மலேசியப்பயணம்

மலேசியாவில் நடைபெற உள்ள இலக்கிய நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நாளை இரவு மலேசியா புறப்பட்டு செல்கிறேன், 18ம்தேதி வரை கோலாலம்பூரில் தங்கியிருக்க உள்ளேன் தொடர்புக்கு பிஎம் மூர்த்தி 60192675337 நிகழ்ச்சி நடைபெறும் இடம், Dynasty Hotel, Jalan Ipoh. Kula Lumpur

எனது இந்தியா வெளியீடு

ஜுனியர் விகடன் இதழில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நான் எழுதிவரும் தொடரான எனது இந்தியாவின் முதல் நூறு கட்டுரைகள் ஒரு தொகுதியாக விகடன் பிரசுரத்தால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது, மிகச்சிறப்பான வடிவமைப்பு, நேர்த்தியான புகைப்படங்கள், ஆர்ட் பேப்பர் , 485 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் விலை ரூ355. புத்தகத் தயாரிப்பில் மிகுந்த ஈடுபாடு காட்டிய விகடன் பிரசுரத்தைச் சேர்ந்த ஆசிரியர் இரா.சரவணன், முதன்மை வடிவமைப்பாளர் ராம்குமார், முதன்மை உதவி ஆசிரியர் அன்பழகன், மற்றும் விற்பனை பிரிவு …

எனது இந்தியா வெளியீடு Read More »

யுத்தகால ரயில்

ரயில் பயணத்தைக்  கதைக்களமாகக் கொண்டு நிறையப்படங்கள் வெளிவந்துள்ளன, அந்த வரிசையில் மிக முக்கியமானதொரு படம் John Frankenheimer இயக்கிய The Train, 1964ம் ஆண்டு வெளியான கறுப்பு வெள்ளைப் படமிது, இரண்டாவது உலக யுத்த காலத்தில் புகழ்பெற்ற ஒவியங்களைக் கடத்திச் செல்லும் ஜெர்மனிய ரயில் ஒன்றினை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொள்ளபடும் தீவிர முயற்சிகளே படத்தின் கதைக்கரு, 133 நிமிஷங்கள் ஒடுகின்ற இப்படத்தில் ரயில் கிளம்பிய மறுநிமிசம் முதல், கடைசிக்காட்சி வரை நம்மால் அடுத்து என்ன நடக்குமென என்று …

யுத்தகால ரயில் Read More »

நாடக கம்பெனிகள்

சினிமாவின் வருகை மரபான தமிழ்நாடக கம்பெனிகளை எப்படி எல்லாம் பாதிப்படைய செய்தது என்பதைப் பற்றி எழுதுவதற்காக நிறைய வாசித்துக் கொண்டிருக்கிறேன், பம்மல் சம்பந்த முதலியாரின் வாழ்க்கை வரலாறு, பேசும்பட அநுபவங்கள், மற்றும் அவ்வை தி.க.சண்முகம் எழுதிய நாடக வாழ்க்கை அனுபவங்கள், நாடகக்கலை நூல், மற்றும பழைய நாடக கம்பெனியின் சிறுவெளியீடுகள், என வாசிக்க வாசிக்க  வியப்பான தகவல்கள், சுவாரஸ்யமான சம்பவங்கள் நிறைந்து கிடக்கின்றன பம்மல் சம்பந்த முதலியாரின் என் சுயசரிதை நூறு வருஷங்களுக்கு முந்திய சென்னை வாழ்க்கையை …

நாடக கம்பெனிகள் Read More »

திருத்தப்பட வேண்டியவர்கள்

சென்ற மாதம்  சென்னை பிராட்வேயில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற  அருணாசாய்ராம் தமிழிசைக்கச்சேரி கேட்கப் போயிருந்தேன், நான் அருணாசாய்ராமின் தீவிர ரசிகன், சென்னையில் அவர்களது கச்சேரி எங்கே நடந்தாலும் போய்விடுவேன், அன்றைக்கு அரங்கு நிரம்பிய கூட்டம்,  ஒரு ரசிகர் எழுந்து சாய்பாபாவை பற்றி ஒரு பாட்டுப் பாட வேண்டும் என்று சப்தமாகக் கேட்டார்,  அருணா சாய்ராம் சிரித்தபடியே பார்க்கிறேன் என்று சொன்னார், அடுத்தபாடல் பாடி முடித்தவுடன் அதே ரசிகர் எழுந்து, சாய்பாபா பாட்டு என்று உரத்துக் கத்தினார், …

திருத்தப்பட வேண்டியவர்கள் Read More »

மண்புழு

சூழலியல் சார்ந்த கருத்துகளை முதன்மைப்படுத்தி மண்புழு என்றொரு அழகிய சிற்றிதழை திருவண்ணாமலையில் செயல்படும் குக்கூ அமைப்பு துவக்கியுள்ளது குக்கூ, குழந்தைகளின் படைப்பாளுமையை உருவாக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அரிய அமைப்பாகும். மசானபு புகோகோவின் இயற்கைக்குத் திரும்பும் பாதை என்ற நூலை டாக்டர் வெ.ஜீவானந்தம் அவர்கள் மொழியாக்கம் செய்திருக்கிறார், அந்த நூலை தமிழ்நாடு பசுமை இயக்கத்துடன் இணைந்து குக்கூ விநியோகம் செய்கிறார்கள் இயற்கையைப் பாதுகாப்பது மற்றும் குழந்தைகளின் படைப்புலகம் சார்ந்த  இதழாக மண்புழு உருவாக்கபட்டுள்ளதாக  குக்கூ தெரிவிக்கிறது, முதல் …

மண்புழு Read More »

கண்டிக்கிறேன்

எழுத்தாளரும்  சமூக விமர்சகருமான நண்பர் மனுஷ்யபுத்திரன் அவர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததோடு ,அவரது எழுத்துச் செயல்பாடுகளை முடக்குவதற்காக கொலை மிரட்டல் விடுக்கும் மதவாதத் தாக்குதலை  வன்மையாகக் கண்டிக்கிறேன் சவுதி அரேபிய நாட்டில் வீட்டு வேலை செய்துவந்த  சிறுமிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதை விமர்சித்து நண்பர் மனுஷ்யபுத்திரன் எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து அவர் மீது தொடர்ந்த மிரட்டல்களை மதவாத அமைப்புகள் விடுத்துவருகின்றன, இது போன்ற கீழ்தரமான அவதூறுகள், அச்சுறுத்தல்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பொறுப்பற்ற இந்தத் …

கண்டிக்கிறேன் Read More »

அமெரிக்க இதழில்

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் இலக்கியப் பத்திரிக்கை 34thparallel.  சமீபத்திய இதழில் எனது கட்டுரை ஒன்றினை வெளியிட்டுள்ளது, இந்த இதழின் மின்பதிப்பு இணையத்தில் உள்ளது, ஆனால் இது விலை கொடுத்துப் பெற வேண்டிய இதழாகும், https://www.34thparallel.net/index.html

அவள் பிரிவு

வெ சாமிநாத சர்மா தனது மனைவியின் மரணம் ஏற்படுத்திய இழப்பில் இருந்து மீள்வதற்காக அவரைப்பற்றிய தனது நினைவுகளை உணர்ச்சிபூர்வமான கடிதங்களாக எழுதியிருக்கிறார், சர்மாஜி, தனது நண்பர்  அரு சொக்கலிங்கத்திற்கு  எழுதிய இந்தக் கடிதங்களை தொகுத்துத் தனி புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள்,  அவள் பிரிவு என்ற இந்நூலை பூங்கொடி பதிப்பகம் வெளியிட்டுள்ளது, சர்மாவின் மனைவி மங்களம் அம்மையார் குறித்து உணர்ச்சிபூர்வமான சித்திரம் ஒன்றினை அவள் பிரிவு உருவாக்குகிறது, புத்தகத்தை படித்து முடிக்கையில் மனது கனத்துப் போய்விடுகிறது, புகழ்பெற்ற எழுத்தாளர் C. …

அவள் பிரிவு Read More »

பாண்டிச்சேரியில்

நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் புதிய நாவல் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி வெளியீட்டுவிழா ஜனவரி 26ந்தேதி மாலை  5 30 மணிக்கு பாண்டிச்சேரியில் உள்ள ஜெயராம் ஓட்டலில் நடைபெற இருக்கிறது. கி.அ.சச்சிதானந்தம் தலைமையில் நடபெறவிருக்கிற நிகழ்வில் நான் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறேன் இந்த நிகழ்வில் எழுத்தாளர் தமிழவன், ந.முருகேசபாண்டியன், ழான் தெலொஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள இருக்கிறார்கள்.