முகாம் வருவதற்கான வழி

ஞாயிறு (23.03.2014) அன்று காலை 9.30 மணிக்குக் கதைகள் பேசுவோம் இலக்கிய முகாம் துவங்க இருக்கிறது
இதற்காகத் தண்டரை வரை பயணம் செய்வதற்கான வாகனவசதி டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
பைக் அல்லது காரில் வர விரும்புகிறவர்கள் சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை பிரதான சாலையில் வந்து செங்கல்பட்டு பாலத்தின் கீழ் உள்ள பாதை வழியாக ஊருக்குள் நுழைந்து திருக்கழுகுன்றம் சாலையில் பயணிக்க வேண்டும்,
செங்கல்பட்டில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் தண்டரை உள்ளது,
தண்டரையில் உள்ள இருளர் பழங்குடி பெண்கள் நல அமைப்பின் (ITWWS ) மையத்திற்கான தகவல் பலகை பிரதான சாலையில் உள்ளது,
கிளைபிரியும் மண்பாதையில் பயணம் செய்து வந்தால் இந்த மையத்தை அடையலாம்
இயற்கையான சூழலில் அமைந்துள்ள இடமது.
••
பயணத் தொடர்புக்கு
வேடியப்பன்
டிஸ்கவரி புக் பேலஸ்
: Ph”+91 44 65157525 , Cell +91 9940446650
0Shares
0