கதை சொல்லிகள் இருக்கிறார்களா

சமீபத்தில் ஒரு பள்ளி நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன், ஒரு மாணவன் எழுந்து தமிழ்நாட்டில் கதைசொல்லி என யாராவது இருக்கிறார்களா எனக்கேட்டான், எழுத்தாளர்கள், சொற்பொழிவாளர்கள், அரசியல்வாதிகள் தனது பேச்சின் ஊடே கதை சொல்வதைக் கேட்டிருக்கிறேன், ஆங்கிலத்தில் கதைகள் சொல்லும் கதை சொல்லிகள் பலர் கோடை முகாம்களை நடத்துவதை அறிவேன், ஆனால் தமிழில் கதை சொல்வதை முழுநேர வேலையாகக் கொண்ட ஒருவரை இதுவரை நான் கண்டதேயில்லை என்று சொன்னேன், என் பதிலைக் கேட்டு அந்தச் சிறுவன் அமர்ந்துவிட்டான், ஆனால்  ஏன் அப்படி …

கதை சொல்லிகள் இருக்கிறார்களா Read More »

இயக்குனரின் நாற்காலி

கிறிஸ்தோபர் பிளம்மர் கனடாவின் மிகச்சிறந்த நாடக நடிகர், இவர் நடித்த ஷேக்ஸ்பியர் நாடகங்கள் மிகவும் பிரபலமானவை, திரையுலகிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார் , அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்புத்துறையில் உள்ள பிளம்மர் தி லாஸ்ட் ஸ்டேஷன் திரைப்படத்தில் லியோ டால்ஸ்டாயாக அற்புதமாக நடித்திருக்கிறார், இவர் நடித்த Man in the Chair நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த Feel Good Movie  என்பேன். Michael Schroeder இப்படத்தை இயக்கியுள்ளார் சினிமாவிற்காக தனது வாழ்க்கையை …

இயக்குனரின் நாற்காலி Read More »

புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே

மாலனின் சிறுகதைத் தொகுப்பை மறுபடி படித்துக் கொண்டிருந்தேன், நுட்பமாகவும், தனித்துவமிக்கதாகவும் உள்ள இவரது சிறுகதைகள் மறுவாசிப்பில் மிகவும் நெருக்கமாக இருந்தன, மாலனின் கதைகளில் வரும் மனிதர்கள் பெரும்பகுதி நடுத்தர வர்க்கம்,  அவர்களின் அக,புற பிரச்சனைகளும் அது உருவாகி வெளிப்படும் விதமும் விசித்திரமாக இருக்கின்றன, அசோகமித்ரன் காட்டிய மத்தியதர உலகம் ஒரு பக்கம், ஆதவன் காட்டிய உலகம் இன்னொரு பக்கம் என்றால் இரண்டின் சாயலுமின்றி நடுத்தர வர்க்க உலகின் திண்டாட்டங்களை, சின்னஞசிறு சந்தோஷங்களை. வெளிப்படுத்த முடியாத துக்கங்களை தனது …

புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே Read More »

நயாகரா முன்னால்

‘வாழ்விலே ஒரு முறை’ என அசோகமித்திரன் கதை ஒன்றுக்குத் தலைப்பு வைத்திருப்பார். நயாகரா அருவியின் முன்னால் நின்றபோது அந்த தலைப்புதான் நினைவிற்கு வந்து போனது இந்தியாவில் எத்தனையோ அருவிகளைக் கண்டிருக்கிறேன் என்றபோதும் நயாகராவின் முன்னால் நின்றபோது பேச்சற்றுப்போய் கண்களின் போதாமையை உணர்ந்தவனைப் போல பிரமித்து நின்றிருந்தேன். வாழ்வில் ஒரு முறை நயாகராவைப் பார்ப்பது பேறு. பலமுறை காணக் கிடைத்தவர்கள் பெரும் அதிர்ஷ்ட சாலிகள். இயற்கை எவ்வளவு விந்தையானது என்பதற்கு நயாகராவே சாட்சி. டொரண்டோவிற்கு வந்து இறங்கிய நாளே …

நயாகரா முன்னால் Read More »

WILL SPEAK WITH GANDHI

எனது காந்தியோடு பேசுவேன் சிறுகதை தனிவெளியீடாக ஐந்தாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு தமிழகம் முழுவதும் காந்தியவாதிகளால் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது, அந்த முயற்சியை மேற்கொண்ட நண்பர் மூர்த்திக்கு எனது மனம் நிறைந்த நன்றி. காந்தியோடு பேசுவேன் சிறுகதையை நண்பர் கமல் ஆங்கிலத்தில் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். ••• WILL SPEAK WITH GANDHI I had alighted at Wardha only on that morning. This is the first time I am visiting the Gandhi …

WILL SPEAK WITH GANDHI Read More »

அலிஸ் மன்றோ

இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கனடாவின் மிக முக்கிய எழுத்தாளரான அலிஸ் மன்றோவிற்குக் கிடைத்திருக்கிறது, நம்காலத்தின் மிக முக்கிய சிறுகதை ஆசிரியர் அலிஸ் மன்றோ, அவரது சில சிறுகதைகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன, நோபல் பரிசு பெறும் 13வது பெண் இவராகும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக அலிஸ் மன்றோவின் நேர்காணல் ஒன்றினை அ.முத்துலிஙகம் எடுத்திருக்கிறார், அது காலச்சுவடு இதழில் வெளியாகி உள்ளது,  உங்கள் பார்வைக்காக அதை மீள்பிரசுரம் செய்கிறேன் **** நேர்காணல்: அலிஸ் மன்றோ காத்திராப்பிரகாரம் …

அலிஸ் மன்றோ Read More »

மறைக்கப்பட்ட இந்தியா

ஜுனியர் விகடனில் தொடராக வெளிவந்த எனது இந்தியாவின் இரண்டாவது பாகம்,  மறைக்கபட்ட இந்தியா என்ற பெயரில் தனி நூலாக வெளியாகி உள்ளது, விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள இந்த நூலின் விலை ரூ 275. நவம்பரில் இந்த நூலின் அறிமுக விழா சென்னையில் நடைபெற உள்ளது •• நாளை (அக்டோபர் 7 திங்கள்கிழமை இரவு 7 மணிக்கு ) திண்டுக்கல் புத்தக கண்காட்சியில் காலம் தோறும் கதைகள் என்ற தலைப்பில் பேசுகிறேன் ••

சதி

அபர்ணா சென்னின் சதி  திரைப்படம், ஒரு ஊமைப்பெண்ணின் கதை, 1828 ம் ஆண்டு வங்காள கிராமம் ஒன்றில் கதை நடக்கிறது படத்தின் துவக்கமே வயதான கணவன் இறந்து போனதற்காக ஒரு இளம்பெண்ணை உயிரோடு தீயில் வைத்து எரிக்கும் சதியில் துவங்குகிறது, வங்காளத்தில் சதிக்கொடுமை மிகவும் மோசமாக பரவியிருந்தது, ராஜாராம் மோகன்ராயின் தொடர் போராட்டங்களே இதனை முடிவிற்குக் கொண்டுவந்தன, கதையின் மையம் கணவனுக்காக ஒரு பெண் தன் வாழ்வை அழித்துக் கொள்ள எப்படி நிர்பந்திக்கப்படுகிறாள் என்பதே. உமா, கிராமத்து …

சதி Read More »

இணைப்புகள்

சில அரிய திரைப்படங்களுக்கான இணைப்புகள் சந்தியா ராகம் Balumahendra’s Sandhya Raagam Part-1 https://youtu.be/RlSsmZKvADo https://youtu.be/PQnrU7vwnB0 Part-2 https://youtu.be/PQnrU7vwnB0 Part-3 https://youtu.be/oJXSjXq6DL8 Part-4 பூட்டாத பூட்டுகள் Poottatha Poottukkal https://youtu.be/dG8yQl3qDBE அவள் அப்படித்தான் Aval appadi thaan full movie https://youtu.be/jJR5Fl377vM பாரதி Bharathi (Full movie) https://youtu.be/YLXJUHOTh9U அம்பேத்கார் Dr. Babasaheb Ambedkar full movie tamil version https://youtu.be/OUST4I2EFCA Dr. Babasaheb Ambedkar Life [Excellent Rare Documentary] https://youtu.be/uRbmGJrkbYs அழியாத கோலங்கள் https://www.youtube.com/watch?feature=player_embedded&v=73lqDQEF6mQ …

இணைப்புகள் Read More »

இரண்டு கவிதைகள்

நண்பர் பாவண்ணன் ,கன்னடத்தில் இருந்து மிகச்சிறந்த இலக்கியப்படைப்புகளைத் தொடர்ச்சியாக தமிழாக்கம் செய்து வருகிறார், அவர் கொண்டாடப்பட வேண்டிய முக்கியத் தமிழ்படைப்பாளி, சில ஆண்டுகளுக்கு முன்பாக அவரது மொழியாக்கத்தில் வெளியாகி இருந்த சிந்தாமணி கொட்லகெரெயின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன, கவிதைகள் தரும் பரவசத்திற்காக சிந்தாமணி கொட்லகெரெயிற்கும், தேர்ந்த மொழிபெயர்ப்பினைச் செய்த பாவண்ணன் அவர்களுக்கும் மனம் நிரம்பிய பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் ••• சிந்தாமணி கொட்லகெரெயின் இரண்டு கவிதைகள் தமிழில் பாவண்ணன் 1. என் வலையில் முதலில் என் …

இரண்டு கவிதைகள் Read More »