அவர்களின் கவிதை : வி.யோகேஷ்

இன்மை என்ற கவிதைக்கான இணைய இதழ் ஒன்றை கவிஞர் அபிலாஷ் தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார், மாதம் இருமுறை வலையேற்றம் செய்யப்படுகிறது, இந்த இணைய இதழில் சிறந்த கவிதைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள் வெளியாகின்றன,  அவசியம் படித்துப்பாருங்கள் https://www.inmmai.com/p/blog-page.html •• இன்மை இதழில் வெளியான தீராத நினைவு என்ற வி.யோகேஷ் கவிதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது,  கச்சிதமான, எளிமையான கவிதை. தலைப்பு ஒன்று தான் பழமையானது, ஆனால் கவிதை தரும் அனுபவம் விரிந்து கொண்டே செல்கிறது. கடந்தகாலங்களை அப்படியே …

அவர்களின் கவிதை : வி.யோகேஷ் Read More »

முகாம் குறிப்புகள்- 1

வருகிற ஞாயிறு (23/03/2014) அன்று நடைபெற உள்ள கதைகள் பேசுவோம் இலக்கியமுகாமில் விவாதிக்கபட உள்ள சிறுகதைகளின் பட்டியலை இணைத்திருக்கிறேன். இவற்றை பங்கேற்பாளர்கள் வாசித்து வந்தால் விவாதிப்பதற்கு உதவிகரமாக இருக்கும். இக்கதைகள் அழியாச்சுடர்கள் இணையதளத்தில் வாசிக்க கிடைக்கின்றன காஞ்சனை – புதுமைப்பித்தன் துக்க விசாரணை-ஜி. நாகராஜன் பாம்பும் பிடாரனும் – வண்ண நிலவன் காசி-பாதசாரி மூங்கில் குருத்து – திலீப்குமார் வாசிக்க : https://azhiyasudargal.blogspot.in/ *** உலகச்சிறுகதைகள் பழுப்புக் காலை – ஃப்ராங்க் பாவ்லாஃப் தமிழில்: ஆனந்த குமார் …

முகாம் குறிப்புகள்- 1 Read More »

காந்தி

மகாத்மா காந்தியின் வாழ்க்கையை விவரிக்கும் மாங்கா காமிக்ஸ் ஒன்று 2011ல் வெளிவந்துள்ளது, இதனை உருவாக்கியவர் Kazuki Ebine. இவர் தோக்கியோவில் வசிக்கும் இளம் ஒவியர், இந்த நூலின் விலை ரூ 400. பதின்வயதினர் காந்தியை அறிந்து கொள்வதற்கு உதவியாக இப்படக்கதை மகாத்மா வாழ்க்கையின் முக்கியச் சம்பவங்களை அழகாக விவரிக்கிறது, ஜப்பானில் பல்லாயிரம் பிரதிகள் விற்று சாதனை புரிந்துள்ளது இந்த நூல் இந்தப் புத்தகத்தை எனக்குத் தெரிந்த பள்ளி மாணவர்கள் சிலருக்குப் பரிசாக வாங்கித் தந்தேன், ஆச்சரியம். அவர்கள் …

காந்தி Read More »

உரை

வருகிற சனிக்கிழமை (15.03.2014 ) மாலை ஆறுமணிக்கு பூவுலகின் நண்பர்கள் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் ஹிரோஷிமாவிற்குச் சென்று வந்த எனது அனுபவங்கள் குறித்துப் பேச இருக்கிறேன். இந்த நிகழ்வில் சமீபமாக புகுஷிமாவிற்குச் சென்று வந்த கோ.சுந்தர்ராஜன் அணுஉலை அபாயங்கள் குறித்து உரையாற்ற இருக்கிறார் இடம் : கவிக்கோ அரங்கம் ரஹமத் வளாகம், சிஐடி காலனி 2வது மெயின்ரோடு, மயிலாப்பூர் சென்னை- 4

தோக்கியோ சுவடுகள் 5

புல்லட் ரயில் ஹிரோஷிமா நோக்கி அதிவேகமாகப் போய்க் கொண்டிருந்தது. மனம் காலத்தின் பின்னே போய் ஜப்பானின் வரலாற்று நிகழ்வுகளில் சஞ்சரிக்கத் துவங்கியது, ஆகாயத்தில் ஒரு குடைக்காளான் மிதப்பது போன்ற அணுகுண்டு வீச்சின் புகைப்படத்தை எனது பள்ளி நாட்களில் முதன்முறையாகப் பார்த்தேன், அறிவியல் பரிசோதனைக்கூடத்தில் ஒரு போஸ்டராக ஒட்டப்பட்டிருந்தது. இரண்டாவது உலக யுத்தத்தில் போது அமெரிக்கா, ஹிரோஷிமாவில் அணுகுண்டை வீசி ஒரு லட்சம் பேருக்கும் மேல் கொன்று குவித்தது என்று ஆசிரியர் விளக்கிச் சொல்லியிருந்தார், ஆனால் ஏன் ஹிரோஷிமாவில் …

தோக்கியோ சுவடுகள் 5 Read More »

எனது புத்தகங்கள்

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில், உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்த எனது புதிய நாவல் நிமித்தம் முதற்பதிப்பு விற்றுத்தீர்ந்து அதன் அடுத்தபதிப்பு வெளிவர இருக்கிறது இது போலவே இலக்கில்லாத பயணி , எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா, காந்தியோடு பேசுவேன் ஆகிய நூல்களும் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளன. நான் தொகுத்து, டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ள நூறு சிறந்த தமிழ்சிறுகதைகளின் தொகைநூல் மிகச் சிறப்பாக விற்பனையாகி வருகிறது, எனது புத்தகங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் …

எனது புத்தகங்கள் Read More »

செல்லப்பாவின் கேமிரா

எழுத்தாளர் சி.சு. செல்லப்பா ஜல்லிக்கட்டு குறித்து அற்புதமான புகைப்படங்களை எடுத்திருக்கிறார், புகைப்படக்கலையின் மீது தீவிர ஆர்வம் கொண்டிருந்த செல்லப்பா கறுப்பு வெள்ளையில் நிறையப் புகைப்படங்களை எடுத்திருக்கிறார் மதுரையில் உள்ள மகனது வீட்டில் அவர் வசித்தபோது நான் அடிக்கடி சந்தித்துப் பேசுவதுண்டு, தனது புகைப்படங்களில் சிலவற்றைச் செல்லப்பா காட்டியிருக்கிறார், அந்தப் புகைப்படங்கள் என்னவாகின என்று தெரியவில்லை இன்று வரை அவர் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி எதுவும் நடத்தப்படவேயில்லை. செல்லப்பா முக்கியமான புகைப்படக்கலைஞர் என்பதற்கு இந்த ஒரு புகைப்படம் சாட்சி …

செல்லப்பாவின் கேமிரா Read More »

கடலில் ஒருவன்

எனக்கு ராபர்ட் ரெட்போர்டை பிடிக்கும், ஹாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகர், அவரது இயக்கத்தில் வெளியான A River Runs Through It எனது விருப்ப பட்டியலில் எப்போதும் இருக்கும் படம், பலமுறை பார்த்திருக்கிறேன், நேற்றிரவு ராபர்ட் ரெட்போர்ட் நடித்த All Is Lost படம் பார்த்தேன், கிராவிட்டி படம் பார்த்த போது அடைந்த கிளர்ச்சியும் புத்துணர்ச்சியும் இந்தப் படத்திலும் உருவானது, சென்ற ஆண்டு வெளியான படங்களில் இப்படம் முக்கியமான ஒன்று, ஏன் கவனம் பெறாமல் போனது என்று தெரியவில்லை, …

கடலில் ஒருவன் Read More »

தெலுங்கு இணைய இதழில்

பிழை திருத்துபவரின் மனைவி என்ற எனது சிறுகதை தெலுங்கு இணைய  இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இக்கதையை மொழியாக்கம் செய்திருப்பவர்  Avineni Bhaskar. https://patrika.kinige.com/?p=1836

நிலவும் நாணயங்களும்

நிலவைப் பார்த்துக் கொண்டிருக்கும் கலைஞனுக்குக் காலடியில் கிடக்கும் நாணயங்கள் கண்ணுக்குத் தெரியாது என்பார்கள் உலகெங்கும் கலைஞர்கள் தனது கற்பனையுலகோடு, தனது படைப்பாற்றலின் முழுவீச்சோடு இயங்கவே ஆசைப்பட்டிருக்கிறார்கள் தன் விருப்பபடி வாழ்வதற்கு உலகம் அனுமதிக்காது என்பதை உணர்ந்து கொண்டு, அதை மீறிச் செயல்பட்டிருக்கிறார்கள்,  பத்தொன்பதாம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் பலரது வாழ்வும் நாடோடிகளின் வாழ்க்கைமுறையைக் கொண்டதே வாழ்க்கையை அதன் தீவிரத்தோடு எதிர்கொண்டு தன்னைப் பலிக் கொடுத்த ஒவியர்கள், இசைக்கலைஞர்கள், கவிஞர்கள், நாவலாசிரியர்கள் என நிறையப் பேர் என் நினைவில் வந்து …

நிலவும் நாணயங்களும் Read More »