புத்தக வெளியீட்டு நிகழ்வு.

நேற்று எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிரம்பிய கூட்டம். நிறைய இளைஞர்கள் வந்திருந்தார்கள். கோவை, சேலம், திருச்சி, மதுரை, தஞ்சை. கும்பகோணம் என பல ஊர்களிலிருந்தும் நிகழ்விற்காக வாசகர்கள் வந்திருந்தது மகிழ்ச்சி அளித்தது. திருப்புகழ் ஐஏஎஸ் எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலை வெளியிட்டுச் சிறப்பான உரையை நிகழ்த்தினார். ஒரு நாவலை எப்படி வாசிக்க வேண்டும். அதில் எந்தெந்த விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதைப் பற்றி அவரது பார்வைகள் மிக முக்கியமானவை. அபாரமான …

புத்தக வெளியீட்டு நிகழ்வு. Read More »

உதிரமே கவிதையாகிறது.

ஏழு புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்கப் படைப்பாளிகளின் நேர்காணல்கள் கொண்ட Seven voices தொகுப்பினை வாசித்தேன். ரீடா கிபர்ட் நேர்காணல் செய்திருக்கிறார். எழுத்தாளர்களின் நேர்காணல்களை வாசிக்கும் போது அவர்கள் படைப்புகளுக்கு வெளியே பகிர்ந்து கொள்ள விரும்பும் அபிப்ராயங்கள். இலக்கிய நுட்பங்கள். அரசியல் நிலைப்பாடுகள். உணவுப்பழக்கங்கள். வாசிப்புப் பழக்கம். இசை மற்றும் பொது ரசனை குறித்து அதிகம் தெரிந்து கொள்ள முடியும். இந்தத் தொகுப்பு எழுத்தாளர்களின் விரிவான நேர்காணலைக் கொண்டது. ஐம்பது பக்கங்களுக்கும் மேலாக ஒருவரது நேர்காணல் இடம்பெற்றுள்ளது. லத்தீன் …

உதிரமே கவிதையாகிறது. Read More »

ஐந்து சூரியகாந்திப்பூக்கள்

உலகெங்கும் சூரியகாந்திப்பூக்களைக் காத்திருப்பின் அடையாளமாகவே கருதுகிறார்கள். ஆனால் ஓவியர் வான்கோ அவற்றைப் புரிந்து கொள்ளப்படாத சந்தோஷத்தின் வடிவமாகக் காணுகிறார். அவர் வரைந்த சூரியகாந்திப்பூக்களின் ஓவியங்கள் லண்டன், டோக்கியோ, ம்யூனிச், ஆம்ஸ்டர்டாம், பிலடெல்பியா ஆகிய ஐந்து நகரங்களின் கலைக்கூடங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வான்கோவின் சூரியகாந்திப்பூக்கள் பற்றி Sunflowers (2021) என ஒரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது. டேவிட் பிக்கர்ஸ்டாஃப் இயக்கியுள்ளார். இவர் முன்னதாக வான்கோ பற்றி இரண்டு ஆவணப்படங்களை உருவாக்கியிருக்கிறார் இந்தப் புதிய ஆவணப்படத்தில் பிக்கர்ஸ்டாஃப் சூரியகாந்திப் பூக்கள் …

ஐந்து சூரியகாந்திப்பூக்கள் Read More »

புத்தக வெளியீட்டு விழா

டிசம்பர் 25 சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு ரஷ்ய கலாச்சார மையத்தில் எனது புதிய நூல்களின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம். முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயம். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். வெளியிடப்படவுள்ள நூல்கள் மண்டியிடுங்கள் தந்தையே / நாவல் ஐந்து வருட மௌனம் / சிறுகதை தொகுப்பு காந்தியின் நிழலில் / கட்டுரைத் தொகுப்பு நேற்றின் நினைவுகள் / கட்டுரைத் தொகுப்பு டான்டூனின் கேமிரா / சிறார் நாவல் காலத்தின் …

புத்தக வெளியீட்டு விழா Read More »

பார்வையற்றவர்களுக்கான சிறப்பு நூல்

பார்வையற்றவர்கள் வாசிப்பதற்காக பிரெயில் முறையில் டான்டூனின் கேமிரா என்ற எனது சிறார் நூல் வெளியிடப்படுகிறது. இதனைச் சாத்தியப்படுத்தியவர் எனது நண்பர் ஆடிட்டர் சந்திரசேகர். தேசிய பார்வையற்றோர் சம்மேளனம் சார்பில் இதனைக் கொண்டுவருகிறார்கள். அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும் இந்த நூலும் டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் வெளியிடப்படுகிறது.

நூலக மனிதர்கள்

பொது நூலகங்கள் குறித்தும் நூலகத்தில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றிய நினைவுக்குறிப்புகளும் கொண்ட புத்தகம். நூலகமனிதர்கள் டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறும் விழாவில் வெளியிடப்படுகிறது இந்நூலை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது

திசை எட்டும் இதழில்

திசை எட்டும் இம்மாத இதழில் எனது சிறுகதையின் ஆங்கில மொழியாக்கம் வெளியாகியுள்ளது. மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் டாக்டர் சந்திரமௌலி.

விகடன் இணையதளத்தில்

ஆனந்தவிகடன் இணையதளத்தில் எனது நேர்காணல் வெளியாகியுள்ளது. “கூழாங்கல்லின் மௌனம் போன்றதே எனது நிதானம்”- எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல் நா.கதிர்வேலன் தமிழ் இலக்கிய உலகின் வசீகர படைப்பாளுமைகளில் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன். தன் எழுத்து வாழ்வில் காவிய கட்டத்தில் நிற்கிற அவர் தற்போது ‘மண்டியிடுங்கள் தந்தையே’ என்ற தலைப்பில் டால்ஸ்டாயை முன்வைத்து நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார். வரும் ஆண்டின் புத்தகத் திருவிழாவின் முக்கியமான புத்தகமாக இந்நாவல் வாசகர் மனம் கவரக் காத்திருக்கிறது. அதற்கான உரையாடலாக நடந்தது இந்த சந்திப்பு. …

விகடன் இணையதளத்தில் Read More »

டான்டூனின் கேமரா

ஒரு எறும்பு போட்டோகிராபராக மாறும் கதை தான் டான்டூனின் கேமரா இந்த சிறார் நூலுக்காக அழகிய வண்ண ஓவியங்களை பிரபல ஓவியர் கே.ஜி. நரேந்திரபாபு வரைந்து கொடுத்திருக்கிறார் டிசம்பர் 25 மாலை சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் இந்நூல் வெளியிடப்படவுள்ளது தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது

காற்றில் பறக்கும் வேட்டைக்காரர்கள்

ஜார்ஜ் கேட்லின்(George Catlin) ஓவியங்களில் காணப்படும் அமெரிக்கப் பூர்வகுடிகளின் வாழ்க்கை வியப்பூட்டக்கூடியது காட்டெருமைகளைத் துரத்தி வேட்டையாடும் ஓவியத்தில் அந்த எருமைகள் ஓடிவரும் வேகமும் நிலவெளியின் பிரம்மாண்டமும் வில்லேந்தியபடியே குதிரையில் வரும் இனக்குழுவின் ஆவேசமும் பரவசமளிக்கின்றன. கூட்டமாகக் காட்டெருமைகள் பாய்ந்து வருவதை எவ்வளவு அழகாக வரைந்திருக்கிறார். உடலை வளைத்துத் திரும்பி வில்லேந்தும் வீரனின் தோற்றமும் எருதுகளின் ஆவேசப் பாய்ச்சலும் ஒவியத்தை உயிரோட்டமாக்குகின்றன. வேகத்தை ஓவியத்தில் கொண்டு வருவது எளிதானதில்லை. அதிலும் அகன்ற நிலவெளியின் ஊடே குதிரை வீரர்கள் காற்றில் …

காற்றில் பறக்கும் வேட்டைக்காரர்கள் Read More »