இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் அம்பைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

மிகச்சிறந்த சிறுகதைகளை எழுதியுள்ள அம்பை மும்பையில் வசிக்கிறார்.

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை என்ற சிறுகதைத் தொகுதிக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
••
சிறார் இலக்கியத்திற்காக வழங்கப்படும் பாலபுரஸ்கார் விருது கவிஞர் மு. முருகேஷிற்கு வழங்கப்பட்டுள்ளது. முருகேஷிற்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை என்ற நூலிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது

••