விளக்கு விருது

நண்பர் கோணங்கிக்கு விளக்கு விருது அறிவிக்கப்பட்டிருப்பது சந்தோஷம் தருகிறது. அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்

புலியின் முன்னால் மன்றாடுகிறவன்

(இரண்டு தினங்களுக்கு முன்பு டெல்லி மிருகக்காட்சி சாலையில் ஒரு மனிதனை புலி அடித்துக் கொன்றுவிட்டது, அந்த சம்பவத்தைக் காணொளியாக ஒரு நண்பர் அனுப்பி பார்க்கச் சொல்லியிருந்தார். நேற்று காலை அதைப் பார்த்த நிமிசத்தில் மனது பாரம் கொண்டுவிட்டது. அப்புலியின் முன்னால் நான் நிற்பதை போலவே உணர்ந்தேன். அந்த மனிதன் புலியின் முன்னால் உயிருக்கு மன்றாடும் காட்சி கண்ணீரை வரவழைத்தது,  அது குறித்த பதிவிது) •••••• அந்த மனிதனின் பெயர் புலிக்குத் தெரியாது, அவன் ஒரு மனிதன், அது …

புலியின் முன்னால் மன்றாடுகிறவன் Read More »

விருட்சம் பரிசு

நவீன விருட்சம் இலக்கிய இதழ் சார்பாக ஒவ்வொரு மாதமும் தமிழில் வெளியாகிற சிறுகதைகளிலிருந்து சிறந்த ஒன்றினைத் தேர்வு செய்து பரிசு வழங்கி வருகிறார் எழுத்தாளர் அழகியசிங்கர். சென்ற மாதத்தின் சிறந்த கதையாக நான் எழுதிய எம்பாவாய் சிறுகதை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இக்கதை உயிர்மை இதழில் வெளியாகி வாசகர்களின் மிகுந்த பாராட்டினைப் பெற்றது. •••

வீடில்லாத புத்தகங்கள்

தி இந்துவில் வியாழன் தோறும் வீடில்லாத புத்தகங்கள் என்ற தலைப்பில் ஒரு பத்தி எழுதுகிறேன். இன்று முதல் அந்தப் பத்தி துவங்குகிறது. இணைப்பு : https://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/article6421560.ece?homepage=true

முரகாமியின் தனிமை

‘கார்டியன்’ இதழில் வெளியாகியுள்ள முரகாமியின் நேர்காணலில் இரண்டு விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தன. ஒன்று எவ்வளவு காலத்திற்கு இலக்கியம் வாசிக்கபடும் என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் 5 சதவீதம் பேரே தீவிரமாகப் புத்தகம் படிப்பவர்கள், அவர்கள் டிவியில் உலகப்கோப்பை போட்டிகளோ, சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோ எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல் புத்தகம் படித்துக் கொண்டிருப்பார்கள், ஒருவேளை புத்தகம் படிப்பதே தடைசெய்யப்பட்டால் கூட அவர்கள் காட்டிற்குள் சென்று தாங்கள் படித்த புத்தகங்களை நினைவு கொண்டபடியிருப்பார்கள், அவர்கள் மீது நம்பிக்கை வைத்தே …

முரகாமியின் தனிமை Read More »

நிகழ்வுகள்

சென்னை அண்ணாநகரில் எழுத்தாளர் தமிழ்மகன் நடத்தும் பொக்கிஷம் புத்தகக் கடையில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான நாகிப் மாஃபஸ் எழுதிய அரேபிய இரவுகளும் பகல்களும் நாவல் குறித்து உரையாற்றினேன். அரங்கு நிரம்பிய கூட்டம். நாவல்குறித்து வாசகர்களின் கலந்துரையாடல் சிறப்பாக நடைபெற்றது. மொழிபெயர்ப்பாளர் சா. தேவதாஸ் நிகழ்வில் கலந்து கொண்டு தனது மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். டிஸ்கவரி புக் பேலஸ், பனுவல், அகநாழிகை, பொக்கிஷம் என சென்னையில் உள்ள புத்தக கடைகள் தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகளை நடத்திவருவது …

நிகழ்வுகள் Read More »

கனவினைப்பின் தொடர்ந்து

கனவினைப்பின் தொடர்ந்து என்ற குழந்தைகளுக்கான சரித்திர நூலை வாசித்தேன். த.வெ.பத்மா எழுதிய The Forbidden Temple: Stories from the Past நூலை எழுத்தாளர் ஜே. ஷாஜஹான் மொழியாக்கம் செய்திருக்கிறார். எதிர் வெளியீடாக வெளியாகியுள்ளது அமெரிக்காவில் வசிக்கும் த.வெ.பத்மா கணிதம் மற்றும் வரலாறு சார்ந்து குழந்தைகளுக்கான புத்தகங்களை தொடர்ந்து எழுதிவருகிறார்.  இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவரது MATHEMATWIST: number tales from around the world கணிதம் குறித்த சுவாரஸ்யமான கதைகளின் தொகைநூலாகும். கற்காலத்தில் குழந்தைகள் …

கனவினைப்பின் தொடர்ந்து Read More »

தமிழ் இலக்கிய விருது

திருச்சி சமயபுரத்திலுள்ள எஸ்.ஆர்.வி. பள்ளி, சிறந்த எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள், சமூக சேவை செய்யும் ஆளுமைகளைக் கௌரவிக்கும் விதமாக வாழ்நாள் தமிழ் விருது, தமிழ் இலக்கிய விருது, சமநோக்கு விருது, படைப்பூக்க விருது என நான்கு விதமான விருதுகளை அளித்துவருகிறார்கள். இந்த ஆண்டிற்கான தமிழ் இலக்கிய விருது எனக்கு அளிக்கபடுவதாக எஸ். ஆர். வி. பள்ளி அறிவித்திருக்கிறது. இந்த விருதினை எழுத்தாளர்கள் பிரபஞ்சன், வண்ணதாசன் , வண்ணநிலவன் ஆகியோர் கடந்த காலங்களில் பெற்றிருக்கிறார்கள். எழுத்தாளர்கள் அசோகமித்ரன். எஸ். …

தமிழ் இலக்கிய விருது Read More »

புத்தக வெளியீட்டு விழாவில்

மதுரையில் நடைபெற்ற எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த தஞ்சை பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமலை. தோழர் எஸ். ஏ. பெருமாள். எழுத்தாளர் சுரேஷ் குமார இந்திரஜித். கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், எழுத்தாளர் எஸ்வி வேணுகோபால். டாக்டர் வெங்கடாசலம், எழுத்தாளர் ஷாஜகான், எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், ஆகியோருக்கும், உயிர்மை பதிப்பகத்திற்கும், நிகழ்வினைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும், செல்விக்கும், தொகுத்து வழங்கிய கவிஞர் ஆத்மார்த்திக்கும், , வருகை தந்த வாசகர்கள், நண்பர்கள் …

புத்தக வெளியீட்டு விழாவில் Read More »