பிரெய்லி வடிவில்
தேசிய பார்வையற்றோர் சங்கம் சார்பில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நூல் பிரெய்லி வடிவில் வெளியீடு ** தேசிய பார்வையற்றோருக்கான சங்கம் சார்பில் லூயி பிரெயிலின் 209-வது பிறந்த நாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. தேசிய பார்வையற்றோர் சங்கம் சார்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘உலகின் மிகச் சிறிய தவளை’ என்ற நூல் பிரெய்லி வடிவில் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. பார்வையற்றோர் கல்வி கற்பதற்காக ‘பிரெய்லி’ முறையைக் கண்டறிந்த லூயி பிரெய்லியின் 209-வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய …
சிறுகதை நூற்றாண்டு -சிறப்புவிழா
தி இந்து தமிழ் நாளிதழ் தமிழ் சிறுகதை நூற்றாண்டினைக் கொண்டாடும் விதமாக சிறப்புவிழா ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நான் உரையாற்றுகிறேன். நிகழ்வினை எழுத்தாளர் ந.முத்துசாமி துவங்கி வைக்கிறார். விருதுகளை வழங்கி எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி சிறப்புரை ஆற்றுகிறார் சேத்பட்டிலுள்ள லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் விழா நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்
கவிதைகளுடன் ஒரு நாள்
அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞர் சார்லஸ் சிமிக் தனக்கு மிகவும் பிடித்தமான செர்பியக்கவிஞரான MILAN DJORDJEVIC கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். இதற்கு சிமிக் எழுதியுள்ள அறிமுகவுரை முக்கியமானது. சிமிக் மொழியாக்கம் செய்த Oranges And Snow Selected Poems of Milan Djordjevic என்ற கவிதைத்தொகுதியை இன்று வாசித்தேன். சமகால உலகக்கவிதைகளில் Milan Djordjevic மிக முக்கியமானவர். 1954ல் பெல்கிரேடில் பிறந்தவர் மிலன் ஜோர்ஜிவிக். அவரது அப்பா ஒரு கட்டிடக்கலை நிபுணர். மிலன் ஜோர்ஜிவிக்கின் கவிதை …
திருடனின் மூன்று அற்புதங்கள்.
சிறுகதை இன்றிருப்பது போன்ற பரபரப்பான வாகனப்போக்குவரத்து, ஜனநெருக்கடி 1960களில் இல்லை. பிழைப்பு தேடிப் பலரும் மெட்ராஸிற்கு வருவது போலவே தெக்கனும் வந்து சேர்ந்தான். அப்போது அவனுக்கு வயது இருபத்தியெட்டு. மதராஸில் அவனுக்குத் தெரிந்த மனிதர்கள் ஒருவர் கூடக் கிடையாது. அதைப்பற்றி நினைக்கும் போது தெக்கன் மனதிற்குள் சிரித்துக் கொள்வான். அப்போது அவனது மனதில் இப்படித் தோன்றும் “திருடனுக்கு எதற்குத் தெரிந்த மனிதர்கள்“ ஆம். தெக்கன் திருடுவதற்காகத் தான் மதராஸிற்கு வந்து சேர்ந்தான். அதற்கு முன்பு வரை பழனி, …
நிகழ்ச்சிகள்
04.01.2018 மாலை பிரெயில் நூல் வெளியீட்டுவிழா – சவேரா ஹோட்டல் 05.01.2018 மாலை தமிழ்ப் பிரபாவின் நாவல்“ பேட்டை“ வெளியீட்டுவிழா – கன்னிமாரா நூலகம் 06.01.2018 மாலை 4 மணி வாசிப்பு அரங்கம் -தக்கர் பாபா தி.நகர். 06.01.2018 மாலை 6 மணி அமீன் நூல் வெளியீடு- கவிக்கோ மன்றம்.
குறும்படமாகவுள்ள கதைகள்
தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் என்ற எனது புதிய சிறுகதை தொகுப்பிலிருந்து ஓராயிரம் கைகள், வெறும் பணம் என்ற இரண்டு சிறுகதைகள் குறும்படமாக உருவாக்கபடவுள்ளன. ஒரே நாளில் இதற்கான அனுமதி கேட்டு இரண்டு இளைஞர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் குரலில் இருந்த ஆர்வமும் தீவிரமும் சந்தோஷம் அளித்தது. பிரதீப் என்ற இளைஞர் சிறுகதை தொகுப்பு பற்றி உற்சாகமாகப் பேசினார் “இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளில் பத்துகதைகளை எளிதாகக் குறும்படமாக்கி விடலாம். எதைத் தேர்வு செய்வது எனப்புரியாமல் தடுமாறிக் …
எனது உரை
தேசாந்திரி பதிப்பகம்’ துவக்க விழா எனது உரை https://www.youtube.com/watch?v=Z1AR6cE8J2I&feature=youtu.be
இவான் துர்கனேவ் பற்றி சிறப்புரை
புத்தகங்களுடன் புத்தாண்டினைக் கொண்டாடும் விதமாக டிஸ்கவரி புக் பேலஸ் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. அதில் இரவு 8 : 30 மணிக்கு எனது புதிய நூலான கடவுளின் நாக்கு குறித்த அறிமுகவிழா நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இரவு 9 :30 மணிக்கு ரஷ்ய இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான இவான் துர்கனேவ் பற்றி சிறப்புரை வழங்கயிருக்கிறேன் ரஷ்ய இலக்கியத்தின் நாயகர்கள் பலரைப் பற்றி முன்னதாகப் பேசியிருக்கிறேன். துர்கனேவ் பற்றி முதன்முறையாக உரையாற்ற இருக்கிறேன். இவான் துர்கனேவின் …