admin

உரத்தநாட்டில்

நாளை (05/07/2014) உரத்தநாட்டில் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியின் துவக்கவிழாவில் உரையாற்றுகிறேன். இதற்காக இன்றிரவு தஞ்சை செல்கிறேன். வோட்ஸ்வொர்த் புத்தக நிலையம் இந்த புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது. இடம்   : ரெங்கமணி கல்யாண மண்டபம் உரத்தநாடு

கெடை காடு

சமீபத்தில் ஏக்நாத் எழுதிய கெடை காடு நாவலைப் படித்தேன். இன்று பெரும்பான்மை நாவல்கள் நகர்மய வாழ்க்கையை எழுதிக் கொண்டிருக்கையில் மண்மணத்துடன், கிடைமாடுகளின் யதார்த்தமான வாழ்க்கையைச் சிறப்பாக எழுதியிருக்கிறார் ஏக்நாத். மலை கிராமங்களில் இருந்து மாடுகளைக் கெடை காடு நோக்கி அழைத்துச் செல்வது கண்கொள்ளாத காட்சியாக விரிகிறது. ஒநாய் குலச்சின்னம் நாவலை வாசிக்கும் போது மங்கோலிய வேட்டை நிலத்தை எவ்வளவு நுட்பமாக எழுதிப்போகிறாரே என வியந்தேன், அந்த விவரணைகளுக்கு இணையாகக் கிடை மாடுகளின் வாழ்க்கையை அதன் தனித்துவமான அனுபவங்களைத் …

கெடை காடு Read More »

உதவியாளர்கள் தேவை

திரைப்படத்துறையில் என்னோடு இணைந்து வேலை செய்வதற்கு உதவியாளர்கள் தேவை. விருப்பமுள்ள இளைஞர்கள் தங்களைப் பற்றிய சுயவிபரத்துடன் தொலைபேசி எண்ணை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும் writerramki@gmail.com

பாக்னர் சில குறிப்புகள்

தான் எழுதிக் கொண்டிருந்த நாவலின் கதைப்போக்கு மற்றும் முக்கியச் சம்பவங்கள் குறித்த விபரங்களைத் தனது படுக்கை அறையின் சுவரில் எழுதி ஒட்டிவிடுவது நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் வில்லியம் பாக்னரின் (William Faulkner ) வழக்கம். 1954ல் அவர் எழுதிய A Fable நாவலுக்கான குறிப்புகள் அவரது படுக்கையில் ஒட்டப்பட்டிருக்கின்றன,  இந்தப் புகைப்படத்தையும் செய்தியும் வாசித்த போது எனக்கு அசோகமித்ரன் எழுதிய ஒற்றன் நாவல் நினைவில் வந்து போனது •• வில்லியம் பாக்னர் தனக்கு வரும் கடிதங்களில் பதிப்பாளரிடம் …

பாக்னர் சில குறிப்புகள் Read More »

கொண்டாட வேண்டிய நாடகம்

தியேட்டர் லேப் நாடக அமைப்பின் பத்தாண்டு விழாவில் நேற்று கதைகள் காத்திருக்கின்றன என்ற தமிழ் சிறுகதைகளின் நாடகவடிவைக் கண்டேன், அரங்கு நிரம்பிய கூட்டம், மழைக்குள்ளாகவே நாடகம் நடைபெற்றது, கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் பார்வையாளர்கள் நாடகம் பார்த்தார்கள் தமிழின் சிறந்த சிறுகதைகளை இன்றைய சூழலோடு பொருத்தி சிறப்பாக மேடையேற்றினார்கள். பங்குபெற்ற நடிகர்கள் அத்தனை பேரும் பயிற்சி மாணவர்கள், அவர்களின் தேர்ந்த நடிப்புமும் உற்சாகமான பங்கேற்பும் மிகுந்த சந்தோஷம் அளித்தது. இதனைச் சாத்தியமாக்கியவர் தியேட்டர் லேப்பின் இயக்குனர் ஜெயராவ், அவருக்கும் …

கொண்டாட வேண்டிய நாடகம் Read More »

ஆர்மீனியப் பாலம்

செயின்ட் தாமஸ் மவுண்டில் உள்ள தேவாலயத்திற்குச் சென்று வருவதற்கு உதவியாகச் சைதாப்பேட்டைக்கும் கிண்டிக்கும் இடையே அடையாற்றில் 1726இல் முதன் முதலாகத் தரைப்பாலம் கட்டியவர் ஆர்மேனிய வணிகர் கோஜா பெட்ரஸ் உஸ்கான் . இதற்காக அவர் 30 ஆயிரம் வராகன் செலவு செய்திருக்கிறார். அதுதான் அடையாறு மர்மலாங் பாலம். இதுமட்டுமின்றி மலை மீது ஏறுவதற்கு வசதியாக 135 படிகளையும் கட்டிக் கொடுத்திருக்கிறார் பெட்ரஸ் உஸ்கான். ஆர்மீனியப் பாலத்தின் காட்சியிது. தாமஸ் மற்றும் வில்லியம் டேனியல் வரைந்த அரிய ஒவியங்களில் …

ஆர்மீனியப் பாலம் Read More »

கதைகள் காத்திருக்கின்றன

நாடகக் கலைஞர் ஜெயராவ் சிறந்த நடிகர், பயிற்சி வல்லுனர். கூத்துப்பட்டறையில் பயின்ற கலைஞர். இவர் தியேட்டர் லேப் என்ற நடிப்புப் பயிற்சி மையத்தைக் கே.கே. நகரில் நடத்தி வருகிறார். தியேட்டர் லேப் கடந்த பத்து ஆண்டுகளாக நவீன நாடக தயாரிப்புகளிலும், இளம் நடிகர்களை உருவாக்குவதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது, பள்ளி கல்லூரிகளுடன் இணைந்து நாடகப்பயிற்சி கொடுப்பது, சினிமாவில் நடிக்க விரும்புகிறவர்களுக்குப் பயிற்சி தருவது, தமிழின் முக்கிய நாடகபிரதிகளை மேடையேற்றுவது எனத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இயங்கி வருகிறது தியேட்டர் …

கதைகள் காத்திருக்கின்றன Read More »

முகாமில் இரண்டு நாட்கள்

திண்டுக்கல்லில் நடைபெற்ற நாவல் இலக்கிய முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிஞர் தேவதச்சன், தோழர் எஸ்.ஏ.பெருமாள், விமர்சகர் முருகேச பாண்டியன், மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ், எழுத்தாளர் ஷாஜகான், எழுத்தாளர் விநாயகமுருகன், எழுத்தாளர் முருகவேள், கவிஞர் நேசமித்ரன், எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், காந்திகிராமப்பல்கலைகழகப் பேராசிரியர் முனைவர் பிச்சை, அந்திமழை ஆசிரியர் அசோகன், உள்ளிட்ட 60 பேர்கள் கலந்து கொண்டார்கள். 50 முதல் 75 பேர் வரை கலந்து கொண்டால் போதும், அப்போது தான் பரஸ்பரம் முகம் பார்த்துப் பேசிக் கொள்ளவும், …

முகாமில் இரண்டு நாட்கள் Read More »

முகாமில் சந்திப்போம்

ஜுன் 14 மற்றும் 15 தேதிகளில் திண்டுக்கல்லில் நடைபெற உள்ள நாவல் இலக்கிய முகாமிற்கு நிறைய வாசகர்கள் ஆர்வமாக முன்பதிவு செய்திருப்பது சந்தோஷம் அளிக்கிறது. முகாமினைச் சிறப்பிக்க முக்கிய எழுத்தாளர்களும் விமர்சகர்களும் கலந்து கொள்கிறார்கள். சென்னையில் இருந்து வரும் வாசகர்கள் நண்பர் வேடியப்பனுடன் இணைந்து பயணம் செய்ய இருக்கிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும் வாசகர்கள் நேரடியாக முகாம் நடைபெறும் லைப் சென்டர், திண்டுக்கல் வளாகத்திற்கு வந்து சேர்ந்து கொள்ளவும். திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து நத்தம் செல்லும் …

முகாமில் சந்திப்போம் Read More »