பலவந்தத்தின் பிரயோகம்

சில நாட்களுக்கு முன்பாக இணையத்தில் வெளியாகியிருந்த எனது விருப்பத்தின் படி வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் சிறுகதையை தமிழாக்கம் செய்து அனுப்பியுள்ளார் ரமேஷ் கல்யாண், அவருக்கு  என் மனம் நிறைந்த பாராட்டுகள் ••• பலவந்தத்தின் பிரயோகம் வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் தமிழில் : ரமேஷ் கல்யாண் அவர்களெல்லாம் என்னிடம் வந்த புது நோயாளிகள். என்னிடம் இருந்ததெல்லாம் ஆல்சன் என்ற பெயர் மட்டுமே.. ‘தயவு செய்து எவ்வளவு விரைவாக வரமுடியுமோ அவ்வளவு விரைவாக வரவும். என் மகள் மிகவும் நோயுற்றிருக்கிறாள்’ …

பலவந்தத்தின் பிரயோகம் Read More »

சித்தேஸ்வரி

ஒரு சிறந்த திரைப்படத்திற்குத் தேவை தேர்ந்த காட்சிபடிமங்கள்,  சிறந்த இசை, யதார்த்தமான நடிப்பு, மிக்குறைந்த அளவான உரையாடல் என மணிகௌல் (Mani Kaul) ஒரு நேர்காணலில் கூறுகிறார், இவரது திரைப்படங்கள் இதற்கான எடுத்துக்காட்டுகள் போலவே இருக்கின்றன அமெரிக்கப் பல்கலைகழகத்தில் சினிமாப் பேராசிரியராக பணியாற்றும் எனது நண்பர் சொர்ணவேல் மணிகௌலின் தீவிர ரசிகர், அவருடன் அமெரிக்காவில் தங்கியிருந்த போது இரவெல்லாம் மணிகௌல் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம், அவரிடமிருந்து சித்தேஸ்வரி (Siddheshwari) டாகுமெண்டரியின் டிஜிட்டல் பிரதி ஒன்றைப் பெற்றுவந்தேன், அப்படத்தை பத்துக்கும் …

சித்தேஸ்வரி Read More »

கல்கத்தாவில் ஒரு அகதி

ரித்விக் கட்டக்கின் முதல் படம் நாகரிக், (Nagarik -The Citizen) . 1952ஆம் ஆண்டு நாகரிக் தயாரிக்கப்பட்டது. ஆனால் 1977ல் தான் வெளிவந்தது, அப்போது ரித்விக் உயிருடனில்லை. காணமல் போன நாகரிக் படத்தின் மூலப்பிரதி 1977ல் தற்செயலாகக் கிடைத்து அரங்குகளில் வெளியானது, படம் மிக மெதுவாக இருந்த காரணத்தால்  மக்களிடையே பெரிய வரவேற்பு பெறவில்லை, தனது முதல்படம் வெளியானதை ரித்விக் கட்டக்  காணவேயில்லை,. ஒருவேளை இப்படம் பதேர்பாஞ்சாலிக்கு முன்பாக வெளியாகி இருந்தால் இதுவே இந்திய மாற்றுசினிமாவின் முதல்படமாக …

கல்கத்தாவில் ஒரு அகதி Read More »

பெயரில்லா பழங்கள்

‘பதேர் பாஞ்சாலி’ படம் கொய்யாப்பழம் பறித்த சிறுமி துர்காவை நோக்கி ஷிஜோபாபு சத்தமிடுவதிலிருந்து தான் . துவங்குகிறது, சிறுவர்கள் பழம் திருடுவதை குற்றம் என யாரும் சொல்லிவிட முடியாது, அது ஒரு வேடிக்கை, விளையாட்டு, ஆனால் துர்கா கொய்யபழத்தைத் திருடியது இழந்து  போன தங்கள் உரிமையை மீட்பதாகவே ஷிஜோபாபு நினைக்கிறாள், அதனால் தான் அவள் கூச்சலிடுகிறாள் உண்மையில் ஹரிஹரின் குடும்பத்துக்குச் சொந்தமாக கொய்யாமரங்களும் மாமரங்களும் தென்னைகளும் கொண்ட ஒரு தோப்பு இருந்தது. அது முன்னூறு  ரூபாய் கடன் …

பெயரில்லா பழங்கள் Read More »

சிந்துபாத்தின் மனைவி நாடகம்

சென்னை கேகேநகரில் உள்ள தியேட்டர் லேப் அரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கும், நாளை மாலையும் நான் எழுதிய சிந்துபாத்தின் மனைவி என்ற நாடகம் நடைபெற உள்ளது, இதனை இயக்கியிருப்பவர் ஜெயராவ், தியேட்டர் லேப் குழுவினர் இந்த நாடகநிகழ்வில் பங்கேற்கிறார்கள், நண்பர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் இடம்                Theatre lab 6, Mahaveer Complex, Munusamy Salai, K. K. Nagar .Chennai, (Near Ponicherry Guest House. ) Ph.9688858882 …

சிந்துபாத்தின் மனைவி நாடகம் Read More »

முறிந்த கரண்டி

ஒரு நல்ல சிறுகதை என்பது, குரலை உயர்த்தாமல், அலங்காரம் எதுவுமின்றி, இயல்பாக, எளிமையான வர்ணிப்பின் வழியாக, கச்சிதமான கதாபாத்திர உருவாக்கத்தினால் வாசிப்பவனுக்கு ஆழமான மனஎழுச்சியைத் தரக்கூடியதாக இருக்கும், வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் எழுதிய The use of force.  அது போன்ற ஒரு சிறந்த சிறுகதை, அமெரிக்காவின் முக்கியக் கவிஞரான வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் (William Carlos Williams) ஒரு மருத்துவர், அதிலும் குழந்தைகள் மருத்துவர், எழுத்தாளராகச் செயல்படும் போது மருத்துவனைப் போல நடந்து கொள்கிறேன், மருத்துவராக இருக்கும் …

முறிந்த கரண்டி Read More »

நன்றி

மதுரையில் நடைபெற்ற எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது, தொடர்ந்த மழையின் ஊடாகவும் அரங்கம் நிரம்பியிருந்தது, இந்நிகழ்வில் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்கள் பவா மற்றும் ஷைலஜாவிற்கும், புத்தகங்களை அழகாக வடிவமைத்த வம்சி பதிப்பக குழுவிற்கும், தயாரிப்பில் துணை நின்றவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் வம்சி பதிப்பகம் வெளியிட்டுள்ள குழந்தைகளுக்கான இந்த நூல்கள் அனைத்து புத்தக கடைகள், மற்றும் கண்காட்சிகளில் கிடைக்கும் புத்தகங்களின் விலை அக்கடா …

நன்றி Read More »

புதிய நாடகம்

சிந்துபாத்தின் மனைவி என்ற எனது புதிய நாடகத்தினை தியேட்டர்  லேப் குழுவின் ஜெயராவ் வருகின்ற 14 ம் தேதி இரவு 7 மணிக்கு கே.கே.நகரில் உள்ள தியேட்டர் லேப் அரங்கில் நிகழ்த்த இருக்கிறார், அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் •• இடம்                Theatre lab 6, Mahaveer Complex, Munusamy Salai, K. K. Nagar .Chennai, (Near Ponicherry Guest House. ) Ph.9688858882 நாள் : 14.09.2013. சனிக்கிழமை, நேரம் …

புதிய நாடகம் Read More »

தாயின் குரல்

காமராஜர் முதல்வராக இருந்த சமயம் அவரது அன்னை சிவகாமி அம்மையாரை ஆனந்த விகடனுக்காக எழுத்தாளர் சாவி பேட்டி கண்டிருந்தார். (2.7.1961) இணையத்தில் மறுபிரசுரம் கண்ட அந்த இணைப்பை ஒரு நண்பர் எனக்கு அனுப்பியிருந்தார், அதன் மீள்பதிவு இது ••• விருதுநகர் தெப்பக் குளம். குளத்தைச் சுற்றிலும் கடை வீதிகள். அந்த வீதிகளில் ஒன்றுக்குள்ளே பிரிந்து செல்லும் சந்துக்குள் புகுந்து சென்றால், அங்கிருந்து வேறொரு சந்து திரும்புகிறது. அப்புறம் இன்னொரு சந்து. அதற்கப்புறம் மற்றொரு சந்து. அந்த சந்துக்குள்ளேதான் …

தாயின் குரல் Read More »

குழந்தைகள் புத்தகங்கள்

சிறார்களுக்காக நான் எழுதியுள்ள சிரிக்கும் வகுப்பறை, அக்கடா, எனும் இரண்டு சிறுநாவல்கள், கிறுகிறுவானம் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Whirling Swirling Sky ,ஆலீஸீன் அற்புத உலகம் நூலின் புதிய பதிப்பு, என நான்கு புத்தகங்கள் மதுரையில் வெளியிடப்பட இருக்கின்றன நண்பர் பவா.செல்லதுரையின் வம்சி பதிப்பகம் ஏற்பாடு செய்துள்ள இந்த வெளியீட்டு விழா செப்டம்பர் 6 மாலை 6.30 மணி அளவில், மதுரை அமெரிக்கன் கல்லூரி எதிரில் உள்ள நார்த் கேட் ஹோட்டலின் அரங்கில் நடைபெற உள்ளது தோழர் …

குழந்தைகள் புத்தகங்கள் Read More »