admin

ஞானபீடம்

இந்த ஆண்டு ஞானபீடம் விருது  தமிழுக்குக் கிடைக்ககூடும் என்ற தகவல் ஆறுமாதமாகவே உலவியது. அசோகமித்ரன், கி.ராஜநாராயணன் என பரிந்துரைப் பட்டியலில் மூத்த எழுத்தாளர்கள் பலரிருந்தார்கள். ஆனால் நேற்று வங்கமொழிக்கு ஞானபீடம் வழங்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. வங்கக் கவிஞர் Shankha Ghosh இந்த ஆண்டிற்கான ஞானபீடம் பெற்றிருக்கிறார். பத்மபூஷண், சாகித்யஅகாதமி, சரஸ்வதி சம்மான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளை பெற்றுள்ளவர் சங்கா கோஷ். கன்னடம் எட்டுமுறையும் வங்காளம் ஆறுமுறையும் மலையாளம் ஐந்துமுறையும் ஞானபீடம் பெற்றுள்ளது. ஆனால் ஜெயகாந்தனுக்குப் பிறகு கடந்த …

ஞானபீடம் Read More »

தங்கல்

அமீர்கான் நடித்துள்ள தங்கல் படத்தை நேற்று பார்த்தேன். இந்திய சினிமாவில் அமீர்கான் அளவிற்கு அர்ப்பணிப்புடன் புதிய கதைகளன்களைத் தேர்வு செய்து நடிக்கும் நடிகர்கள் குறைவு. இப்படத்தில் அவரது இன்னொரு பரிமாணத்தைக் காணமுடிகிறது. விளையாட்டுச் சார்ந்த படங்களில் கதாநாயகன் அல்லது நாயகி தான் பிரதானமாக இருப்பாள். ஆனால் இதில் அமீர்கான் மையக்கதாபாத்திரம் மட்டுமே. அவர் மல்யுத்தப்போட்டியில் தனது இரண்டு மகள்களை ஈடுபடச்செய்வதும் அவர்கள் வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறி உச்சத்தை அடைவதுமே கதை. இளம் மல்யுத்த வீரராகவும், ஒரு அப்பாவாகவும், …

தங்கல் Read More »

இருளும் யானையும்

மனுஷ்யபுத்திரனின் இருளில் நகரும் யானை கவிதைத்தொகுப்பை வாசித்து முடித்தேன் எட்வர்டு மஞ்ச் வரைந்த “The Scream” என்ற ஒவியம் நினைவில் வந்து போகிறது. ஒலமிடும் அந்த மனிதனின் முகம் மறக்கமுடியாதது. அது சுயவருத்தத்தில் உருவான ஒலமில்லை. தன் கண்முன்னே உலகம் அழிவுறுவதன் அலறல். தன் இயலாமையை, தவிப்பை, இழப்பை அடையாளப்படுத்தும் குரல். மனுஷ்யபுத்திரனின் கவிதைகளும் இதையே செய்கின்றன எளிய நம்பிக்கைகளே மனிதர்களின் பிடிமானம். அவை பொய்யென உணர்ந்த போதும் கூட அவற்றைப் பற்றிக் கொண்டே மனிதர்கள் வாழ்ந்து …

இருளும் யானையும் Read More »

இன்றைய தமிழ் சிறுகதையின் பத்து முகங்கள்

தமிழ் சிறுகதையின் முகம் மாறிக் கொண்டேயிருக்கிறது. இளந்தலைமுறை படைப்பாளிகள் புதிய களன்களில் புதிய கதைமொழியில் சிறப்பான கதைகளை எழுதிவருகிறார்கள். சிறுகதை எழுவதுதை பெரும் சவாலாகக் கருதுகிறவன் என்ற முறையில் பத்திரிக்கைகளிலும் இணையத்திலும் வெளியாகிற சிறுகதைகளைத் தேடிப்படித்துவிடுவேன். புதிய எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்புகளையும் நேரம் ஒதுக்கி வாசித்துவிடுவேன். சிறுகதைகள் தேங்கிவிட்டது, முடிந்துவிட்டது என்பது பொய்யான அபிப்ராயம். சிறுகதையில் புதிய கதைக்கருவை, மொழியை, கதைசொல்லும் முறையைக் கையாளும் பலர் உருவாகி இருக்கிறார்கள்.  என் வாசிப்பிற்குள் வராத பல சிறுகதைகள், எழுத்தாளர்கள் …

இன்றைய தமிழ் சிறுகதையின் பத்து முகங்கள் Read More »

வாழ்த்துகள்

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள வண்ணதாசன் என்ற கல்யாணி அண்ணனுக்கு மனம் நிரம்பிய வாழ்த்துகள் சிறுகதைகளுக்காக அவருக்கு விருது கிடைத்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி. எத்தனையோ அபூர்வமான கதைகளை எழுதிய வண்ணதாசனுக்கு இவ்விருது தாமதமாகவே கிடைத்துள்ளது. மார்கழி சந்தோஷத்தை தரும் மாதம். இந்த மார்கழியை அண்ணனின் விருது மேலும் அழகாக்கியுள்ளது.

மனுஷ்யபுத்திரன் கவிதைகள்

கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது சமீபத்திய கவிதைகளை மூன்று தொகுதிகளாக வெளியிடுகிறார். சமகாலப்பிரச்சனைகளைத் தொட்டுப் பேசும் அவரது கவிதைகள் நம் காலத்தின் குரலாக ஒலிக்கின்றன. இந்தக் கவிதை தொகுதிகளின் வெளியீட்டுவிழாவிற்குத் தலைமையேற்று உரையாற்றுகிறேன் உயிர்மை பதிப்பகம் இந்நிகழ்வை நடத்துகிறது டிசம்பர் 25  மாலை 5 : 30 இடம்: கவிக்கோ மன்றம் , ஆழ்வார்பேட்டை. சென்னை

யாவரும்

யாவரும் பதிப்பகம் சார்பில் நடைபெறவுள்ள நான்கு சிறுகதைத் தொகுப்புகளின் வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் வாசகர்கள், நண்பர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் இடம்:  இக்சா மையம், எக்மோர். சென்னை நாள் 23 .12.2016 .   மாலை 6 : 30

பதின் போஸ்டர்

எனது புதிய நாவல் பதின் ஜனவரி 1 2017  அன்று வெளியாகவுள்ளது. இதற்கு வாசகர்கள் பல்வேறு போஸ்டர்களைத் தயாரித்து அனுப்பி வருகிறார்கள் மகி என்ற வாசகர் அனுப்பிய போஸ்டர்

மாயவெளிச்சம்

இன்று காலை William Trost Richards என்ற அமெரிக்க ஒவியர் வரைந்த Moonlight On Mount Lafayette என்ற வாட்டர் கலர் ஒவியத்தை இணையத்தில் கண்டேன். நிலவொளியை எவ்வளவோ ஒவியர்கள் வரைந்திருக்கிறார்கள். ரிச்சர்ட்ஸ் வரைந்துள்ள மாயவெளிச்சம் பிரமிப்பூட்டுகிறது. இரவின் தனிமையை இதை விடச் சிறப்பாக வரைந்துவிட முடியாது என்றே தோன்றுகிறது. கலைந்த மேகங்களுக்குள் ஒளிர்கிறது நிலா. பேரமைதி ததும்பும் நிலவெளி. வடஇந்திய ரயில் பயணம் ஒன்றில் இது போன்ற ஒரு காட்சியை நிலாவெளிச்சத்தில் கண்டிருக்கிறேன். நிமிஷ நேர …

மாயவெளிச்சம் Read More »

கசந்த உறவு

ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் கதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த Norman Thomas di Giovanni தனது அனுபவங்களையும் போர்ஹேயின் திருமண வாழ்வு குறித்தும் Georgie & Elsa என்ற சுவையான புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்த அளவு யாரும் போர்ஹேயின் மறுபக்கத்தை எழுத்தில் அடையாளம் காட்டியதில்லை.  மிரட்சியோடு வியந்துபார்க்க வைக்கும் எழுத்துகளைப் படைத்த போர்ஹேயும் சாமானியரின் ஆசைகளுடன் விருப்பு வெறுப்புகளுடன், ஏமாற்றங்கள். குடும்பச் சண்டைகளுடன் வாழ்ந்திருக்கிறார் என்பதை நுட்பமாகச் சுட்டிக்காட்டுகிறார் ஜியோவனி. தான் கல்லூரி நாட்களில் காதலித்த …

கசந்த உறவு Read More »