குறுங்கதை 63 கூட்டாஞ்சோறு
அந்த ஊரின் சிறந்த சமையற்காரர்களாக இருந்த எவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதிலும் துரையப்பா, சாமியார் போலச் சாயவேஷ்டி தான் கட்டிக் கொள்வார். சமைக்கிறவன் துறவியாக இருக்க வேண்டும் என்பது போலிருக்கும் அவரது தோற்றம். கல்யாண வீடுகளில் துரையப்பா சமையல் என்றால் தனி விசேசம். எல்லாத் திருமண வீடுகளுக்கும் சமைக்க அவர் ஒத்துக் கொள்வதில்லை. துரையப்பாவை கட்டாயப்படுத்தி எவரும் சமைக்க வைத்துவிட முடியவே முடியாது. அவரது சம்பளம் 1001 ரூபாய். அதில் பாதியைக் கோவிலுக்குக் கொடுத்து விடுவார் …