புத்தக கண்காட்சியில்

கடந்த இரண்டுநாட்களில் புத்தக கண்காட்சியில் வாங்கிய சில முக்கியமான நூல்கள் தமிழர் உணவு /பக்தவசல பாரதி/காலச்சுவடு பதிப்பகம் பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள் /தமிழில் சா தேவதாஸ் /கருத்துபட்டறை பதிப்பகம் என் நண்பர் ஆத்மாநாம் /ஸ்டெல்லா புரூஸ் /விருட்சம் வெளியீடு சம்பத் கதைகள் /விருட்சம் வெளியீடு ஒர் இந்திய கிராமத்தின் கதை  /தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை/சந்தியா பதிப்பகம் மகாத்மாகாந்தி /வின்சென்ட் ஷீன் /வ உசி நூலகம் ஒநாய் குலச்சின்னம்/ ஜியாங் ரோங் /அதிர்வு பதிப்பகம் கோபி கிருஷ்ணன் படைப்புகள் /முழுத்தொகுதி …

புத்தக கண்காட்சியில் Read More »

புத்தக வெளியீட்டுவிழா

குதிரைகள் பேச மறுக்கின்றன என்ற எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பினை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டு உள்ளது, இதற்கான புத்தக வெளியீட்டுவிழா ஜனவரி 22 செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை புத்தக கண்காட்சி புன்னகை அரங்கில் நடைபெற் உள்ளது. அனைவரும் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்

டங்கனின் ஆவணப்படம்

புகழ்பெற்ற இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கிய இந்தியா பற்றிய அரிய ஆவணப்படத்தின் தொகுப்பு. மதுரைவீரன் நாடகம், ஜல்லிக்கட்டு, பழைய சினிமா ஸ்டுடியோக்கள். கிராமிய வாழ்க்கை எனத் தமிழகத்தின் அரிய பண்பாட்டுக் கூறுகளை காணும் போது வியப்பளிக்கிறது ** ELLIS R. DUNGAN COLLECTION Inside India: Village Life in Southern India https://youtu.be/vTLcxny7YSg தமிழ் திரையுலகம் பற்றி Ellis R. Dungan — Film from India https://www.youtube.com/watch?v=BgW1pnCQBmo&feature=share&list=PL42F883EB0583E77C புலி வேட்டை பற்றி Tiger …

டங்கனின் ஆவணப்படம் Read More »

திறக்கப்படாத கதவு

The Door என்ற ஹங்கேரியத் திரைப்படம் ஒன்றினைப் பார்த்தேன்,  இஸ்த்வான் ஸாபோ (István Szabó)இயக்கியது, ஸாபோ ஹங்கேரியின் மிக முக்கியமான, மூத்த தலைமுறை இயக்குனர். இவரது திரைப்படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கின்றன, இவரது மெபிஸ்டோ திரைப்படம் சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதினைப் பெற்றுள்ளது, ஸாபோவின் திரைமொழி கவித்துவமானது, புறக்கணிப்பும் அதனால் உருவாகும் அவமானமும் தான் அவரது படங்களின் மையப்பொருள், அடக்கிவைக்கபட்ட மனஉணர்ச்சிகளின் கொந்தளிப்பையும், உறவுகளின் ஊசலாட்டத்தையும் ஸாபோ மிகவும் திறமையாகக் …

திறக்கப்படாத கதவு Read More »

குதிரைகள் பேச மறுக்கின்றன

குதிரைகள் பேச மறுக்கின்றன என்ற எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டு உள்ளது, இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை புத்தகக் காட்சியில் அமைந்துள்ள புன்னகை அரங்கில் வருகின்ற 22ம் தேதி செவ்வாய்கிழமை மாலை நான்குமணிக்கு நடைபெற உள்ளது இந்த விழாவில் நேஷனல் புக் டிரஸ்ட் சார்பில் அதன் இயக்குனர் சிக்கந்தர், தமிழ் ஒருங்கிணப்பாளர் மதன்ராஜ், எழுத்தாளர்கள் டி செல்வராஜ், பவா செல்லதுரை, முத்துகிருஷ்ணன், எஸ்கேபி கருணா ஆகியோர் கலந்து கொண்டு …

குதிரைகள் பேச மறுக்கின்றன Read More »

புத்தகக் கண்காட்சியில் நேற்று

புத்தகக் கண்காட்சியில் நேற்றுமாலை காலந்தோறும் கதைகள் என்ற தலைப்பில் உரையாற்றினேன், நல்ல கூட்டம்,  கூட்டம் முடிந்து ஒரு மணி நேரம் நிறைய இளைஞர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன், புத்தக வாசிப்பு எந்த அளவு விரிவடைந்திருக்கிறது என்பதற்கு உதாரணமாக இருந்தது நேற்றைய மாலைச் சந்திப்பு கடந்த வாரத்தில் தமிழகத்தில் அகழ்வாய்வுகள் நடைபெற்ற அரிய இடங்களைப் பார்வையிட நண்பர்களுடன் ஒரு பயணம் மேற்கொண்டேன், தமிழக வரலாற்றுச் சின்னங்கள் எந்த அளவு கண்டுகொள்ளப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன என்பதைக் கண்கூடாக உணர முடிந்தது, …

புத்தகக் கண்காட்சியில் நேற்று Read More »

வாழ்க்கையின் வேஷம்

மலையாளத்தில் வெளியாகி மிகுந்த கவனம் பெற்ற கல்பற்றா நாராயணனின் நாவல், தமிழில் ஷைலஜா மொழிபெயர்ப்பில் வம்சி வெளியீடாக வெளிவர உள்ளது, சுமித்ரா என்ற அந்த நாவலுக்கு  நான் எழுதிய அறிமுக உரை ••• வாழ்க்கையின் வேஷம்      –  எஸ் ராமகிருஷ்ணன் மனிதர்களின் வாழ்க்கை மரணத்துடன் முடிந்து விடுவதில்லை போலும், மரணம் உடலின் இருப்பைத் தான் முடித்துவைக்கிறது, சாவிற்கு அப்புறம் மனிதர்கள் நினைவுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், எந்த நினைவுகளை விலக்கியும், வெறுத்தும் ஒதுக்கி வைத்தார்களோ அந்த நினைவுகளில் ஒன்றாக …

வாழ்க்கையின் வேஷம் Read More »

நான்கு புதிய நூல்கள்

உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள  எனது நான்கு புதிய நூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் உள்ள உயிர்மை புத்தக கடையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன மழை மான்-  எனது புதிய சிறுகதைகளின் தொகுப்பு பிகாசோவின் கோடுகள்- உலகப்புகழ் பெற்ற ஒவியங்கள், ஒவியர்கள் குறித்த கட்டுரைகள் ரயிலேறிய கிராமம் – உலக அளவில் கவனம்  பெற்ற முக்கியமான புத்தகங்களைப் பற்றி அறிமுக நூல் பறவைக்கோணம்  – உயிர்மை இதழில் தொடராக வெளிவந்த தமிழ்சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பு ****

எனது இந்தியா

மிகுந்த வரவேற்புடன் ஜுனியர் விகடனில் தொடராக நான் எழுதி வரும் எனது இந்தியாவின் முதல் பாகம் புத்தகமாக வெளியாகிறது முதல் நூறு கட்டுரைகள் இதில் அடங்கியிருக்கின்றன விகடன் பதிப்பகம் வெளியிட உள்ள இப்புத்தகம் சென்னை புத்தக கண்காட்சியில் வெளியாக உள்ளது, ஐநூறு பக்க அளவில் மிக நேர்த்தியாக, கெட்டி அட்டையில் உருவாக்கபட்டுள்ளது எனது இந்தியா புத்தக கண்காட்சியில் உள்ள விகடன் பதிப்பக அரங்கில் இந்நூல் விற்பனைக்கு கிடைக்கும் ••••

புத்தகக் கண்ணாடி

சென்னையில் நடைபெற உள்ள 36வது புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு சன்நியூஸ் தொலைக்காட்சியில் புத்தகக் கண்ணாடி என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒன்றினைத் தொகுத்து அளித்திருக்கிறேன் இந்த நிகழ்ச்சியில் இந்த ஆண்டு புத்தக கண்காட்சியின் சிறப்பம்சங்கள் எவை, இளைஞர்களிடம் புத்தகம் படிக்கிற பழக்கம் குறைந்து வருகிறதா, பழந்தமிழ் இலக்கியங்கள் இன்றும் வாசிக்கபடுகிறதா, குழந்தைகள் இலக்கியம் புறக்கணிக்கபடுவது ஏன், இணையத்தின் வருகையால் புத்தக வாசிப்பு  குறைந்து வருகிறதா, தொடர்கதைகள் படிக்கும் பழக்கம் தொடராமல் போனது ஏன்,  என்பது போன்ற பல்வேறு விவாதப்பொருளை …

புத்தகக் கண்ணாடி Read More »