admin

படிப்பதற்காகவே வாழ்பவர்

ஒருவன் தனது வாழ்நாளிற்குள் பத்தாயிரம் மைல் நடக்க வேண்டும், பத்தாயிரம் புத்தகங்களை வாசித்து முடிக்க வேண்டும், அதுவே முழுமையான வாழ்க்கை என்கிறது சீனப்பழமொழி, இதை உண்மையாக்குவது போல படிப்பதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் 87 வயதான எஸ்.எஸ்.ஆர்.லிங்கம், அவரது முழுப்பெயர் சேதுராமலிங்கம். ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் இந்த அயராத படிப்பாளியைக் காண்பதற்காக சென்றிருந்தேன், எனது முதல்நாவல் உப பாண்டவத்தை வெளியிடுவதற்கு யாரும் முன்வராத காரணத்தால் நானே அதன் முதற்பதிப்பை வெளியிட்டேன், விருதுநகரில் இருந்த எனது முகவரிக்கு மணிஆர்டர் அனுப்பி புத்தகத்தைப் …

படிப்பதற்காகவே வாழ்பவர் Read More »

மதுரையில்

மதுரையில் நேறறு நல்ல மழை, கோடை இடியின் உக்கிரம், மின்னல்வெட்டின் வலிமை, காற்றோடு கூடிய மழை,   தோழர் எஸ் ஏபி வீட்டிலிருந்து மழையைப் பார்த்துக் கொண்டிருநதேன், மகிழ்ச்சியான அனுபவம் மழைக்குப் பிறகான மதுரை சற்று குளிர்ந்திருக்கிறது, வழக்கமான பணிகள் அத்தனையும் தூக்கி ஒரம் கட்டி வைத்துவிட்டு படிப்பது, இசை கேட்பது, படம் பார்ப்பது,  பயணம் என ஒய்வாக கழிகிறது நாட்கள் வீணையின் குரல் என்ற எஸ். பாலசந்தர்  வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வாசித்தேன், எஸ். பாலச்சந்தரின் பல்துறை …

மதுரையில் Read More »

கோடை பயணம்

கோடைவிடுமுறைக்காகக் குடும்பத்துடன் மதுரை செல்கிறேன் மே 15 வரை மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், ராஜபாளையம், எனச் சுற்றிக் கொண்டிருப்பேன், கேரளா மற்றும் கொடைக்கானல் செல்லவும் திட்டம். சந்திக்க விரும்பும் நண்பர்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் அவசியம் சந்தித்து உரையாடலாம். திங்கள்கிழமை 28.04.2014 அன்று தஞ்சை தமிழ் பல்கலைகழக ஆய்வுவட்ட நிறைவு விழாவில் பேசுகிறேன், காலை 11 மணி அளவில் பேரவை கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. விருப்பமான நண்பர்கள் கலந்து கொள்ளலாம் ••

ஜெயகாந்தன் பிறந்தநாள்

இன்று ஜெயகாந்தன் அவர்களின் பிறந்தநாள், அவரிடம் ஆசிபெறுவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன், உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவசிகிட்சை பெற்று வீடு திரும்பியுள்ள ஜெயகாந்தன்  தளர்ச்சியாகவே  காணப்பட்டார் ஜேகேயை காண்பதும், அருகமர்ந்து இருப்பது மிகுந்த சந்தோஷம் தரக்கூடியது, தனது எழுத்தாலும் பேச்சாலும் தமிழகத்தையே வியந்து பார்க்க வைத்த ஜேகே இப்போது அமைதியாகிவிட்டார் இந்த அமைதியும் அவருக்கு அழகாகவே இருக்கிறது கவிதா சொக்கலிங்கம், முனைவர் மா. ராஜேந்திரன், டாக்டர் ருத்ரன், ஒவியர் சீனிவாசன், யு.எஸ்.எஸ்.ஆர் நடராசன் என பலரும் ஜேகேயை காண்பதற்காக …

ஜெயகாந்தன் பிறந்தநாள் Read More »

சென்னை புத்தக சங்கமம்

சென்னை ராயப்பேட்டை YMCA வில்  நடைபெற்று வரும் சென்னை புத்தக சங்கமத்தில் நிறைய ஆங்கில நூல்கள் 50 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. குறிப்பாக நவீன இலக்கியம் சார்ந்து வாசிக்க விரும்புகிறவர்களுக்கு உம்பர்தோ ஈகோ, நார்டின் கோடிமர், மார்க்ரெட் ஆட்வுட், டால்ஸ்டாய், டோனி மாரிசன், ஐசக் பேபல், தஸ்தாயெவ்ஸ்கி, புஷ்கின், மிலன்குந்தேரா, மெல்வில், டொனால்ட் பார்த்தல்மே உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள்  மலிவு விலையில் கிடைக்கின்றன அத்துடன் ஒவியம், இசை, வரலாறு. அகராதிகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் …

சென்னை புத்தக சங்கமம் Read More »

சிறுமியின் பாராட்டு

குழந்தைகளுக்காக நான் எழுதிய கிறுகிறுவானம் நூலை ஜி.கீதா ஆங்கிலத்தில் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் Whirling Swirling Sky என்ற இந்த நூல்  நண்பர் பவா செல்லத்துரையின் வம்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளளது, இரண்டு வாரங்களின் முன்பாக இந்த நூலைப் படித்த ஒன்பது வயது சிறுமி சாதனா எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தாள். வழக்கமான எத்தனையோ மின்னஞ்சல்களுக்கு நடுவில் அவளது மெயில் என்னை மிகவும் சந்தோஷம் கொள்ள வைத்தது, எனக்குக் கிடைத்த பெரிய பாராட்டாக இதைக் …

சிறுமியின் பாராட்டு Read More »

அஞ்சலி :மார்க்வெஸ்

லத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற நாவலாசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்  இன்று காலமானார், மார்க்வெஸ் எனது ஆதர்ச எழுத்தாளர்களில் ஒருவர், அவரது கதைகளை எழுத்து எண்ணிப் படித்திருக்கிறேன் எண்பதுகளின் துவக்கத்தில் மார்க்வெஸின் புத்தகங்கள் கிடைக்காமல் அதை வாங்குவதற்காகவே சென்னை, திருவனந்தபுரம், மும்பை, எனச் சுற்றியலைந்திருக்கிறேன் கோணங்கி மார்க்வெஸின் படைப்புகளுக்காக கல்குதிரையில் சிறப்பிதழ் ஒன்று கொண்டுவந்திருக்கிறார், அந்தப் பணியில் அவர் கூடவே அலைந்த போது பகலும் இரவுமாக மார்க்வெஸ் பற்றிப் பேசியிருக்கிறோம், The Fragrance of …

அஞ்சலி :மார்க்வெஸ் Read More »

கார்வரின் கதையுலகம்

சமீபத்தில் நான் படித்த மிக முக்கியமான மொழிபெயர்ப்புப் புத்தகம் ரேமண்ட் கார்வரின் வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு. கார்வரின் முக்கியமான 12 சிறுகதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள், இந்தக் கதைகளைத் தேர்வு செய்து தொகுத்திருக்கிறார் செங்கதிர். இவரோடு எம். கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், விஜயராகவன் ஆகியோரும் கதைகளை மொழியாக்கம் செய்துள்ளார்கள், இதனைக் காலச்சுவடு வெளியிட்டுள்ளது கார்வரை அறிமுகப்படுத்திச் செங்கதிர் நேர்த்தியான முன்னுரை ஒன்றை எழுதியிருக்கிறார்,  அதில் இன்றைய சூழலில் யதார்த்தவாத எழுத்து ஏன் தேவை என்பதைப் பற்றி விரிவாக …

கார்வரின் கதையுலகம் Read More »

மதுரைக்காட்சிகள்

தாமஸ் மற்றும் வில்லியம் டேனியல் வரைந்த மதுரைக்காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன, கோட்டையுள்ள மதுரையைக் காண்பது வசீகரமாகயிருக்கிறது. 200 வருஷங்களில் காலம் எவ்வளவு மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது டேனியலின் ஒவியத்தில் காணப்படும் மதுரை சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது, செடி முளைத்துப் போய்ப் பராமரிக்கபடாத நாயக்கர் காலத்துக் கோட்டை, வேலைப்பாடு மிக்க நுழைவாயில், கிணற்றில் தண்ணீர் இறைப்பவர்கள், சாவகாசமாக உட்கார்ந்திருக்கும் இருவர், கோட்டை மதிலின் உறுதி, வாழை மரம். பொதிமாடு, நாட்டு ஒடு கொண்ட வீடு, வெளிறிய மேகம், ஒவியத்தில் பலரும் தலைப்பாகை …

மதுரைக்காட்சிகள் Read More »

பிறந்த நாள்

நாளை எனது பிறந்தநாளை முன்னிட்டு (13.04.2014) டிஸ்கவரி புக் பேலஸில் நண்பர்களுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமானவர்கள் கலந்து கொள்ளலாம். மாலை நான்கு மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸில் சந்திப்போம் தொடர்புக்கு : வேடியப்பன் 9940446650 இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர், சென்னை – 600078. (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்) நேரம்:  மாலை 4 மணி ••••