அஞ்சலி

எழுத்தாளர் பூமணி மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

வெக்கை, பிறகு. அஞ்ஞாடி, ரீதி, நொறுங்கல்கள் போன்ற சிறந்த படைப்புகளை தந்த தனித்துவமிக்க படைப்பாளி. நீண்ட கால நண்பர். கோவில்பட்டியில் அவரை பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். பூமணிமகாபாரதம் குறித்த நாவலை எழுதும் முயற்சியில் இருந்த நாட்களில் என்னுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். மக்கள் மொழியில் மகாபாரதம் எழுதப்பட வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தார். அந்த ஆசையின் வடிவமே அவரது கொம்மை நாவல். பூமணியின் மறைவு துயரமளிக்கிறது.

0Shares
0