அறிவிப்பு

பெயர் குழப்பம்

சக்கரவர்த்தி பீட்டர், வீரம் விளைந்தது என்ற இரண்டு ரஷ்ய நூல்களை நான் மொழிபெயர்ப்பு செய்துள்ளேன் என நினைத்து பலரும் என்னைத் தொடர்பு கொண்டு அதன் பிரதிகளைக் கேட்கிறார்கள். நான் இந்த நூல்களை மொழியாக்கம் செய்யவில்லை. அதைச் செய்தவர் தோழர் எஸ்.ஆர்.கே. இவர் ஜெயகாந்தனின் ஆசான்.மதுரைச் சேர்ந்த டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன். இடது சாரி இயக்கத்தலைவர். அவர் தான் இந்தநூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார் பலரும் எஸ். ராமகிருஷ்ணன் என்றதும் நான் என நினைத்துக் குழம்பிக் கொள்கிறார்கள். டாக்டர் எஸ்.ஆர்.கே …

பெயர் குழப்பம் Read More »

ஞானக்கூத்தன்

கவிஞர் ஞானக்கூத்தனின் அபூர்வமான  புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் இன்று பார்த்தேன். சில நாட்களுக்கு முன்பு கவிஞர் தேவதச்சனோடு பேசிக் கொண்டிருக்கையில் ஞானக்கூத்தனின் மறைவை தன்னால் இன்னமும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிக் கொண்டிருந்தார். ஞானக்கூத்தனின் புன்னகை வசீகரமானது.  பெரும்பான்மை புகைப்படங்களில் அவர் சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் அவரது இளமையின் புன்னகையை அடையாளப்படுத்துகிறது. நன்றி https://www.gnanakoothan.com/

வாழ்த்துகள்

சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் One Story Project-இன் ஒரு பகுதியாக எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜின் தர்மரதம் கதை தேர்வு செய்யப்பட்டு மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள் சித்துராஜ் பொன்ராஜின் கதைகள் புதிய கதைமொழியில் நாம் அறியாத உலகை அடையாளம் காட்டுகின்றன.  மிகத் தீவிரமான வாசகர். உலக இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர்.  சிங்கப்பூரின் வரலாற்றையும் சமகாலத்தையும் புதிய வெளிச்சத்தில் எழுதும் அவரது படைப்புகள் அங்கீகாரம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது ••

காலச்சுவடு இதழில்

ஆகஸ்ட் மாத காலச்சுவடு இதழில் எழுத்தாளர் ஜே.டி.சாலிஞ்சர்  பற்றிய ஆவணப்படம் குறித்து கட்டுரை எழுதியிருக்கிறேன் காலச்சுவடு இதழை வாசிக்க : https://www.kalachuvadu.com ** august 1 20

அஞ்சலி

தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளியும் அன்புமிக்க நண்பருமான எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களின் மறைவிற்கு இதயப் பூர்வமான அஞ்சலி

குறுங்கதைகளின் வழியே

இந்த ஊரடங்கு காலத்தில் 125 குறுங்கதைகள் எழுதியிருக்கிறேன். குறுங்கதை எழுதுவது பெரிய நாவல் எழுதுவதை விடவும் மிகச் சவாலானது குறுங்கதை எனும் வடிவம் இல்லாத நாடேயில்லை. அதை மிக அதிகமாக மதம் பயன்படுத்தியிருக்கிறது. கதை சொல்லாத ஞானியே இல்லை. நாட்டுப்புறக்கதைகளில் குறுங்கதை வடிவமே பிரதானமாக உள்ளது. எழுத்து மரபு உருவானபிறகு தான் குறுங்கதைகள் நீட்சியடைந்தன. நவீன இலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகள் பலரும் குறுங்கதை வடிவத்தைப் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். மெய் தேடல், தத்துவம் மிகைபுனைவு. மயா யதார்த்தம், கனவுத்தன்மை, …

குறுங்கதைகளின் வழியே Read More »

பிரெஞ்சில்

நீரிலும் நடக்கலாம் என்ற எனது சிறுகதை பிரெஞ்சு மொழியில் வெளியாகியுள்ளது. வசுமதி பத்ரிநாத் மொழியாக்கம் செய்திருக்கிறார். கொரனா காலத்தின் நெருக்கடியை உணர்த்துவது போல சர்வதேச எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தேர்வு செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். அதில் இந்தக் கதையும் இடம்பெற்றுள்ளது. சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ள வசுமதி பத்ரிநாத் அவர்களுக்கு மனம் நிரம்பிய நன்றி ••

தேசாந்திரி சந்தாதாரர்களுக்கு ந்ன்றி

Desanthiri youtube channel தற்போது 10,000 சந்தாதாரர்களை கடந்துள்ளது.  உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து உங்கள் ஆதரவை அளிக்க தேசாந்திரி சேனலை  subscribe செய்து இந்த பயணத்தில் இனனந்து கொள்ளுங்கள். DESANTHIRI CHANNEL SUBSCRIPTION LINK https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg?sub_confirmation=1 தேசாந்திரி உறுப்பினராக இணைவதற்கான இணைப்பு desanthiri membership link https://www.youtube.com/channel/UCgR7-JP41pV_beUBAYjzNMg/join

அவளது வீடு

அமெரிக்காவில் வாழும் வித்யா சுபாஷ் சிறந்த தமிழ் கதைகளை ஆடியோவாக ஒலிபரப்பு செய்து வருகிறார். இந்த தொடரில் எனது சிறுகதை அவளது வீடு ஒலிபரப்பு செய்திருக்கிறார். சிறப்பான பதிவு. அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி. இணைப்பு: https://youtu.be/Y3WS3APw2hQ

பருத்திப் பெண்டிர்

ஆர். பாலகிருஷ்ணன் IAS சங்க இலக்கியங்கள் குறித்துத் தொடர் உரைகளை இணையம் வழியாக நிகழ்த்தி வருகிறார். அதில் கடந்தவாரம்  பருத்திப் பெண்டிர் என்ற தலைப்பில் மிகச் சிறப்பான உரை ஒன்றை நிகழ்த்தினார். ஆர். பாலகிருஷ்ணன் IAS தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர் என்பதுடன் இந்திய ஆட்சிப்பணியின் மூத்த அதிகாரியாக இருப்பவர் என்பதால் புதிய வெளிச்சத்தில் சங்க இலக்கியங்களை அறிமுகம் செய்கிறார்.  இந்த உரை அவரது அறிவு விசாலத்தின் அடையாளம். தன்னை ஒரு தமிழ் மாணவன் என்று பெருமையோடு …

பருத்திப் பெண்டிர் Read More »