வசந்தகாலத்திலே

Springtime in Saken என்ற ரஷ்ய நாவலை தி.க.சி மொழியாக்கம் செய்திருக்கிறார். ஜார்ஜி குலியா எழுதிய இந்த நாவல் சுவாரஸ்யமானது. 1951ல் இதனை மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழ் புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது.

அப்காஸீயாவின் வடகிழக்கு மூலையிலுள்ள ஸாகேன் என்ற பகுதியைப் பற்றிய நாவலிது. ஸாகேனின் இயற்கை அழகினை ஒவியன் பார்வையில் விவரிக்கும் இந்த நாவல் அந்த மக்களின் நினைவுகளையும் வரலாற்றையும் மிக அழகாக விவரிக்கிறது.

குறிப்பாக இதிலுள்ள வியப்பூட்டும் கதாபாத்திரங்களும் அவர்களின் நினைவுகளும் மறக்கமுடியாதவை.

0Shares
0