லாட்ரெக்கின் இரவுக்காட்சிகள்

மோலின் ரோஜ் எனப்படும் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி ஆஸ்கார் பரிசு வென்றது, அந்தப் படத்தில் ஒவியர் டாலெஸ் லாட்ரெக் ஒரு முக்கிய கதாபாத்திரமாகச் சித்தரிக்கபட்டிருப்பார், லாட்ரெக் கேபரே நடனமாடும் பெண்களுடன் ஒன்றாக வாழ்ந்தவர், வேசைகள், நடனக்காரிகள், சூதாட்டவிடுதிப்பெண்கள் இவர்களே அவரது உலகம், பாரீஸ் நகரின் இரவு வாழ்க்கையை ஒவியமாக வரைந்தவர் லாட்ரெக், , அவரது ஒவியங்களை பாஸ்டன் ம்யூசியத்திலும் நியூயார்க் ம்யூசியத்திலும் பார்த்திருக்கிறேன், லாட்ரெக், டீகாஸ் இவரும் நடனப்பெண்களை அதிகம் வரைந்திருக்கிறார்கள், இதில் லாட்ரெக் …

லாட்ரெக்கின் இரவுக்காட்சிகள் Read More »

ஒலைக்கிளி

இந்த இதழ் ஆனந்த விகடனில் எனது சிறுகதை ஒலைக்கிளி வெளியாகி உள்ளது ••• ஜனவரி 4 வெள்ளி மாலை 6 மணிக்கு  சங்கம் 4 நிகழ்ச்சியில் பயணங்களும் தீராப்பரவசங்களும் என்ற தலைப்பில் பேச இருக்கிறேன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடம்: அடையார் சத்யா ஸ்டுடியோ எதிரில் உள்ள இயல்இசை நாடக மன்ற வளாகத்தில் அமைந்துள்ள திருவாடுதுறை  டிஎன் ராஜரத்தினம் கலையரங்கம். நேரம்  : 6 மணி •••

குழந்தைகளுக்கான புத்தகங்கள்

பெற்றோர்களும் குழந்தைகளும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் எவை, யார் வெளியிட்டிருக்கிறார்கள் என்று கேட்டு பலமுறை எனக்கு நண்பர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள் அந்த எண்ணத்தை மனதில் கொண்டு குழந்தைகள் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகங்களை அறிமுகப்படுத்தி  2013 ஜனவரி 1 முதல் 15 வரை சுட்டிவிகடன் சார்பில் சுட்டித்தமிழ் தொலைபேசியில் பேச இருக்கிறேன், 044 66802905 என்ற எண்ணிற்கு நீங்கள் போன் செய்தால் நான் சிபாரிசு செய்யும் புத்தகத்தினைப் பற்றி தெரிந்து கொள்ளலாம், இது ஒரு பதிவு …

குழந்தைகளுக்கான புத்தகங்கள் Read More »

எனக்குப் பிடித்தவை

2012ம் ஆண்டில் எனக்குப் பிடித்தவை சிறந்த தமிழ் நாவல் – பூமணியின் அஞ்ஞாடி. கலங்கிய நதி பி.ஏ.கிருஷ்ணன். சிறந்த புத்தகம் – ரமாவும் உமாவும் தீலிப்குமார் -சந்தியா பதிப்பகம் சென்னை சிறந்த சிறுகதையாசிரியர் – அழகிய பெரியவன், லட்சுமி சரவணகுமார். எஸ்.செந்தில்குமார், சந்திரா. சிறந்த சிறுகதை -சூனியக்காரியின் தங்கச்சி-  அ.முத்துலிங்கம் சிறந்த கட்டுரை ஆசிரியர்-     எஸ்.வி.ராஜதுரை / சரமாகோ படைப்புகள் குறித்த கட்டுரைகள்,  அ.முத்துகிருஷ்ணன்  கூடங்குளம் தொடர்பான கட்டுரைகள். அபிலாஷ் கிரிக்கெட் பற்றிய கட்டுரைகள் சிறந்த பயணக்கட்டுரை …

எனக்குப் பிடித்தவை Read More »

ஃப்ளோரென்ஸ் நைட்டிங்கேல்

கணிதம் மற்றும் அறிவியல் ஆளுமைகள் பற்றி நண்பர் பாஸ்கர் லட்சுமண் சிறப்பான கட்டுரைகளை  எழுதிவருகிறார்,  அவர் சொல்வனம் இணைய இதழில் எழுதிய இக்கட்டுரை மிக முக்கியமான ஒன்று ••• ஃப்ளோரென்ஸ் நைட்டிங்கேல் – புள்ளியியல் பகுப்பாய்வின் முன்னோடி பாஸ்கர் லட்சுமண் ஃப்ளோரென்ஸ்  நைட்டிங்கேல் என்றவுடன் பொதுவாக எல்லோர் நினைவில் வருவது “விளக்குடன் ஒரு மங்கை” மற்றும் செவிலியாக அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டு. அனேகமாக நாம் அறியாத அவருடைய இந்த புள்ளியில் துறைத் திறமை மீது சிறிது …

ஃப்ளோரென்ஸ் நைட்டிங்கேல் Read More »

விருது விழா

ரஷ்யக் கலாச்சார மையத்தால் வழங்கபடும் மாக்சிம் கார்க்கி விருதை சென்னையில் நடைபெற்ற விழாவில் என் அபிமான எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டது மிகுந்த சந்தோஷம் தருவதாக அமைந்திருந்தது, இந்த விழாவில் கலந்து கொண்ட ரஷ்யத்தூதுவர் அலெக்சாண்டர் கடாகின்  Prince Alexei Saltykov’s Journeys across India”, என்ற 19ம்நூற்றாண்டு பயணநூல் ஒன்றினை  எனக்கு நினைவுப்பரிசாக வழங்கினார், சித்திரங்களின் தொகுப்பாகிய இந்தநூல் அரிய பதிப்பாகும், இந்த நிகழ்வினை ஒட்டி ரஷ்ய நாட்டுப்புற இசைநடன நிகழ்வு நடைபெற்றது, இது போல …

விருது விழா Read More »

நடமாடும் அங்காடி

The grocer’s son என்ற பிரெஞ்சுபடத்தை நேற்றிரவு பார்த்தேன், நீண்டநாட்களுக்குப் பிறகு புத்துணர்வு ஊட்டும் படம் ஒன்றினைக் கண்ட சந்தோஷம் மனதில் நிரம்பியது, பலசரக்கு கடைக்காரனின் மகன் என்ற தலைப்பே கதையைச் சொல்லிவிடுகிறது, எளிமையான கதை, அதை படமாக்கியுள்ள விதம் கவித்துவமாக உள்ளது, குறிப்பாக தெற்குபிரான்சின் பசுமையான கிராமப்புறச் சாலைகள், சின்னஞ்சிறிய கிராமங்கள், பண்ணை வீடுகள் என படம் நம்மை இன்னொரு உலகிற்கே அழைத்துப் போகிறது .படத்தின் இயக்குனர் Eric Guirado புகழ்பெற்ற இளம் ஆவணப்பட இயக்குனர், …

நடமாடும் அங்காடி Read More »

ஏழாம் நாள் பேருரை

கடந்த ஒருவார காலமாக நான் நடத்திய உலகசினிமா பேருரையின் இறுதிநாள் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது, ஏழு உரைகளில் சாப்ளின் பற்றிய சொற்பொழிவே ஆகச்சிறந்ததாக இருந்தது எனப்பலரும் பாராட்டினார்கள், அத்துடன் அன்று நடைபெற்ற எனது நான்கு நூல்களின் வெளியீட்டுவிழாவும் சிறப்பாக நடைபெற்றது, இந்த விழாவில் எழுத்தாளர் சா.கந்தசாமி, எழுத்தாளர் பாவண்ணன், எழுத்தாளர் இறையன்பு ஐஏஎஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் உலகசினிமா பேருரைக்கு என்னோடு இணைந்து பல்வேறு விதங்களிலும் ஒத்துழைப்பு செய்த நண்பர்கள் மாரிமுத்து என்கிற …

ஏழாம் நாள் பேருரை Read More »

புத்தக வெளியீடு

இன்று மாலை ஆறு மணிக்கு உலகசினிமாப் பேருரைக்கு முன்னால், எனது நான்கு புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது, இந்த நிகழ்வில் எழுத்தாளர் சா.கந்தசாமி, எழுத்தாளர் பாவண்ணன், எழுத்தாளர் இறையன்பு ஐஏஎஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள், உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நான்கு புத்தகங்களின் விலை ரூ 445, அரங்கில் இந்தப் புத்தகங்கள் ரூ350க்கு கிடைக்கும் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கு கொள்ளும்படி அழைக்கிறேன் ••• இடம் :  சர்.பி.டி. அரங்கம், ஜி என் செட்டிசாலை …

புத்தக வெளியீடு Read More »

பேருரையின் நான்காம் நாள்

இயக்குனர் சத்யஜித் ரே குறித்த எனது உலகசினிமாப்பேருரையைப் பற்றி தினமலரில் செய்தி வெளியாகி உள்ளது, தொடர்ந்து உலகசினிமாப்பேருரைகள்  குறித்து செய்தி வெளியிட்டு வரும் தினமலர் நாளிதழுக்கு நன்றி