இந்திய சினிமாவின் பெருமைக்குரிய இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் மதவெறியர்களால் தொடர்ந்து தாக்கப்படுவதையும் அவமதிக்கப்படுவதையும் கண்டித்து ஆகஸ்ட் 7 புதன்கிழமை கேரளாவின் திருச்சூரில் நடைபெற்ற கண்டனக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.அடூர் கோபாலகிருஷ்ணன் நம் காலத்தின் மகத்தான கலைஞன். அவரைச் சிறுமைப்படுத்தும் விதமாக கேரளாவில் மதவெறியர்கள் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருவதை கண்டித்துப் பேசியதுடன் தமிழ் எழுத்துலகம் அடூர் பக்கம் நிற்கும் என்று உரையாற்றினேன்.
இந்நிகழ்வில் மலையாளத் திரையுலகம் மற்றும் எழுத்துலகினைச் சார்ந்த முக்கியக் கலைஞர்கள், படைப்பாளிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். கொட்டும் மழையிலும் பெரும்திரளாகப் பார்வையாளர்கள் வந்து அடூருக்கான தங்களின் ஆதரவைத் தெரிவித்தார்கள்.
முன்னதாக கேரள சாகித்ய அகாதமி அலுவலகத்தில் ஷானு மாஸ்டர், எழுத்தாளர் மோகனன், எழுத்தாளர் முகுந்தன். எழுத்தாளர் விசாகன். எழுத்தாளர் அசோகன் செருவில். எழுத்தாளர் டி.டி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரையும் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளித்தது.
••