நாவல்களே உலகை ஆள்கின்றன

இன்றைய தேதியில் உலகில் அதிகம் வாசிக்கபடுவது எது, கவிதையா, நாவலா, கட்டுரைகளா, சுயமுன்னேற்ற நூல்களா என்ற விவாதம் முடிவில்லாமல் நடந்து கொண்டேதானிருக்கிறது, புள்ளிவிபரங்களைப் பார்க்கையில் நாவலாசிரியர்களே அதிகம் வாசிக்கவும் கொண்டாடவும் படுகிறார்கள் என்பதே நிஜம். ஹாரிபோட்டர் 450 மில்லியன் விற்பனையாகியிருக்கிறது, டாவின்சி கோடு 80 மில்லியன் பிரதிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது, ஜப்பானிய நாவலாசிரியரான ஹருகி முராகமியின் நாவல் 13 மில்லியன் விற்பனையாகியிருக்கிறது, இந்த வரிசையில் நூறு மில்லியனுக்கும் மேல் விற்பனையாது என்று இருபதிற்கும் மேற்பட்ட நாவல்கள் உள்ளன, …

நாவல்களே உலகை ஆள்கின்றன Read More »

உரையின் பதிவு

நேற்று ஷேக்ஸ்பியர் பற்றிய எனது உரையைக் கேட்பதற்கு நிறையப் பேராசிரியர்கள், முன்னாள் துணைவேந்தர், பல்வேறு கல்விப்புலம் சார்ந்தவர்கள் வந்திருந்தார்கள்,  அரங்கு நிரம்பி இருக்கை கிடைக்காமல் பலரும் தரையில் அமர்ந்து உரையைக் கேட்டார்கள். டெல்லி. பெங்களுர். மும்பை, இலங்கை, மதுரை, கோவை என்று பல ஊர்களில் இருந்தும் சென்னைக்கு இந்த உரைகளைக் கேட்பதற்காகவே வந்து அறை எடுத்து தங்கியிருப்பதாக சில நண்பர்கள் அறிமுகம் ஆகிக் கொண்டார்கள், இந்த ஆதரவு மிகுந்த உத்வேகம் தருவதாக இருக்கிறது •• உலக இலக்கியம் …

உரையின் பதிவு Read More »

தொடரும் சொற்பொழிவு

சென்னையில் உள்ள ருஷ்யக் கலாச்சார மையத்தில் நான் உரையாற்றும் உலக இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு நேற்றும் இன்றும் நல்ல கூட்டம், உட்கார இடமில்லாமல் நிறைய நண்பர்கள் நின்று கொண்டே உரையைக் கேட்டார்கள், இரண்டு நாட்களும் இரண்டு மணிநேரம் உரையாற்றியிருக்கிறேன் உலக இலக்கியத்தை அறிந்து கொள்வதில் இவ்வளவு பேர் ஆர்வம் காட்டுவது மிகுந்த உத்வேகம் அளிக்கிறது, அதிலும் குறிப்பாக நிறைய இளைஞர்கள் வந்து கேட்பது சந்தோஷம் தருவதாக இருக்கிறது,. தமிழில் நடைபெறும் முதல்முயற்சியிது, எனக்கே நிறைய தயக்கங்கள். எப்படி வரவேற்பு …

தொடரும் சொற்பொழிவு Read More »

போர்ஹே மற்றும் நான்

போர்ஹேயின் புகழ்பெற்ற சிறுகதையான “Borges and I” இல் போர்ஹே தன்னுடைய கதைகளையும் கவிதைகளையும் புனைவதற்கு ஏதுவாக இருக்க நான் வாழ்கிறேன்.என்னை நான் வாழவிடுகிறேன். என்றொரு வரி இடம் பெற்றிருக்கிறது, ஒரு பக்க அளவில் அமைந்துள்ள இந்தக் கதை புனைவெழுத்தின் அசாத்தியமான சாதனை எழுத்தாளன் என்ற இருப்பு விந்தையானது என்ற எண்ணத்தை எவ்வளவோ படைப்பாளிகள் அடையாளம் காட்டியிருக்கிறார்கள், ஆனால் போர்ஹே அதைத் தனது புனைவின் வழியே அழகாக வெளிப்படுத்துகிறார், இரட்டை நிலை பற்றி போர்ஹேயிற்கு எப்போதுமே அதீத …

போர்ஹே மற்றும் நான் Read More »

பஷீரின் மதிலுகள்

வைக்கம் முகமது பஷீரின் மதிலுகள் திரைப்படம் இணையத்தில் காணக்கிடைக்கிறது, அடூர் கோபாலகிருஷ்ணனின் இயக்கதில் மம்முட்டி நடித்திருக்கும் இப்படம் பஷீரின் சிறை நாட்களை விவரிக்கிறது, Mathilukal https://youtu.be/l9-2hRxwZS0 https://youtu.be/u9GnXjAc2FM ** டால்ஸ்டாயின் இறுதிநாட்களின் காணொளி https://youtu.be/rh1vYrogvNE ** புகழ் பெற்ற எழுத்தாளர் José Saramago பற்றிய காணொளி https://youtu.be/qp0yQVuphSQ *** சதத் ஹசன் மண்டோவின் தோபா டேக் சிங் ( toba tek singh )சிறுகதையின் திரைவடிவம் https://youtu.be/w1Txc2CJtCo https://youtu.be/3gWpVD12eVg https://youtu.be/7EdAeEvXh6c *** ஒவியர் டாலியின் நேர்காணல் https://youtu.be/eGKKyTKVWbY …

பஷீரின் மதிலுகள் Read More »

இலக்கியச் சொற்பொழிவு

நவம்பர் 21 முதல் 27 வரை சென்னை ருஷ்யக் கலாச்சார மையத்தில் ஏழு நாட்கள் உலக இலக்கியம் குறித்து தொடர் சொற்பொழிவு நடத்த இருக்கிறேன், தினமும் மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் அனைவரும் வருக.

மொகலாய நுண்ணோவியங்கள்

ராஜஸ்தானுக்குப் போகும் போதெல்லாம் சிவப்பு நிறத்தின் மீது அவர்களுக்கு ஏன் இவ்வளவு விருப்பமாக இருக்கிறது என்று யோசித்திருக்கிறேன், பாலை சார்ந்த நிலவெளி என்பதாலோ, அல்லது வீர உணர்வின் அடையாளமாகவோ அதை தேர்வு செய்திருக்கிறார்களோ எனத்தோன்றும்,  அவர்களின் கலை வெளிப்பாட்டில், உடைகளில், வீடுகளில், சிவப்பு நிறமே பிரதான இடம் பிடித்திருக்கிறது, மரபாகவே ராஜஸ்தானியர்கள் சிவப்பைக் கொண்டாடுகிறார்கள், தமிழர்களுக்கு வெள்ளை தான் அதிகம் பிடித்திருக்கிறது, செருப்பில் இருந்து துண்டுவரை அத்தனையும் வெள்ளை நிறத்தில் தேர்வு செய்பவர் நிச்சயம் தமிழனாகத்தான் இருப்பார், …

மொகலாய நுண்ணோவியங்கள் Read More »

உரத்த சிந்தனை

ஜுனியர் விகடன் செய்தியும் சிந்தனையும் என்ற புதிய பகுதி ஒன்றை நடத்தி வருகிறார்கள், இது ஒரு பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல் நிகழ்வு, நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டால் மூன்று நிமிசங்களுக்கு ஒருவரின் உரத்த சிந்தனை ஒன்றைக் கேட்க முடியும், இந்த சிந்தனைத் தொடரில் நான் நவம்பர் 16 முதல் இரண்டுவாரங்களுக்குப் பேச இருக்கிறேன் தினம் ஒரு புதுசிந்தனையைக் கேட்பதற்கு 044 -42890482 என்ற எண்ணுக்குத் தொலைபேசி செய்யுங்கள், இது சிந்தனை வெளியை …

உரத்த சிந்தனை Read More »

மகத்தான மந்திரிகுமாரி

தமிழ்சினிமாவில் கதாநாயகன் என்ற புனிதபிம்பத்தை முற்றிலும் மாற்றிய இரண்டு திரைப்படங்கள் மந்திரிகுமாரி, மற்றும் ரத்தக்கண்ணீர். இரண்டையும் பத்து முறைகளுக்கு மேலாகப் பார்த்திருப்பேன். மந்திரிகுமாரி 1950ல் வெளியானது. ரத்தக்கண்ணீர் 1954 ம் ஆண்டு வெளியாகி உள்ளது. இரண்டின் கதாநாயர்களும் தன்னுடைய விருப்பதின் பாதையில் தன்னை உருவாக்கி கொண்டவர்கள். மந்திரி குமாரியில் வரும் பார்த்திபன் கொலை, கொள்ளைகளை விரும்பிச் செய்கிறான். கொலை தனது கலை என்று உரத்து சொல்கிறான். ரத்தகண்ணீரில் வரும் மோகன் வெளிநாட்டில் படித்து திரும்பிவந்து குடும்பம் சமூகம் …

மகத்தான மந்திரிகுமாரி Read More »