தமிழன் விருது

புதிய தலைமுறை தொலைக்காட்சி வழங்கும் தமிழன் விருது எனக்கு வழங்கப்பட்டது. இலக்கியப் பிரிவில் வாழ்நாள் சாதனையாளர் விருதிற்காக என்னைத் தேர்வு செய்திருந்தார்கள்.

நேற்று மாலை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. எனது ஆசான் எஸ்.ஏ. பெருமாள் மற்றும் புதிய தலைமுறை சேர்மன் சத்யநாராயணா இருவரும் இணைந்து இந்த விருதை எனக்கு வழங்கினார்கள்.

நிகழ்வில் கலந்து கொள்ள உறுதுணை செய்த கார்மல், பரிசல் கிருஷ்ணா, நந்தினி உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிர்வாகம் மற்றும் ஆசிரியர் குழுவிற்கும் மனம் நிறைந்த நன்றி.

0Shares
0