைந்திருக்கும்  பௌத்த தங்கக் கோயிலை காணச் சென்றிருந்தேன்.  சீன ஆக்ரமிப்பு காரணமாக திபெத்தை விட்டு வெளியேறி அகதிகளாக வந்தவர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. அதில் இரண்டாவது பெரிய திபெத்திய …

கர்நாடகப் பயணம் Read More »

லிவ் உல்மான்.

Liv & Ingmar என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன் திரைப்பட நடிகை லிவ் உல்மானைக்(Liv Ullmann)காதலித்து அவருடன் வாழ்ந்தார் இயக்குநர் இங்மர் பெர்க்மென். அவரது படங்களில் முக்கிய வேஷங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் லிவ் உல்மான். தங்களின் திருமண உறவு மற்றும் தீவு வாழ்க்கை, பிரிவு, பெர்க்மெனை இறுதிக்காலத்தில் மறுபடி சந்தித்தது. அவரது மரணத்திற்குப் பிறகு அந்தத் தீவிற்குத் திரும்பப் போன நினைவுகள் என்று தன்து வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை இந்த ஆவணப்படத்தில் விவரித்திருக்கிறார் லிவ் உல்மான். இத்தனை …

லிவ் உல்மான். Read More »

வாழ்த்துகள்

வால் கவிதைத்தொகுப்பிற்காக  யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ள கவிஞர் சபரிநாதனுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகள்.

கிராஸ்தமியின் நாய்

பீட்டர் புரூகல் வரைந்த “தி ஹண்டர்ஸ் இன் தி ஸ்னோ,” உலகப்புகழ் பெற்ற ஓவியம். இந்த ஓவியத்தின் தனிச்சிறப்பு வேட்டைக்காரர்கள் வீடு திரும்பும் பனிக்காலக் காட்சியை மிகத்துல்லியமாகப் புரூகல் வரைந்திருப்பதே. களைப்புடன் வீடு திரும்பும் வேட்டைக்காரர்கள் ஒரு புறம், மறுபுறம் தொலைதூரப் பனி மலை. அதன் அடிவாரக் கிராமத்துச் சிறுவர்களின் விளையாட்டு. விவசாயிகளின் வேலைகள். மரக்கிளையில் அமர்ந்துள்ள காகம். மூன்று வேட்டைக்காரர்களும் சோர்வடைந்து வீடு திரும்புகிறார்கள். அவர்களில் ஒருவரிடம் வேட்டையாடிய நரி காணப்படுகிறது. நாய்களும் சோர்ந்திருக்கின்றன. நிக்கலாஸ் …

கிராஸ்தமியின் நாய் Read More »

விண்ணாளும் பெண்கள்.

புதிய ரூ.2,000 நோட்டில் மங்கள்யான் படம் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்திய விண்வெளி சரித்திரத்தில் மங்கள்யானுக்கு தனியிடம் உண்டு. மங்கள்யான் என்பது செவ்வாய் கோளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் செலுத்தப்பட்ட ஆளில்லாத விண்கலம் ஆகும். இவ்விண்கலம் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாய்க் கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது. இதன் வழியே, முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்குச் செயற்கைக் கோள் ஒன்றை வெற்றிகரமாக அனுப்பிய முதலாவது நாடு என்ற பெருமை இந்தியாவிற்குக் கிடைத்தது. மங்கள்யானை வடிவமைத்து, தயாரிக்க இந்தியா …

விண்ணாளும் பெண்கள். Read More »