அறிவிப்பு

இரண்டு நாள் இலக்கிய முகாம்

கதைகள் பேசுவோம் இலக்கிய அமைப்பின் சார்பில் நாவல் குறித்து விவாதிப்பதற்காக ஒரு நாள் முகாமை நடத்தலாம் என அறிவித்திருந்தேன். நண்பர்கள் பலரும் ஒரு நாள் போதாது என்று விரும்புகின்ற காரணத்தால் அது இரண்டு நாள் இலக்கிய முகாமாக மாற்றப்படுகிறது ஜுன் 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்கள் திண்டுக்கல்லை அடுத்த சிறுமலையில் உள்ள தன்னார்வ நிறுவன வளாகம் ஒன்றில் இந்த முகாம் நடைபெற உள்ளது. இம் முகாமை டிஸ்கவரி புக் பேலஸ் ஒருங்கிணைப்பு செய்கிறது இந்த …

இரண்டு நாள் இலக்கிய முகாம் Read More »

நாவல் இலக்கிய முகாம்

கதைகள் பேசுவோம் இலக்கிய அமைப்பின் சார்பில் வருகின்ற ஜுன் 14ம் தேதி (14/06/2014) சனிக்கிழமை, நாவல் குறித்து விவாதிப்பதற்கான முகாம் ஒன்றினை நடத்த இருக்கிறேன். இதில் எழுத்தாளர் பிரபஞ்சன், மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாஸ், ஆகியோர் சிறப்புப் பங்கேற்பாளர்களாகக் கலந்து கொள்கிறார்கள். டிஸ்கவரி புக் பேலஸ் இதனை ஒருங்கிணைப்புச் செய்கிறது. இந்த ஒரு நாள் முகாமில் உலகின் தலைசிறந்த நாவல்கள், தமிழ் நாவலின் சமகாலப் போக்குகள், தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள், ஆகிய மூன்று அமர்வுகள் நடைபெற இருக்கின்றன. இத்துடன் நாவல் எழுத விரும்புகிறவர்களுக்கான …

நாவல் இலக்கிய முகாம் Read More »

கலந்துரையாடல்

படி அமைப்பின் சார்பில் வருகின்ற 23ம் தேதி, வெள்ளிகிழமை மாலை 5.30 மணிக்கு எனது நிமித்தம் நாவல் குறித்து ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன். இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர், சென்னை – 600078 நாள் : 23.05.2014 நேரம் : மாலை 5.30 மணி தொடர்புக்கு  : வேடியப்பன். Ph”+91 44 …

கலந்துரையாடல் Read More »

பிரெஞ்சு படம்

பிரெஞ்சு இயக்குனர் மிஷேல் ஸ்பினோசாவின் Son épouse என்ற பிரெஞ்சு படம் புதுச்சேரியை மையமாகக் கொண்டது இப்படத்தின் தமிழ்பகுதிகளுக்கான உரையாடலை நான் எழுதியிருக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு படம்  சர்வதேச அளவில் வெளியாகி சிறந்த பாராட்டுதல்களைப் பெற்றதோடு பெர்லின் திரைப்படவிழாவிலும் பங்கெடுத்துள்ளது

சென்னை திரும்பினேன்

கோடை விடுமுறையில் இருந்து இன்று மதியம் சென்னை திரும்பினேன், விடுமுறைப் பயணம் என்ற போதும் ஒய்வெடுக்கவில்லை, தொடர்ந்த சந்திப்புகள், இலக்கியக் கூட்டங்கள் என சுற்றியலைந்து கொண்டிருந்தது மாறுபட்ட அனுபவமாகவே இருந்தது ஊரில் இருக்கிற நாட்களில் ஒருநாளைக்கு அதிகபட்சம் மூன்றோ நான்கோ தொலைபேசி அழைப்புகள் மட்டுமே வந்தன, வாகன நெருக்கடிகள் இல்லை, ஏகாந்தமான காலை நடை, ஆசை தீரக் குளிப்பது, பிடித்தமான சாப்பாடு, அப்புறம் இரண்டு மணி நேரம் படிப்பது யாராவது நண்பர்களைத் தேடிப் போய் சந்திப்பது, மதிய …

சென்னை திரும்பினேன் Read More »

உரை

உரையாடல் என்ற இலக்கிய அமைப்பை மொழிபெயர்ப்பாளர் தேவதாஸ் மற்றும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து ராஜபாளையத்தில் நடத்தி வருகிறார்கள் இந்த அமைப்பு சார்பாக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான  கேப்ரியல் கார்சியா மார்க்கெஸின் வாழ்வும் எழுத்தும் குறித்து  நான் பேசயிருக்கிறேன் நாள் : மே மாதம் 10ம் தேதி சனிக்கிழமை (10.05.14) நேரம்:  மாலை ஐந்து மணி இடம் : வைமா வித்யாலயா பள்ளி.  ஸ்ரீரெங்கபாளையம், இராஜபாளையம் இப்பள்ளி பத்மா மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ளது நண்பர்கள் …

உரை Read More »

மதுரையில்

மதுரையில் நேறறு நல்ல மழை, கோடை இடியின் உக்கிரம், மின்னல்வெட்டின் வலிமை, காற்றோடு கூடிய மழை,   தோழர் எஸ் ஏபி வீட்டிலிருந்து மழையைப் பார்த்துக் கொண்டிருநதேன், மகிழ்ச்சியான அனுபவம் மழைக்குப் பிறகான மதுரை சற்று குளிர்ந்திருக்கிறது, வழக்கமான பணிகள் அத்தனையும் தூக்கி ஒரம் கட்டி வைத்துவிட்டு படிப்பது, இசை கேட்பது, படம் பார்ப்பது,  பயணம் என ஒய்வாக கழிகிறது நாட்கள் வீணையின் குரல் என்ற எஸ். பாலசந்தர்  வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வாசித்தேன், எஸ். பாலச்சந்தரின் பல்துறை …

மதுரையில் Read More »

கோடை பயணம்

கோடைவிடுமுறைக்காகக் குடும்பத்துடன் மதுரை செல்கிறேன் மே 15 வரை மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், ராஜபாளையம், எனச் சுற்றிக் கொண்டிருப்பேன், கேரளா மற்றும் கொடைக்கானல் செல்லவும் திட்டம். சந்திக்க விரும்பும் நண்பர்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் அவசியம் சந்தித்து உரையாடலாம். திங்கள்கிழமை 28.04.2014 அன்று தஞ்சை தமிழ் பல்கலைகழக ஆய்வுவட்ட நிறைவு விழாவில் பேசுகிறேன், காலை 11 மணி அளவில் பேரவை கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. விருப்பமான நண்பர்கள் கலந்து கொள்ளலாம் ••

சென்னை புத்தக சங்கமம்

சென்னை ராயப்பேட்டை YMCA வில்  நடைபெற்று வரும் சென்னை புத்தக சங்கமத்தில் நிறைய ஆங்கில நூல்கள் 50 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. குறிப்பாக நவீன இலக்கியம் சார்ந்து வாசிக்க விரும்புகிறவர்களுக்கு உம்பர்தோ ஈகோ, நார்டின் கோடிமர், மார்க்ரெட் ஆட்வுட், டால்ஸ்டாய், டோனி மாரிசன், ஐசக் பேபல், தஸ்தாயெவ்ஸ்கி, புஷ்கின், மிலன்குந்தேரா, மெல்வில், டொனால்ட் பார்த்தல்மே உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள்  மலிவு விலையில் கிடைக்கின்றன அத்துடன் ஒவியம், இசை, வரலாறு. அகராதிகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் …

சென்னை புத்தக சங்கமம் Read More »

சிறுமியின் பாராட்டு

குழந்தைகளுக்காக நான் எழுதிய கிறுகிறுவானம் நூலை ஜி.கீதா ஆங்கிலத்தில் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் Whirling Swirling Sky என்ற இந்த நூல்  நண்பர் பவா செல்லத்துரையின் வம்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளளது, இரண்டு வாரங்களின் முன்பாக இந்த நூலைப் படித்த ஒன்பது வயது சிறுமி சாதனா எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தாள். வழக்கமான எத்தனையோ மின்னஞ்சல்களுக்கு நடுவில் அவளது மெயில் என்னை மிகவும் சந்தோஷம் கொள்ள வைத்தது, எனக்குக் கிடைத்த பெரிய பாராட்டாக இதைக் …

சிறுமியின் பாராட்டு Read More »