ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை நாவலில் வரும் சுப்புவை படம் வரைந்திருக்கிறார் கோபாலகிருஷ்ணா.

ஒரு நாவல் எப்படி எல்லாம் கொண்டாடப்படுகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாவலைத் திரைப்படமாக எடுப்பதற்கு மூன்று இயக்குநர்கள் வேறுவேறு தருணங்களில் தொடர்பு கொண்டார்கள். ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை. அதற்கான சரியான தருணம் விரைவில் வரக்கூடும் என நம்புகிறேன்
