எவரெஸ்ட்

நேற்று மாலை எவரெஸ்ட் என்ற ஆங்கிலப்படம் பார்த்தேன், Baltasar Kormákur இயக்கியுள்ள இப்படம் 1996ல் நடைபெற்ற உண்மை நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது. எவரெஸ்ட் பயணம் மேற்கொள்வதற்காக நேபாளம் வந்து இறங்கும் குழு ஒன்றுடன் படம் துவங்குகிறது. நாமும் அவர்களுடன் இணைந்து பயணிக்கத் துவங்குகிறோம். பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கிறது இமயம், பனிபடர்ந்த அதன் கம்பீரம் நம்மை மயக்குகிறது. அடிவாரத்தில் நின்றபடியே தாங்கள் செல்ல வேண்டிய சிகரத்தை வியந்து பார்க்கிறார்கள் பயணக்குழுவினர். இமயத்தின் அழகை கண்டு நம் அகம் …

எவரெஸ்ட் Read More »

நவீனத் தமிழ் நிலத்தை எழுதுதல்

பேராசிரியர் அ.ராமசாமி நான் பெரிதும் மதிக்கும் கல்வியாளர். இலக்கிய விமர்சகர். நாடக இயக்குனர். அவர் எனது யாமம் நாவல் குறித்து தீராநதியில் எழுதியுள்ள விமர்சனக்கட்டுரை ••• நவீனத் தமிழ் நிலத்தை எழுதுதல் : அ.ராமசாமி எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் : 1960-1970 வரையிலான பத்தாண்டுகள் விடுதலைக்குப் பிந்திய இந்தியவாழ்வின் முக்கியமான ஆண்டுகள். காலனிய இந்தியாவின் அடையாளங்கள் விலகிப்போன ஆண்டுகள். முதல் பிரதமர் பண்டித நேருவின் மரணம் அந்தப் பத்தாண்டுகளின் மத்தியில்(1964) தான் நடந்தது. ஆனால் அவரது திட்டங்களின் பலனும் அப்போதுதான் …

நவீனத் தமிழ் நிலத்தை எழுதுதல் Read More »

விளக்கு விருது

எழுத்தாளரும், சிறந்த மொழிபெயர்ப்பாளரும், விமர்சகருமான சி.மோகனுக்கு இவ்வாண்டிற்கான விளக்கு விருது அளிக்கப்படுகிறது. பா.சிங்காரம். சம்பத், ஜீ. நாகராஜன் போன்ற இலக்கிய ஆளுமைகள் குறித்த மோகனின் கட்டுரைகள் மிக முக்கியமானவை.  இந்த ஆளுமைகள் குறித்துத் தமிழ் இலக்கியம் கவனம் கொள்ள இக்கட்டுரைகளே முக்கியக் காரணமாக அமைந்தன. அவரது மொழிபெயர்ப்பில் வெளியான ஒநாய் குலசின்னம் மிக முக்கியமான படைப்பு. விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் ஒவியர் ராமானுஜத்தின் வாழ்வை மையமாகக் கொண்ட சிறந்த நாவல் நடைவெளிக் குறிப்புகள், காலம்,கலை,கலைஞன்  இவரது …

விளக்கு விருது Read More »

அறிமுக விழா

எம்ஜிஆர் அரசு திரைப்படக்கல்லூரி மாணவர் மோகன்குமார் எனது சிறுகதை புர்ராவை குறும்படமாக இயக்கியுள்ளார். இதன் அறிமுகவிழா வருகின்ற ஞாயிற்றுகிழமை ( 20.09.2015) மாலை ஐந்து முப்பது மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற உள்ளது. அனைவரும் இதில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் நாள் : 20.09.2015 நேரம் : மாலை 5,30 இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர், சென்னை …

அறிமுக விழா Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 28

வெல்வெட் தலையணைகளின் கதை மார்த்தா த்ராபா – தமிழில் ரெங்கநாயகி கிரீச்சிடும் மரப்படிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் மேலேறி, அந்த மேடையின் முன்னால் வந்து, தன் கைகளில் நீட்டியிருந்த அந்த வெல்வெட் தலையணையை விரித்து மேயரிடம் கொடுக்க முன்வரும் வரை நிமியா சான்ஷெஸ் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. ஏனோ, ஒரு கணம், தன் மனதை மாற்றிக் கொண்டவள்போலத் தோன்றினாள் அவள். ஒரு அரைவட்டமாய்த் திரும்பி ஞாயிற்றுக்கிழமைக்கான சிறப்பான ஆடை அணிந்து கொண்டு மேடையினை முன்புறம் நெருக்கியடித்துக் கொண்டு இருந்த …

எனக்குப் பிடித்த கதைகள் 28 Read More »

குந்தர் கிராஸ் கவிதை

முட்டையினுள்… தமிழில் :ஆர் சுவாமிநாதன் •• நாம் முட்டையினுள் வசிக்கிறோம் ஓட்டின் உட்புறச் சுவரில் ஒழுங்கற்ற சித்திரங்கள் நமது விரோதிகளின் முதற் பெயர்கள் தீட்டி விட்டோம் நாம் அடைக்காக்கப் போகிறோம் நம்மை அடைக்காக்கிற யாரோ நமது பென்சில்களையும் அடைகாக்கிறார்கள் முட்டையிலிருந்து விடுபடும் ஒருநாள் நம்மை அடைகாக்கிறவர் படத்தை நாம் உடனே வரைவோம். நாம் அடைக்காக்கப் பெறுகிறோம் என்று நாம் எண்ணிக் கொள்கிறோம். நல்ல சுபாவமுள்ள கோழி ஒன்றை கற்பித்துக் கொள்கிறோம். நம்மை அடைகாக்கும் கோழியின் வர்ணம், வம்சம் …

குந்தர் கிராஸ் கவிதை Read More »

எனக்குப் பிடித்த கதைகள் 27

ஒண்டிக்கட்டை   —மாக்ஸிம் கார்க்கி தமிழில் பாஸ்கரன் ஏழைகளைப் புதைக்கும் கல்லறையில் ஒரு பகுதியில் இலைகள் உதிர்ந்து, மழையினால் அரிக்கப்பட்டு, காற்றினால் அலைக்கழிக்கப் பட்ட மேடுகள். அங்கே கிழிந்த உடையும், கறுப்பு சால்வையும் அணிந்திருந்த ஒரு மாது, அல்லாடிப்போன இரண்டு பிர்ச் மரங்களின் நிழலில் உள்ள கல்லறை மேட்டிற்கு அருகில் உட்கார்ந்திருந்தாள். நரைகண்ட மயிர்ச்சுருள் கற்றையாக அவளது சுருங்கிய கன்னத்தில் புரண்டு கொண்டிருந்தது. அவளது உதடுகள் இறுக்கமாக மூடியிருந்தன. அதன் ஓரங்களில் ஒரு நெளிவு அவளது வாயின் இருபுறங்களிலும் …

எனக்குப் பிடித்த கதைகள் 27 Read More »

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள்

துணி துவைத்துக் கொண்டிருந்தேன் காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம் தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன் காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம் அடுத்த துணி எடுத்தேன் காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம். ————————————– சிறுமி கூவுகிறாள். நான் போகிற இடம் எல்லாம் நிலா கூடவே வருகிறதே. சிறுவன் கத்தினான். இல்லை. நில்லா என்கூட வருகிறது இருவரும் சண்டை போட்டுக்கொண்டு திருப்பத்தில் பிரிந்தனர். வீட்டிக்குள் நுழைந்து, உடன் வெளியே வந்து எட்டி பார்க்கிறாள். நிலா இருக்கிறதா? …

தேவதச்சனின் பதினைந்து கவிதைகள் Read More »

தேவதச்சன் நேர்காணல்

கவிதைக்கு ஏழெட்டு வேலைகள் படிகம் இதழில் வெளிவந்துள்ள கவிஞர் தேவதச்சன் நேர்காணல் கேள்விகள் – ரோஸ் ஆன்றா ,ஆகாசமுத்து,கோணங்கி,லக்ஷ்மி மணிவண்ணன் •••• கே-உங்கள் கவிதையில் வினோதமான காமம் செயல்படுகிறது.கவிதையில் காமத்தின் பங்கு என்னவாக இருக்கிறது? ப- காமத்தின் பங்கு கவிதையில் நிச்சயமாக இருக்கிறது.அதை உங்கள் வாழ்தலின் இயக்கம் முடிவு செய்யும்.என்னுடைய பதினாலு வயதில் என்னுடைய செக்சுவாலிட்டி அறிமுகம் ஆகிறது.காமத்தின் கொப்புளங்கள் வரத் தொடங்குகின்றன.அதனை என்னவென்றே என்னால் அந்த வயதில் அடையாள படுத்திக்க முடியவில்லை.நிம்மதியின்மை புதுசா இருக்கு.வெளியிலிருந்து எத்தகைய …

தேவதச்சன் நேர்காணல் Read More »

தேவதச்சனுக்கு விருது

என் இலக்கிய ஆசானும் நவீன தமிழ்கவிதையின் தனிப்பெருங்கவியுமான தேவதச்சனுக்கு இந்த ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேவதச்சனுக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள் இந்த விருதை அளிக்கும் விஷ்ணுபுரம் வாசக வட்டத்திற்கும் நண்பர் ஜெயமோகனுக்கும் மிகுந்த நன்றி ••• 1952இல் பிறந்த தேவதச்சன் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். கோவில்பட்டியில் நகைவணிகம் செய்து வருகிறார். எழுபதுகளில் எழுதத் தொடங்கியவர். முதல் கவிதைத் தொகுப்பு ஆனந்த் உடன் சேர்ந்து வெளியிட்ட ‘அவரவர் கைமணல்’ அதை தொடர்ந்து அத்துவான …

தேவதச்சனுக்கு விருது Read More »