ஏழாம் நாள் பேருரை
கடந்த ஒருவார காலமாக நான் நடத்திய உலகசினிமா பேருரையின் இறுதிநாள் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது, ஏழு உரைகளில் சாப்ளின் பற்றிய சொற்பொழிவே ஆகச்சிறந்ததாக இருந்தது எனப்பலரும் பாராட்டினார்கள், அத்துடன் அன்று நடைபெற்ற எனது நான்கு நூல்களின் வெளியீட்டுவிழாவும் சிறப்பாக நடைபெற்றது, இந்த விழாவில் எழுத்தாளர் சா.கந்தசாமி, எழுத்தாளர் பாவண்ணன், எழுத்தாளர் இறையன்பு ஐஏஎஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் உலகசினிமா பேருரைக்கு என்னோடு இணைந்து பல்வேறு விதங்களிலும் ஒத்துழைப்பு செய்த நண்பர்கள் மாரிமுத்து என்கிற …