இலக்கியம்

பையன் கதைகள்

வி.கெ. என் மலையாளத்தில் முக்கியமான எழுத்தாளர். அவரது பையன் கதைகள் தமிழில் சாகித்ய அகாதமி வெளியீடாக வந்துள்ளது. 2014ல் கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா வி.கெ.என் பையன் கதைகளில் சிலவற்றை மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். அவர் மொழியாக்கம் செய்த கதை ஒன்றை நான் வாசிக்கும்படி அப்போது மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருக்கிறார். நானும் அவரைப் பாராட்டி பதில் எழுதியிருக்கிறேன். அந்த மின்னஞ்சலை இன்று பார்த்தபோது ஸ்ரீபதி சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து போன நினைவு மனதில் ஆழமான வலியை உருவாக்கியது. …

பையன் கதைகள் Read More »

கவிதையின் இடம்.

The Ecco Anthology of International Poetry என்ற பன்னாட்டுக் கவிதைகளின் தொகுப்பை வாசித்தேன். இந்தியக்கவிதைகள் இதில் குறைவு. தமிழ்க் கவிதைகள் இல்லவே இல்லை. பெரும்பான்மை உலகக் கவிதைத் தொகுப்புகளிலும் இதே நிலை தான். காரணம் இதன் தொகுப்பாசிரியருக்கு இந்தியக் கவிதைகள் பற்றி எதுவும் தெரியாது. மேலும் தமிழ் கவிதைகளின் ஆங்கில மொழியாக்கம் வெளியாவதும் குறைவு என்பதால் நவீன தமிழ்க் கவிதையின் மகத்தான பங்களிப்பு இன்றும் உலகின் கவனத்தைப் பெறவேயில்லை. Antonio Machado, Osip Mandelstam, Vladimir …

கவிதையின் இடம். Read More »

இரண்டு கவிஞர்கள்

வேறுவேறு காலகட்டத்தில் வாழ்ந்த இரண்டு கவிஞர்களின் வாழ்க்கையை ஒப்பு நோக்கும் போது அவர்கள் ஒன்று போலவே வாழ்ந்திருப்பதைக் காணமுடிகிறது. சீனாவின் புகழ்பெற்ற கவிஞரான லி பெய் மற்றும் உருதுக் கவி மிர்ஸா காலிப் இருவரும் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை அரசிடம் மன்றாடுவதற்காகச் செலவு செய்திருக்கிறார்கள். இருவருமே தாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் மக்களால் கொண்டாடப்பட்ட கவிஞர்கள். தங்களை ராஜவிசுவாசியாகக் கருதியவர்கள். ஆனால் அவர்களின் நியாயமான ஆசை கடைசி வரை நிறைவேறவேயில்லை. உருதுக் கவிஞர் மிர்ஸா காலிப் 1857ல் நடைபெற்ற …

இரண்டு கவிஞர்கள் Read More »

கேள்வியும் பதிலும்.

The First City டெல்லியிலிருந்து வெளியாகும் கலை இலக்கிய இதழ். இதில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பு இரண்டு தொகுதிகளாக வெளித்துள்ளன. அவற்றைச் சில ஆண்டுகளுக்கு முன்பாகப் பழைய புத்தகக் கடை ஒன்றில் வாங்கினேன். இந்தியாவின் மிக முக்கியமான ஓவியர்கள். இசைக்கலைஞர்கள். திரைப்பட இயக்குநர்கள். எழுத்தாளர்கள். வரலாற்று ஆய்வாளர்கள். சூழலியல் அறிஞர்களின் நேர்காணல்கள் கொண்ட இந்தத் தொகுப்பு மிகச்சிறப்பானது.. The Paris Review Interviews தொகுதிகளுக்குப் பிறகு இவற்றையே அடிக்கடி எடுத்து வாசிப்பது வழக்கம். எழுத்தாளர்களின் நேர்காணலைப் பொருத்தவரை …

கேள்வியும் பதிலும். Read More »

அரண்மனை நாய்

எழுத்தாளர் கந்தர்வன் மிகச்சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார். இவரது சாசனம் என்ற சிறுகதையை இயக்குநர் மகேந்திரன் திரைப்படமாக்கியிருக்கிறார். ராமநாதபுர நினைவுகளையும் புதுக்கோட்டையைச் சுற்றிய செம்மண் நிலத்தின் வாழ்க்கையினையும் கந்தர்வன் அதிகம் எழுதியிருக்கிறார். அபூர்வமான கதாபாத்திரங்கள். வாழ்க்கைச் சூழல்களை விவரிக்கும் கதைகள். அரசு அலுவலகத்தில் நடக்கும் அதிகாரப்போட்டி. எளிய மனிதர்களின் போராட்டம், குடும்பத்தில் பெண்கள் படும் துயரம், வாழ்ந்து கெட்டவர்களின் வாழ்க்கை என கந்தர்வன் காட்டிய உலகம் அசலானது. நேர்மையாக எழுதப்பட்டது.. கந்தர்வனின் அரண்மனை நாய் என்ற சிறுகதை எனக்கு …

அரண்மனை நாய் Read More »

தூரதேசவாதியின் நெடும்பயணக் குறிப்பு

 ( ‘உப பாண்டவம்’ நாவலை முன்வைத்து) முனைவர் ப. சரவணன்       எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய நாவல்களுள் முதன்மையானதும் முக்கியமானதுமான நாவல் ‘உப பாண்டவம்’. அதன் கதைக்களம் மகாபாரதம். இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் மகாபாரதம் பற்றிய அடிப்படைப் புரிதல் இருக்கும். காரணம், மகாபாரதம் இந்தியத் தொல் மரபில் நீக்கமுடியாத ஓர் அடுக்கு அடித்தளம். ஒட்டுமொத்த இந்தியக் குடிமக்களையும் நரம்பில் கோத்த மணிகளாக மாற்றி, மணிமாலையாக உருவாக்கி, ஒளிரச் செய்வது  மகாபாரதம் அன்றி வேறேது? அத்தகைய இந்தியக் …

தூரதேசவாதியின் நெடும்பயணக் குறிப்பு Read More »

மூன்றாம் உலகிலிருந்து வருகிறவன்

நாகிப் மாஃபௌஸ் (நோபல் பரிசு ஏற்புரையின் ஒரு பகுதி) தமிழில் சா.தேவதாஸ். என் பெயர் இப்பரிசிற்காக அறிவிக்கப்பட்டவுடன், அந்த இடம் சட்டென்று நிசப்தமானதாகவும், பலரும் நான் யார் என்பது அறியாமல் வியந்ததாகவும் ஓர் அயல் நாட்டு நிருபர், கெய்ரோவில் என்னிடம் கூறினார். எனவே இயன்றவரையில் சுருக்கமாக என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டுகிறேன். சரித்திரத்தின் ஒரு கட்டத்தில் இருவேறு நாகரிகங்களுக்கிடையே நிகழ்ந்த ஒரு சந்தோஷமான திருமணத்தின் மூலம் பிறந்தவன் நான். இவற்றில் முதல் நாகரிகத்திற்கு ஏழாயிரம் வயதாகிறது. அது …

மூன்றாம் உலகிலிருந்து வருகிறவன் Read More »

கிழவனும் இளைஞனும்

பழமையான சீனக்கதை ஒன்றை வாசித்தேன் மழைக்காலம் ஒன்றில் குடையோடு ஒரு இளைஞன் ஆற்றுப்பாலத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அந்தப் பாலத்திலிருந்த ஒரு பிச்சைக்காரக் கிழவன் அவனைக் கண்டதும் தனது இடதுகாலில் அணிந்திருந்த செருப்பை ஆற்றில் தூக்கிவீசிவிட்டு அதை எடுத்துத் தரும்படி கேட்கிறான் .இளைஞனும் கிழவன் மீது பரிதாபம் கொண்டு ஆற்றில் குதித்துச் செருப்பை மீட்டுக் கொண்டுவந்து கொடுக்கிறான். இப்போது பிச்சைக்காரன் புன்சிரிப்புடன் தனது வலதுகால் செருப்பை ஆற்றில் வீசி எறிந்து அதை எடுத்துக் கொண்டு வரச் சொல்கிறான். …

கிழவனும் இளைஞனும் Read More »

மார்க்வெஸின் கடைசி நாட்கள்.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் மறைவிற்குப் பிறகு அவரது கடைசி நாட்களைப் பற்றியும், குடும்பத்தினர் அதை எதிர்கொண்டவிதம் பற்றியும் நினைவு கூர்ந்து அவரது மகன் ரோட்ரிகோ கார்சியா A FAREWELL TO GABO AND MERCEDES என ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ரோட்ரிகோ கார்சியா ஹாலிவுட்டில் திரைப்பட இயக்குநராக உள்ளார் இந்நூல் மார்க்வெஸ் மற்றும் அவரது மனைவியின் மறைவைப் பற்றிய மகனின் துயர நினைவுகளைப் பேசுகிறது முதுமையில் மார்க்வெஸ் மெல்லத் தனது நினைவாற்றலை …

மார்க்வெஸின் கடைசி நாட்கள். Read More »

இரண்டு கிழவர்கள்

விகடன் தீபாவளி மலரில் வெளியான சிறுகதை டெல்லிக்கு விமானத்தில் தான் போக வேண்டும் என்று பட்டாபிராமன் நினைத்தார். பின்பு காந்தி ஒருமுறை கூட விமானத்தில் போனதில்லையே. நாம் ஏன் காந்தி சமாதியைக் காண விமானத்தில் போக வேண்டும் என்று தோன்றியது. உடனே டெல்லி ரயிலில் டிக்கெட் போட்டார். காந்தி சமாதியை பார்க்க வேண்டும் என்பதற்காக டெல்லி போகிறேன் என்று மகனிடம் சொன்னால் ஒத்துக் கொள்ளமாட்டான். இந்த வயதான காலத்தில் எதற்காகக் காந்தி சமாதியைப் பார்க்க வேண்டும். பல …

இரண்டு கிழவர்கள் Read More »