admin

கானகத்தின் குரல்

ஜாக் லண்டனின் The Call of the Wild நாவல் 1958லே பெ.தூரன் மொழியாக்கத்தில் கானகத்தின் குரல் என்ற பெயரில் வெளியாகியுள்ளது.. பக் என்ற நாயின் வரலாற்றை விவரிக்கும் கானகத்தின் குரல் சுவாரஸ்யமான புத்தகம். அலாஸ்காவில் தங்க வேட்டைக்குப் போனவர்களின் கதையைச் சொல்வதுடன் பனிச்சறுக்கு வண்டி இழுத்துச் செல்லும் நாயின் கதையினை அழகாக விவரித்திருக்கிறார் ஜாக் லண்டன் இந்த நாவல் நான்கு முறை ஹாலிவுட்டில் படமாக்கபட்டிருக்கிறது. Clark Gable நடித்து 1935ல் வெளியான படத்தையும் Charlton Heston …

கானகத்தின் குரல் Read More »

குறுங்கதை 55 கணிதப்புதிர்

கணிதப்புதிர் ஒன்றிற்குத் தீர்வு காணுவதற்காக ஆர் எஸ் சர்மா தனது வாழ்நாளில் எழுபது ஆண்டுகளைக் கழித்திருந்தார். அவரது பதினாறாவது வயதில் ஒரு நாள் பள்ளி ஆசிரியரும் வானவியல் அறிஞருமான அவரது தந்தை அழைத்து அந்தக் கணிதப்புதிரைப் பற்றிச் சொன்னார். இதுவரை உலகில் எவராலும் அந்தக் கணிதப்புதிர் தீர்த்துவைக்கப்படவில்லை. ஆகவே அதைச் சர்மா தீர்த்துவிட்டால் உலகின் கவனம் அவர் மீது விழும். கணிதமேதையாகக் கொண்டாடப்படுவார் என்று சொன்னார் தந்தை. சர்மா தந்தையிடமிருந்தே கணிதம் கற்றுக் கொண்டார். ஒன்பது வயதிற்குள் …

குறுங்கதை 55 கணிதப்புதிர் Read More »

குறுங்கதை 54 இது வேறு ஜன்னல்

பூங்காவில் அந்த மனிதர் பேசிக் கொண்டிருப்பதை ஒரு இளைஞன் கேட்டுக் கொண்டிருந்தான். “ என் வீட்டின் ஜன்னல்களை எண்ணமுடியாது.. ஒவ்வொரு ஜன்னலைத் திறக்கும் போது நான் காணும் காட்சிகள் வேறு வேறானவை. மனிதர்கள் நிறைய ஜன்னல்கள் உள்ள வீடுகளில் வசிக்க வேண்டும். எந்த ஜன்னல் வழியாக உலகை நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று தெரியாது. வெட்டவெளி கற்றுத்தராததை ஜன்னல்கள் கற்றுத் தந்துவிடக் கூடியது என்றார் அந்த மனிதர் “உங்கள் வீடு எங்கேயிருக்கிறது “எனக்கேட்டான் அந்த இளைஞன் “மாதா …

குறுங்கதை 54 இது வேறு ஜன்னல் Read More »

பறவைகளை அழைத்துச் செல்பவன்.

Spread Your Wings என்ற பிரெஞ்சு படத்தைப் பார்த்தேன். அழிந்து வரும், காட்டு வாத்து இனம் ஒன்றைக் காப்பாற்ற வேண்டி பறவையியலாளர் கிறிஸ்டியன் ஒரு ஆய்வுத்திட்டத்தைச் சமர்ப்பிக்கிறார். அதை ஏற்றுக் கொள்ளாமல் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் நிராகரிக்கிறது. தனது திட்டத்தைச் செயல்படுத்த விரும்பிய கிறிஸ்டியன் அலுவலக முத்திரையைத் திருடி வந்து தானே ஒரு அரசாணை போல ஒன்றைத் தயார் செய்கிறார். அவரது திட்டம், காட்டுவாத்துகளின் முட்டைகளைச் சேகரித்து அந்த வாத்துகள் பிறக்கும் நாளிலிருந்து தானே வளர்த்து அவற்றைப் …

பறவைகளை அழைத்துச் செல்பவன். Read More »

குறுங்கதை 53 பூச்சரம் சூடிய குரங்கு

அந்தக் குரங்காட்டியையும் அவனது பெண்குரங்கினையும் ஊரே அறிவார்கள். எப்போதும் தனது தோளில் குரங்கை உட்கார வைத்துக் கொண்டு அவன் சுற்றிக் கொண்டிருப்பான். சாப்பிடப்போகும் போதும் கூட அருகில் உட்கார வைத்து தனது இலையிலிருந்த உணவை அதற்கும் தருவான். அவன் சலூனில் சென்று முடிவெட்டிக் கொள்ளும் போது அக்குரங்கு கண்ணாடியில் தன்னைப் பார்த்தபடியே இருக்கும். சில வேளைகளில் அந்தப் பெண் குரங்கிற்கு அவன் பூச்சரம் வாங்கிச் சூடிவிடுவான். பெரும்பாலும் அவன் பள்ளியின் முன்னால் மாலைநேரங்களில் வித்தை காட்டுவது வழக்கம். …

குறுங்கதை 53 பூச்சரம் சூடிய குரங்கு Read More »

சௌடையாவின் குரல்.

ஆரம்பப் பள்ளி படிக்கும் போது நீதிபோதனை என்றொரு வகுப்பிருந்தது. அதில் சிறிய கதைப் புத்தகங்களை வாசிக்கத் தருவார்கள். சில நேரம் கதையை ஆசிரியரே படித்துக் காட்டுவார். நாங்கள் கேட்பதுண்டு. அழவள்ளியப்பா எழுதிய ஈசாப் கதைகளின் பாடல் வடிவம் மிகவும் பிரபலமானது. ஆசிரியர் அதை அழகாகப் பாடுவார். ஒட்டுமொத்த வகுப்பறையும் அந்தப் பாடலைப் பாடும். நீதிபோதனை வகுப்பு பெரும்பாலும் வெள்ளிக்கிழமை மதியம் தான் இருக்கும். ஆகவே அன்று பள்ளி முடிந்தபிறகும் மாணவர்கள் மைதானத்திலிருந்தபடியே இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருப்போம்.தப்பியோடிய …

சௌடையாவின் குரல். Read More »

குறுங்கதை 52 சிற்பியான எலி

அந்த நகரில் ஒரு எலி சிற்பியாக வாழ்ந்து வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒருநாள் பேக்கரி ஒன்றின் உள்ளே இரவில் திருடப் போகையில் அங்கே செய்து வைக்கப்பட்டிருந்த விதவிதமான கேக்குகளையும் அதன் அலங்கார வடிவத்தையும் கண்ட அந்த எலி அவற்றை உண்ணும் சிற்பங்களாகவே கருதியது. ஆகவே தானும் அப்படியான சிற்பங்களைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டது. திருடி வந்த கேக்துண்டினை வைத்துக் கொண்டு சிற்பம் செய்து பார்த்தது. ஆரம்பத்தில் அந்த எலி நினைத்தது போலச் சிறிய உருவத்தைக் …

குறுங்கதை 52 சிற்பியான எலி Read More »

பால்சாக்கின் காதல்.

பிப்ரவரி 1832 இல் எழுத்தாளர் பால்சாக் (Honore de Balzac) முகவரிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அது உக்ரேனின் ஒடேஸாவிலிருந்து எழுதப்பட்ட கடிதம். எழுதியவர் பெயர் முகவரி எதுவுமில்லை. ஆனால் அக் கடிதம் பால்சாக்கின் படைப்புகளைக் கோபமாக விமர்சனம் செய்திருந்தது. குறிப்பாக அவரது La Peau de chagrin நாவலின் பெண் கதாபாத்திரம் பற்றி எதிர்மறையான விமர்சனத்தை வைத்திருந்தது. யார் எழுதியது என்று தெரியவில்லை. அந்நியர் என்று மட்டுமே கையெழுத்து இடப்பட்டிருந்தது. ஆனால் அதை எழுதியது ஒரு …

பால்சாக்கின் காதல். Read More »