admin

தேவதச்சனோடு உரையாடல்.

கவிஞர் தேவதச்சனுடன் கவிதைகள் குறித்த விரிவான உரையாடல் ஒன்றினை நடத்திப் பதிவு செய்திருக்கிறேன். நானும் கவிஞர் மனுஷ்யபுத்திரனும் நான்கு அமர்வுகளாக இந்த உரையாடலை நிகழ்த்தினோம். தேவதச்சனின் கவிதைகள் குறித்த எனது கட்டுரைகளுடன் இந்த உரையாடலும் இணைந்து தனிநூலாக வெளியிடப்படவுள்ளது. அதிலிருந்து சிறுபகுதி •• எஸ்.ரா: உங்கள் கவிதைகளில் பால்யகாலம் தொடர்ந்து அடையாளப்படுத்தபடுகிறதே. அது வெறும் நினைவுகள் மட்டும் தானா? தேவதச்சன் – சிறுவயது நினைவுகளின் பங்கு கவிதையில் நிச்சயமாக இருக்கிறது . பத்து வயதுச் சிறுவனுக்கு உடல் …

தேவதச்சனோடு உரையாடல். Read More »

ஏப்ரல் 13

டிஸ்கவரி புக் பேலஸ்   எனது  பிறந்த நாளை வாசகர்களுடன்  கொண்டாடும் விதமாக  ஏப்ரல் 13 வியாழன் மாலை ஐந்து மணிக்கு   கேக் வெட்டிப்  பகிர்ந்து கொள்வதுடன்  ஒரு   கலந்துரையாடல் நிகழ்விற்கும் ஏற்பாடு செய்துள்ளது. நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன் ••

பிரபஞ்சன் 55

1961ல் பிரபஞ்சனின் முதற்சிறுகதை வெளியானது. கடந்த 55 ஆண்டுகளாக  எழுதிவரும் பிரபஞ்சன் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும்பங்களிப்பு செய்துள்ளார். அதைக் கொண்டாடும் விதமாக  எழுத்துலகில் பிரபஞ்சன் 55 என்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 29  சனிக்கிழமை  ரஷ்ய கலாச்சார மையத்தில் இந்நிகழ்வு  நடைபெறவுள்ளது. அதில் பிரபஞ்சன் படைப்புகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு. புகைப்படக்கண்காட்சி, மற்றும் நாடகம், குறும்படத்திரையிடல், புத்தக வெளியீடு நடைபெறவுள்ளது. பிரபஞ்சனின் எழுத்துலக சேவையைப் பாராட்டி சிறப்பு நிதியும் வழங்கபடுகிறது.

ஆரணியில்

ஆரணி டைம்ஸ் சுதாகர் மற்றும் அவரது நண்பர்கள் ஏற்பாட்டில் அசோகமித்ரன் நினைவஞ்சலி கூட்டம் ஆரணியில் 08.04.2017 அன்று சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆரணியில் ஒரு இலக்கிய நிகழ்வில் அரங்கு நிறைய ஆட்கள் கலந்து கொண்டது பெரிய சாதனை. நானும் பவா. செல்லதுரையும் அசோகமித்ரன் குறித்து உரையாற்றினோம்.  ஜி.குப்புசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். அன்று பகலில் நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான ஜி. குப்புசாமி வீட்டிற்குச் சென்றிருந்தேன். சிறப்பான மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார். வெகு ருசியான உணவை அளித்த நர்மதா குப்புசாமிக்கு …

ஆரணியில் Read More »

பாண்டிச்சேரியில்

நேற்று பாண்டிச்சேரியில் பிரபஞ்சன் – 55 முழுநாள் கருத்தரங்கிற்கான ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கவிஞர் மனுஷி பாரதி மற்றும் நண்பர்கள் ஒருங்கிணைப்புச் செய்திருந்தார்கள். மாலையில் வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. அதில் என்னோடு நண்பர் பவா செல்லதுரை மற்றும் பதிப்பாளர் வேடியப்பன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். மகிழ்வூட்டும் சந்திப்பாக அமைந்தது. நண்பர் இளவேனில் சிறப்பான இரவு உணவு தந்து அனுப்பி வைத்தார். இளவேனிலின் புகைப்படங்களைக் காணுவதற்காக இன்னொரு முறை தனியே பாண்டிச்சேரி வரவேண்டும் என …

பாண்டிச்சேரியில் Read More »

மணலின் நடுவே

William Stanley Merwin எனப்படும் w.s. மெர்வின் அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர். இவரது Sand என்ற சிறுகதை இரண்டேபக்கங்கள் கொண்டது. அபாரமான இச்சிறுகதை உலகச் சிறுகதைகள் வரிசையில் இடம்பெற்றுள்ளது. மணல்கடிகாரம் ஒன்றினுள் நிரப்பட்ட மணலிலுள் எப்படியோ ஒரு எறும்பு பிறந்து விடுகிறது. அதற்கு வெளியுலகம் என்ற ஒன்றே தெரியாது. மணல்துகள்களை தனது சகோதரர்களாக  நினைக்கிறது. மேலிருந்து கீழாக, பின்பு கீழிலிருந்து மேலாக எதற்காக இப்படி பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என  குழம்பிப் போகிறது. தன்னை எதற்காக மணல்துகள்கள் …

மணலின் நடுவே Read More »

குல்தாரா

தார்பாலைவனத்தினுள் ஜெய்சால்மரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது குல்தாரா. கைவிடப்பட்ட இந்தக் கிராமத்தை ஆவிகள் வாழும் ஊர் என்கிறார்கள். எங்கும் இடிபாடுகள். ஒட்டுமொத்த ஊரும் காலியாக உள்ளது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஜெய்சால்மரின் திவான் சலீம் சிங் குல்தாராவில் வசித்து வந்த பாலிவால் பிராமணப் பெண் ஒருத்தியின் அழகில் மயங்கி திருமணம் செய்து கொள்ளக் கேட்டிருக்கிறார். அதற்குப் பாலிவால் பிரமாணர்கள் மறுக்கவே பெண்ணைத் தூக்கிக் கொண்டுபோய்த் திருமணம் செய்வதோடு ஊரையும் அழித்துவிடுவேன் என சலீம் சிங் மிரட்டியிருக்கிறார். …

குல்தாரா Read More »

கடைசி அரசன்

1206ல் நார்வேயின் அரசர் கொல்லப்படுகிறார். அவரது வாரிசான குழந்தையைக் காப்பாற்றும் விசுவாசமான வீரர்கள் பனிப்பிரதேசத்தினுள் தப்பிஒளிகிறார்கள். ஒருபுறம் சதி செய்து அரசனைக் கொன்று அரியணையில் அமர முயற்சிப்பவர்கள். மறுபக்கம் Baglers எனப்படும் திருச்சபை படைவீரர்கள் நாட்டைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். இவர்களிடமிருந்து தப்பி Torstein, Skjervald என்ற இரண்டு படைவீரர்கள் எப்படிக் குழந்தையைக் காப்பாற்றுகிறார்கள் என்பதை விவரிக்கிறது The Last King திரைப்படம். 2016ல் வெளியாகியுள்ளது பனிப்பிரதேசத்தில் குழந்தையைச் சறுக்குவண்டியில் கொண்டு செல்பவர்களை எதிரிகள் துரத்துவதும், பனிப்புயலுக்குள் குழந்தை …

கடைசி அரசன் Read More »

பதின் நாவல் குறித்து

‘பதின்’பருவ உலகம் அழகானது… வீரபத்திர லெனின் இளமைப் பருவம் அழகானது, இனிமையானது, சுவையானது என்பதை யாரும் மறுக்க முடியாது. யாரிடம் கேட்டாலும் பள்ளி வாழ்க்கையே சிறப்பானது என்பர். ஏன் என்றால் அந்தப் பருவத்தில் தான் நண்பன், தோழி, வகுப்பு, பாடங்கள், திருட்டு, சண்டை என உலகத்தைப் பற்றி நாம் கற்றுக் கொள்கிறோம். நமக்கு யார் முதல் நண்பன் என நினைத்துப் பார்த்தால், பல முகங்கள் நம் கண்முன்னே வந்து நிழலாடும். கண்டிப்பு, தண்டனை, பயமுறுத்தல், கட்டாயப்படுத்துதல் போன்றவற்றை …

பதின் நாவல் குறித்து Read More »

தேவதச்சனோடு ஒரு நாள்.

கவிஞர் தேவதச்சனின் கவிதைகளைக் கொண்டாடும் விதத்தில் ஒரு நாள் கருத்தரங்கம் ஒன்றினை உயிர்மை ஏற்பாடு செய்துள்ளது. ஏப்ரல் 23 ஞாயிறு அன்று ஆழ்வார்பேட்டையிலுள்ள கவிக்கோ மன்றத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது கருத்தரங்கினை நான் ஒருங்கிணைப்பு செய்கிறேன். நான்கு அமர்வுகளாகக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. ஞாயிறு மாலை தேவதச்சன் கவிதைகளின் முழுத்தொகுப்பு வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது நிகழ்வு குறித்த விரிவான தகவல்கள் சில தினங்களில் அறிவிக்கபடும். நிகழ்வில் கலந்து கொண்டு தேவதச்சன் கவிதைகள் குறித்த உங்கள் பார்வைகளைப் பகிர்ந்து கொள்ள …

தேவதச்சனோடு ஒரு நாள். Read More »