உனக்கு 34 வயதாகிறது

– சிறுகதை “உனக்கு 34 வயசாச்சி, நினைவிருக்கில்லே“ என்று அப்பா அவளிடம் கேட்டபோது சுகந்தி அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள். சற்று ஆத்திரத்துடன் தலையைத் திருப்பி அப்பாவை பார்த்து முறைத்தபடியே அதுக்கு என்ன என்று கேட்டாள். அப்பா பேப்பர் படிப்பது போலத் தலைகவிழ்ந்து உட்கார்ந்திருந்தார். அது ஒரு தந்திரம், சீண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் செயல். அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்பதால் அப்பாவோடு சண்டை போட அவளுக்கு விருப்பமில்லை, ஒய்வு நாளாக இருந்தால் நிச்சயம் இது சண்டையில் தான் போய் முடிந்திருக்கும். …

உனக்கு 34 வயதாகிறது Read More »

காதலின் சங்கீதம்

வாங் கார் வாயின் IN THE MOOD FOR LOVE படத்தில் இடம் பெற்றுள்ள Yumeji’s theme கேட்டிருக்கிறீர்களா. காதலைக் கொண்டாடும் மிகச்சிறந்த பின்னணி இசைக் கோர்வை. மனம் சலித்துப்போகும் நேரமெல்லாம் இதை திரும்பத் திரும்ப கேட்கிறேன். வாங் கார் வாயின் “IN THE MOOD FOR LOVE ஆசிய சினிமாவின் சாதனை. ஹாங்காங்கில் 1960களில் நடைபெறுகிற மாறுபட்ட காதல் கதை. ஒளிப்பதிவாளர் Christopher Doyle, வண்ணங்களை பயன்படுத்தும் வித்திலும் காட்சிக்கோணங்களிலும் புதியதொரு அனுபவத்தை உருவாக்கி தருகிறார், …

காதலின் சங்கீதம் Read More »

செகாவ் வாழ்கிறார்

“இந்த பூமியில் மனிதனுக்குத் தேவை ஏழடி நிலம் தான்“ “இல்லை, சவத்திற்குத் தான் ஏழடி நிலம் வேண்டும், மனிதனுக்கு ஒட்டுமொத்த உலகமும் வேண்டியுள்ளது“ எனத் தனது குறிப்பேடு ஒன்றில் செகாவ் கூறுகிறார். இந்தக் குறிப்பை வாசிக்கும் போதெல்லாம் மனது மிகுந்த கிளர்ச்சி அடைகிறது. டால்ஸ்டாயின் புகழ்பெற்ற கதை How Much Land Does A Man Need , இதில் ஆறு அல்லது ஏழு அடி தான் ஒரு மனிதனுக்குக் கடைசியில் தேவை என்பதை டால்ஸ்டாய் வலியுறுத்துகிறார். …

செகாவ் வாழ்கிறார் Read More »

ராதிகா சாந்தவனம்

கவிஞர் முத்துபழனியின் ராதிகா சாந்தவனம் படித்துக் கொண்டிருக்கிறேன். 584 பாடல்களைக் கொண்ட “ராதிகா சாந்தவனம்” சந்தியா முல்சந்தானியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “The Appeasement of Radhika” என்னும் நூலாகப் பென்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இதன் சில கவிதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன, அவற்றை இணையத்திலும் சிற்றிதழ்களிலும் வாசித்திருக்கிறேன். ஆனால் முழு நூலும் மொழியாக்கம் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. முத்துப்பழனி (1730-1790) தஞ்சையை ஆண்ட பிரதாபசிங்க மன்னரின் அரண்மனையில் தேவதாசியாக இருந்தவர். இவர் தெலுங்கில் எழுதிய ‘ராதிகா சாந்தவனம்’ ஒரு சிருங்காரக் …

ராதிகா சாந்தவனம் Read More »

இணையத்தில் தமிழ்

அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் ஒருவர்  தனது குழந்தைகள் தமிழ் கற்பதற்கும், தமிழ் இலக்கியம் சார்ந்த முக்கிய இணையதளங்கள், மின்புத்தகங்கள் குறித்தும் தகவல் கேட்டிருந்தார். அவருக்கு அனுப்பிய தகவல்களை இங்கேயும் பகிர்ந்துள்ளேள் தமிழ் கற்க University of Pennsylvania’s Website for Learning and Teaching Tamil https://ccat.sas.upenn.edu/plc/tamilweb/ தமிழ் கற்போம் https://www.youtube.com/playlist?list=PL0F1C7C9E9E75626E https://www.youtube.com/playlist?list=PL41DA461A06758121 https://www.southasia.sas.upenn.edu/tamil/les.html https://www.digitaldialects.com/Tamil.htm தமிழ் கற்போம் மென்பொருள் https://ccat.sas.upenn.edu/plc/tamilweb/software/tamila2z.html தமிழ் கற்போம் புத்தகம் www.tamilvu.org/coresite/download/ABC_Tamil.pdf நல்ல தமிழ் அறிவோம் https://www.youtube.com/playlist?list=PL47kBp0-hhovn0kvUtibNQq2eotokcGsf *** குழந்தைகள் கதைகள் …

இணையத்தில் தமிழ் Read More »

வாழ்த்துகள் மணிகண்டன்

கவிஞரும் தீவிர இணையச் செயல்பாட்டாளருமான வா.மணிகண்டன் பெங்களூரு வாசகர் சந்திப்பில் தொடர்ச்சியாகச் சிறுகதைகளை முன்வைத்துக் கூட்டங்களை நடத்திவருகிறார். இந்த முயற்சிக்கு உறுதுணையாக நான் தொகுத்த நூறு சிறந்த சிறுகதைகள் நூலில் உள்ள கதைகளைத் தேர்வு செய்து விவாதித்து வருகிறார்கள். 100 சிறந்த சிறுகதைகள் நூலை உருவாக்கும் போது இப்படியான செயல்பாடுகளுக்குத் துணையாக இத் தொகுப்பு அமைய வேண்டும் என்பதே எனது முக்கிய விருப்பமாக இருந்தது அதைச் சாத்தியப்படுத்தியிருக்கும் மணிகண்டனுக்கு எனது மனம் நிரம்பிய வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் …

வாழ்த்துகள் மணிகண்டன் Read More »

கலையில் சுழலும் வாழ்க்கை

எஸ்.ராவின் சஞ்சாரம்:  விமர்சனம் – ஏக்நாத் வாழ்க்கை மட்டுமே எல்லாமுமானதாக இருக்கிறது. திசைகளாகவும் காற் றாகவும் மரமாகவும் செடியாகவும் அது மட்டுமே எங்கெங்கும் நிலை கொண் டிருக்கிறது. விரிகிற சிறகுகளை அசைக்கிற பறவையின் ஆனந்தத்தையும் ஒடிந்த சிறகோடு உயிருக்குப் போராடும் அவஸ்தையையும் வாழ்க்கை தந்து கொண்டே இருக்கிறது. அது தரும் மகிழ்ச்சியில் அல்லது அதிர்ச்சியில் நாம் இழுபட்டுக் கொண்டிருக்கிறோம். அதன் பாய்ச்சலில் நீந்தி ஆக வேண்டிய கட் டாயம் நீச்சல் தெரியாதவனுக்கும் இருப்பது துரதிர்ஷ்டம்தான். அந்த துரதிர் …

கலையில் சுழலும் வாழ்க்கை Read More »

ஒளிரும் நினைவுகள்

கும்பகோணத்தில் பிறந்த வளர்ந்த நண்பர்கள் தங்களின் ஊரைப் பற்றியும் அங்கு வாழ்ந்து மறைந்த கலை இலக்கிய ஆளுமைகள் குறித்தும், காவிரி பற்றியும், ஊரின் முக்கிய கோவில்கள்,  விழாக்கள்,  இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள், நூலகங்கள். உணவகங்கள்  பற்றியும் சொல்லித்தீராத நினைவுகளைக் கொண்டிருக்கிறார்கள். எல்லாத் தருணங்களிலும் இவை குறித்து உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள் தேனுகாவைக் கும்பகோணத்தில் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவர் கும்பகோணம் குறித்துப் புதிது புதிதாக விஷயங்கள் சொல்லிக் கொண்டேயிருப்பார். தேனுகா அபூர்வமான கலைஞர். இசையையும் ஒவியத்தையும் …

ஒளிரும் நினைவுகள் Read More »

சிரிக்கும் வகுப்பறை

– நூல் விமர்சனம். மதுரை சரவணன். கட்டாய இலவச கல்வி சட்டம் தண்டனை அற்ற வகுப்பறையை உறுதி செய்கின்றது. இருப்பினும் ஆங்காங்கே பள்ளிகளில் மாணவர்கள் தண்டிக்கப்படுவது வாடிக்கையாகி கொண்டு தான் இருக்கின்றது. தேர்வு, அதன் பின் ஒளிந்துள்ள வெற்றி , இவற்றிற்கு இடையேயான போராட்டத்தில் தண்டனை நிச்சயமானதாகிப் போகின்றது.இந்த தண்டனை, மாணவர்களை எப்படி துரத்துகின்றது என்பதை எஸ்.ராமகிருஷ்ணன் தனது சிரிக்கும் வகுப்பறை என்ற நாவலில்  மிக அற்புதமான நாவலை படைத்துள்ளார். தண்டனை முறைகள் குறித்து பேசும் புத்தகங்கள் …

சிரிக்கும் வகுப்பறை Read More »