admin

மின்னங்காடி

என்நண்பரும் எழுத்தாளருமான தமிழ்மகன் மின்னங்காடி டாட் காம் என இணைய நூல்விற்பனையகம் ஒன்றைத் துவக்கியிருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் தமிழின் அனைத்துப் பதிப்பக நூல்களும் மின்னங்காடியில் கிடைக்கும். இந்தியாவுக்குள் என்றால் ஐந்து தினங்களுக்குள்ளும் வெளிநாடுகள் என்றால் பதினைந்து தினங்களுக்குள்ளும் நூல்களைச் சேர்ப்பிக்கப்படும். கார்டுகள் மூலமாகப் பணம் செலுத்திப் புத்தகங்களை வாங்க முடியும். இந்தியாவுக்குள் என்றால் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பி நூல்களைப் பெறலாம். காசோலை, மணியார்டர் செலுத்தி மட்டுமே புத்தகம் பெற …

மின்னங்காடி Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 36

திருடன் – ஜினிசிரோ தனிஜகி ஜப்பானியச் சிறுகதை ஆங்கிலம்: ஹோவர்ட் ஹிப்பெட் தமிழில் : தி. இரா. மீனா பல வருடங்களுக்கு முன்னால், டோக்யோ இம்பீரியல் பலகலைக்கழகத்தில் சேருவதற்காக நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பள்ளி அது. நானும் அறைக்கூட்டாளிகளும் ‘மெழுகுவர்த்தி படிப்பு’ என்கிற பெயரில் அதிக நேரம் செலவழிப்போம் (அதில் படிப்பது மிகக்குறைவாகத்தான் இருக்கும்). ஒரு நாள் இரவு, விளக்குகள் அணைந்து வெகு நேரத்திற்குப் பிறகும் நாங்கள் நால்வரும் மெழுவர்த்தியைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு பேசியபடி …

எனக்குப் பிடித்த கதைகள் 36 Read More »

நகுலன் வீடு

இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாக கண்ட பதிவிது.நகுலன் இறந்த போது மலையாள எழுத்தாளர் உண்ணி ஆர் எழுதிய அஞ்சலிக்குறிப்பு ** நகுலன் வீடு உண்ணி.ஆர். ‘டி.கே.துரைசாமி என்ற நகுலன் காலமானார்‘ இந்த மரண அறிவிப்பின் மீது சாய்ந்து நின்று என் சக ஊழியர் கேட்டார்: யார் இவர்? நான் சொன்னேன்: தமிழ் எழுத்தாளர். கண்களை விரித்து நம்பிக்கையில்லாத குரலில் அவர் சொன்னார்: கேள்விப்பட்டதே இல்லை. எல்லாக் காதுகளாலும் கேட்க முடியாத சில ஓசைகளும் எல்லாக் கண்களாலும் …

நகுலன் வீடு Read More »

தி இந்துவில்

இன்றைய (17.09.2016 ) தி இந்து நாளிதழில் என் குடும்பம் பற்றிய கட்டுரை ஒன்று இடம்பெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லாங்கிணர் எனது சொந்த ஊர். அப்பா சண்முகம் கால்நடை மருத்துவராகப் பணியாற்றினார். அம்மா மங்கையற்கரசி நிறையப் படிக்ககூடியவர். எனது நற்குணங்கள் யாவும் அவர் உருவாக்கியதே. நாங்கள் ஆறு பிள்ளைகள். அண்ணன் டாக்டர் வெங்கடாசலம். அடுத்தவன் நான். தங்கைகள் கமலா, கோதை, உஷா. கடைசித்தம்பி பாலகிருஷ்ணன். அப்பா அரசாங்கவேலையில் இருந்த போதும் நாங்கள் விவசாயக் குடும்பமாகவே வாழ்ந்து வந்தோம். …

தி இந்துவில் Read More »

எழுதித் தீராப் பக்கங்கள்

காலம் இலக்கிய இதழின் ஆசிரியர் கனடா செல்வம். தமிழ் இலக்கிய உலகோடு நெருக்கமான தொடர்பு கொண்டவர். தமிழ் எழுத்தாளர்கள் பலருக்கும் நல்ல நண்பர். கனடாவிற்கு நான் சென்றிருந்த போது செல்வம் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தேன். சிறப்பாக உபசரிப்புச் செய்தார். இலக்கியப் புத்தகங்களை அறிமுகம் செய்வது,. கூட்டங்கள் நடத்துவது, சிற்றிதழ் கொண்டு வருவது , புத்தகக் கண்காட்சி நடத்துவது, ஈழ அரசியல் சார்ந்த கூட்டங்களை ஒருங்கிணைப்புச் செய்வது, நவீன நாடகங்கள் நடத்த உதவி செய்வது,  கூத்து, நாட்டுப்புற …

எழுதித் தீராப் பக்கங்கள் Read More »

மணற்புயலுக்குள் இரண்டு பிக்குகள்

பௌத்தம் தொடர்பான திரைப்படங்களைத் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  அதில் NFDC தயாரித்த Trishagni என்ற ஹிந்திப்படம் கிடைத்தது. நேற்றிரவு அதைப் பார்த்தேன். 1988ல் வெளியான இப்படத்தை நடிகரும் எழுத்தாளருமான Nabendu Ghosh இப்படத்தை இயக்கியுள்ளார். தேசிய விருது பெற்றுள்ளது இப்படம் வங்காள எழுத்தாளர் Sharadindu Bandyopadhyayவின் சிறுகதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டுள்ளது. Trishagni என்பதற்கு மணற்புயல் என்று அர்த்தம். கிமு 200ல் பாலைவன பிரதேசத்திலுள்ள சாரிபுத் என்ற நகரில் இக்கதை நடக்கிறது. அங்கு புகழ்பெற்ற பௌத்த …

மணற்புயலுக்குள் இரண்டு பிக்குகள் Read More »

புதிய புத்தகங்கள்

மதுரை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு எனது நான்கு புதிய புத்தகங்கள் வெளியாகின்றன. இவற்றை டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது அமெரிக்கா, மற்றும் ஜப்பானிய பயண அனுபவத்தைப்  பற்றிய நூல் நிலம் கேட்டது கடல் சொன்னது. சிறார்களுக்கான சிறுநாவல் வரிசையில் மூன்று புத்தகங்கள் வெளியாகின்றன. 1.நிலம் கேட்டது கடல் சொன்னது ரூ.70 2. பூனையின் மனைவி ரூ.35 3. உலகின் மிகச்சிறிய தவளை ரூ.40 4. இறக்கை விரிக்கும் மரம் ரூ.40 185 ரூபாய் மதிப்புள்ள இந்த நான்கு …

புதிய புத்தகங்கள் Read More »

மூன்று நண்பர்கள்

புகழ்பெற்ற ஸ்பானிய திரைப்பட இயக்குனர் Carlos Saura. இவரது இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளியான BUÑUEL AND KING SOLOMON’S TABLE என்ற படத்தை இரண்டு நாட்களுக்கு முன்பாகப் பார்த்தேன். இப்படம் பிரபல இயக்குனர் லூயி புனுவலைப்(Luis Buñuel) பற்றியது. குறிப்பாக ஒவியர் டாலி, கவிஞர் லோர்க்காவோடு அவருக்கிருந்த நட்பைப்பற்றியது. மூவரும் நெருக்கமான நண்பர்களாகப் பழகினார்கள், சில ஆண்டுகள் மேட்ரிட்டில் ஒரே அறையில் ஒன்றாக வசித்தார்கள். புனுவலின் வாரிசு எனக் கொண்டாடப்படும் கார்லோஸ் சுரா இப்படத்தை ஒரு …

மூன்று நண்பர்கள் Read More »

ஒளியை நேசித்தவன்

என் நெருங்கிய நண்பரும் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற கேமிராமேனுமான ஜீவா இறந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன. அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் கட்டுரை ஒன்றினை குமுதம் லைப்  ( 31. 08. 2016 ) இணைப்பில் எழுதியிருக்கிறேன்

ருஷ்ய மொழியில்

நான் எழுதிய செகாவ் வாழ்கிறார் என ஆன்டன் செகாவின் வாழ்க்கை வரலாற்று நூல் ருஷ்ய மொழியில் வெளியாக இருக்கிறது. தமிழில் எழுதப்பட்ட ஒரு ரஷ்ய எழுத்தாளரைப் பற்றிய நூல் ருஷ்ய மொழியில் மொழியாக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை. ஆன்டன் செகாவை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூலிது. இதனை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை ரூ 150.