உலகைப் படம்பிடித்தல்.

அக்னேஸ் வர்தா பிரெஞ்சு சினிமா இயக்குனர்களில் முக்கியமானவர் . உலக அளவில் புகழ்பெற்ற பெண் இயக்குனர். பெல்ஜியத்தில் பிறந்த இவர்  பெண்ணிய சினிமாவின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். சிறந்த புகைப்படக்கலைஞரும் கலை வரலாற்று ஆய்வாளருமான இவர் சோர்போன் பல்கலைகழகத்திலிருந்து இலக்கியம் மற்றும் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். வார்தா தனது வாழ்க்கையை ஒரு புகைப்படக்கலைஞராகவே துவக்கினார்.  கேமிராவை ஒரு பேனாவை போல சுதந்திரமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனையை பின்பற்றியவர் வார்தா.  இவரது திரைப்படங்கள் பரிசோதனை படங்களாகக் கருதப்படுகின்றன. …

உலகைப் படம்பிடித்தல். Read More »

பேரலையின் உயரம்

ஜப்பானின் புகழ்பெற்ற ஒவியரான ஹொக்குசாய் பற்றி இரண்டு படங்களைப் பார்த்தேன். ஒன்று ஆவணப்படம். மற்றொன்று திரைப்படம். Edo Porn என்ற திரைப்படம் Kaneto Shindo இயக்கத்தில் 1981ல் வெளியாகியிருக்கிறது. இப்படம் ஹொக்குசாயின் வாழ்க்கை மற்றும் காதலைப் பேசுகிறது. நிர்வாணக்காட்சிகள் அதிகமுள்ளதால் இப்படத்தைச் சில நாடுகள் திரையிட அனுமதிக்கவேயில்லை BBC தயாரிப்பான Old Man crazy to Paint ஆவணப்படம் ஹொக்குசாய் ஒவியங்களின் சிறப்புகளையும். அவரது தனித்துவத்தையும் விளக்குகிறது. 1760 ல் டோக்கியோவில் பிறந்த ஹொக்குசாய் மரச்செதுக்கு ஒவியராகப் …

பேரலையின் உயரம் Read More »

மோட்சமென்பது

Understanding Moksha என்ற ஆவணப்படத்தை இணையத்தில் பார்த்தேன். சமீர் குமார் இயக்கியது. காசியில் எடுக்கபட்ட மிகச்சிறந்த படமது.  இசையும் படத்தொகுப்பும் ஒளிப்பதிவும் அபாரம். படம் காசியின் ஊடாக மெய்தேடலை முன்வைக்கிறது. குறிப்பாக மோட்சம் என்பதை புரிந்து கொள்வதற்கான வழிகாட்டுதலை மேற்கொள்கிறது. பனிகாலத்தின் காசியை காட்சிகளாக பார்க்கையில் நினைவுகள் பீறிடுகின்றன. இந்த பனிக்குள் நானும் அலைந்து திரிந்திருக்கிறேன். காசி எனக்கு மிகவும் விருப்பமான ஊர். காசியின் தொன்மை பற்றி ஒரு பேராசிரியர் பேசுகிறார். அப்போது காசி ஒரு அறிவு …

மோட்சமென்பது Read More »

பிரமிள் படைப்புகள்

கவிஞர் பிரமிளின் நெருக்கமான நண்பர் கால.சுப்ரமணியம் .   பிரமிள் மறைவிற்கு பின்பு அவரது கையெழுத்துபிரதிகள். நூல்களை காப்பாற்றி ஆவணப்படுத்தி வருபவர். தற்போது தனது லயம் பதிப்பகம் மூலம் பிரமிளின் மொத்த படைப்புகளையும்  ஒருசேர வெளியிடுகிறார். மிக அரிய முயற்சி.  நாம் அனைவரும் இதற்கு உறுதுணை அளிக்க வேண்டும் •• லயம் – பிரமிள் அறக்கட்டளை வெளியீடாக 2018 ஜூன் மாத இறுதிக்குள் வெளிவரவுள்ள பிரமிளின் ஒட்டுமொத்த எழுத்துக்களின் தொகுதிகள் ————————————————————————- பிரமிள் படைப்புகள் (பதிப்பு : கால …

பிரமிள் படைப்புகள் Read More »

புதிய சிறுகதை – மீறல்

சமீபத்தில் எழுதிய புதிய சிறுகதை. அச்சில் வராதது. •• மீறல் சுகந்தி பேருந்தை விட்டு இறங்கிய போது கோயம்பேட்டில் லேசான தூறலாக இருந்தது. இரவில் நல்ல மழை பெய்திருக்க வேண்டும். சாரலோடு ஒரு ஆட்டோ பிடித்துத் தனது தோழி கல்பனாவின் அறையைத் தேடிப் போனாள். கல்பனாவின் கணவன் துபாய் சென்றபிறகு அவள் வீட்டை காலி செய்துவிட்டு தன்னோடு வேலை பார்க்கும் மிதிலாவின் அபார்ட்மெண்டிற்கு மாறி விட்டாள். பெங்களுரில் இரவு புறப்பட்ட போது போனின் சார்ஜ் குறைந்து கொண்டுவந்தது. …

புதிய சிறுகதை – மீறல் Read More »

டோக்கியோ செல்லும் ரயில்.

ஜப்பானின் புகழ்பெற்ற இயக்குனரான யசுஜிரோ ஒசு இயக்கிய டோக்கியோ ஸ்டோரி படத்தை எப்போது பார்த்தாலும் மனது கனத்துவிடுகிறது. அதன்பிறகு சில நாட்களுக்கு வேறு படம் எதையும் பார்க்க முடியாது. டோக்கியோ ஸ்டோரி திரையில் உருவான காவியம். ஒசு  ஜப்பானியர்களின் ஆன்மாவை அறிந்தவர். அவரது சினிமா பௌத்த சாரத்தைக் கொண்டது. காத்திருப்பும் நிதானமும் தனிமையும் பிரிவும் என வாழ்வின் நுண்மையான தருணங்களை அடையாளம் காட்டியவர் ஒசு . அவரது திரைமொழி மற்ற ஜப்பானிய இயக்குனர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. …

டோக்கியோ செல்லும் ரயில். Read More »

கவிதையின் கையசைப்பு

விகடன் தடம் இதழில் சமகால உலகக் கவிதைகள் குறித்த புதிய பத்தி ஒன்றை துவங்கியுள்ளேன் கவிதையின் கையசைப்பு என்ற அந்தப் பத்தி இந்த இதழில் துவங்கியுள்ளது ஜப்பானின் புகழ்பெற்ற கவிஞன் டகுபுகு பற்றிய அறிமுகம்.

சிறுநாவல்கள்

நண்பர் வேலூர் லிங்கம் சிறந்த வாசிப்பாளர். தான் வாசித்த நூல்களைப் பற்றி அடிக்கடி தொலைபேசியில் பேசி மகிழ்வார். இன்று காலை பேசிக்கொண்டிருக்கும் தடிதடியாக ஆயிரம் பக்கங்களுக்கு மேலுள்ள மொழியாக்க நாவல்களைப் பலராலும் படிக்க முடியவில்லை. நூறு இருநூறு பக்கங்களுக்குள் உள்ள சிறிய வெளிநாட்டு நாவல்கள் நிறைய உள்ளன. அவற்றைப் பற்றி நீங்கள்  விரிவாக கட்டுரைகள் எழுதலாமே எனச் சொன்னார் மறுவாசிப்பு செய்துவிட்டு அவசியம் எழுதுகிறேன் என்றேன். அதற்கு முன்னதாக வாசிக்க வேண்டிய சிறுநாவல்களின் பட்டியலை வெளியிடுங்கள். அது …

சிறுநாவல்கள் Read More »

பெற்றோர்களுக்கு

இன்று காலை எனது மெயிலில் இந்தச் செய்தியை  ஒரு நண்பர் பகிர்ந்திருந்தார். இணையத்தில்  வெளியாகியுள்ள இச்செய்தி சிங்கப்பூரிலுள்ள ஒரு பள்ளி முதல்வர் எழுதியது. SSLC தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள சூழலில் தமிழகப் பெற்றோர்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தியிது

பாவண்ணன் பாராட்டு விழா

நண்பரும் தமிழின் சிறந்த எழுத்தாளருமான பாவண்ணனைக்  கொண்டாடும் விதமாக மே 26 சனிக்கிழமை முழுநாள் கருத்தரங்கம் சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பாவண்ணன் சிறுகதைகள். நாவல்கள், மொழிபெயர்ப்புகள் குறித்து விரிவான உரைகள் இடம்பெறவுள்ளன. நிகழ்வை அமெரிக்காவைச் சேர்ந்த p.k சிவக்குமார், மதுரை வெற்றிவேல், பெங்களுர் மகாலிங்கம் போன்ற நண்பர்கள் ஒருங்கிணைந்து நடத்துகிறார்கள். பாவண்ணனின் சிறுகதைகள் தனித்துவமிக்கவை. அவரது சிறுகதை தொகுப்பு சுஜாதா விருது பெற்றபோது அது குறித்து விரிவாக நான் உரையாற்றியிருக்கிறேன். எனது இல்லத் திருமணம் …

பாவண்ணன் பாராட்டு விழா Read More »