கொட்டுக்காரர்கள்.

நேற்று நண்பர் ஒருவரின்  குடியிருப்பில் வாட்ச்மேனாக உள்ள வயதான ஒருவரை  சந்தித்தேன். அவரது தோற்றம் வித்யாசமாக இருந்தது.  யார் என்று விசாரித்தேன். அவர் மிகுந்த தயக்கத்துடன் நான் கொட்டுக்காரன் என்றார். அந்த வார்த்தை எனக்கு பரவசமாக இருந்தது. ஏன் இங்கே வந்துவிட்டீர்கள் என்றேன். இப்போ யாரு கொட்டு அடிக்க கூப்பிடுறா. ஊர்ல சாந்து சட்டி சுமந்துகிட்டு இருந்தேன்,  போதும்னு கிளம்பி வந்துட்டேன். இங்கே ஆயிரத்திஇருநூறு ருபாய் மாச சம்பளம் என்றார். அவரது விரல்களை பார்த்துக் கொண்டேயிருந்தேன். எத்தனை …

கொட்டுக்காரர்கள். Read More »

வில்லா கேதர்

எனக்கு விருப்பமான அமெரிக்க பெண் எழுத்தாளர் வில்லா கேதர் . நான் அறிந்தவரை தமிழில் இவரது நாவல் எதுவும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவில்லை. ஆனால் உலகின் சிறந்த நூறு நாவல்கள் பட்டியலை எவர் சிபாரிசு செய்யும் போதும் வில்லா கேதரின் பெயர் நிச்சயம் இடம் பெற்றுவிடுகிறது. அந்த அளவு தனித்துவமும் நுட்பமான கதை சொல்லலும் கொண்டவர். வில்லியம் பாக்னரை  பிடிக்கின்றவர்களுக்கு வில்லா கேதரை நிச்சயம் பிடிக்கும். இருவரும் கதை தேர்வு மற்றும் சொல்முறையில் நிறைய ஒற்றுமை கொண்டவர்கள். இரண்டு …

வில்லா கேதர் Read More »

ஒடும் ஆறு.

கடந்த வெள்ளிகிழமையன்று கர்நாடகாவில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம் சென்றிருந்தேன்.  அதிகாலை நேரத்தில் பயணம் செய்தேன். விடியாத இருட்டும் விட்டுவிட்டு பெய்யும் மழையுடன் கூடிய பயணம். கோடையிலும் வயலின் பசுமை கண்ணில் படுகிறது. மண்டியா மாவட்டத்தின் கிராமங்கள் மிக அழகானவை. முற்றிலும் வயல்களுக்கு நடுவில் உள்ள சிறிய கிராமங்கள். ஆற்றங்கரையில் முளைத்துள்ள கிராமங்கள், ஆலமரங்களும் ஒற்றையடி பாதைகளும் கொண்ட கிராமங்கள் என்று காலத்தின் பின்செல்கிறோமோ என தோன்றும் தோற்றங்கள். வாத்து கூட்டம் ஒன்று மண்பாதையில் தனியே சென்று கொண்டிருந்தது. அடிவானத்தினுள் …

ஒடும் ஆறு. Read More »

என்ன விளையாடுவது?

கோடை விடுமுறை துவங்கியது முதல் என் பையன்களுக்கு உள்ள தீராத கேள்வி என்ன விளையாடுவது, யாரோடு விளையாடுவது.?  பள்ளிநாட்களில் விளையாட்டு என்பது ஒரு மணி நேர மகிழ்ச்சி அவ்வளவே. ஆனால் கோடை விடுமுறையின் முப்பது நாற்பது நாட்களை  எப்படிக் கழிப்பது என்பதே என்ன விளையாடுவது என்ற கேள்வியாக மாறி நிற்கிறது. இந்த கேள்விக்கு என்னிடம் உள்ள பதில் பயணம். கோடை முழுவதையும் ஊர் ஊராக பயணம் செல்வதில் கழிக்கலாம் என்பதே என் விருப்பம். ஆழ்ந்து யோசித்தால் இது  …

என்ன விளையாடுவது? Read More »

சிற்பமொழி

இரண்டு நாட்களுக்கு முன்பாக தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமகால இலக்கியப் போக்குகள் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டுவிட்டு கும்பகோணம் சென்றிருந்தேன். அங்கே கலை விமர்சகர் தேனுகா  அவர்களைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். இசை, சிற்பம், ஒவியம், இலக்கியம் என்று ஆழ்ந்து அறிந்தவர் தேனுகா.  பேச்சின் நடுவில் நீங்கள் அவசியம் வித்யாசங்கர் ஸ்தபதியைச் சந்திக்க வேண்டும் என்று சொல்லி அவரைக் காண்பதற்காக அழைத்து சென்றார். கும்பகோணம் சுவாமிமலை செல்லும் சாலையில் உள்ளது வித்யாசங்கர் ஸ்தபதியின் வீடு. …

சிற்பமொழி Read More »

செகாவ்வும் கார்க்கியும்

நூறு வருடங்களுக்கு முன்பு புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவ்வை சந்திப்பதற்கு சக எழுத்தாளரான மாக்சிம் கார்க்கி  சென்றார். இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒரு நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதை பற்றிய நினைவுகுறிப்புகள் ஒன்றை இரண்டு நாட்களின் முன்பாக வாசித்தேன். செகாவ் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். அப்பா கடன்தொல்லை காரணமாக வீட்டை விட்டு ஒடிப்போனார். தானே வேலை செய்து சம்பாதித்து படித்தவர். மருத்துவம் படித்து ஏழைகளுக்கு  இலவச வைத்தியம் செய்தபடியே எழுத்தாளராக தன்னை வெளிப்படுத்திக் …

செகாவ்வும் கார்க்கியும் Read More »

தண்ணீரோடு பேசுங்கள்.

உலகின் தொலைதூரத்தில் ஒரு வயதான பெண் தண்ணீரைக் காப்பாற்ற வேண்டி பதினேழு ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்து போயிருக்கிறாள். அவள்  பெயர். ஜோசபின் மண்டாமின். (Josephine Mandamin  ) கனடாவின் பூர்வ குடி மக்களில் ஒருபிரிவான Anishinabe யை சேர்ந்த அறுபது வயதைக் கடந்த பெண். இன்றும் தனது நெடும்பயணத்திலிருக்கிறாள். கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உள்ள மிகப்பெரிய ஏரி தி கிரேட்டர் லேக். இது ஐந்து பெரிய ஏரிகளாகவும் சிறு சிறு ஏரிகள், தீவுகளாகவும் பெரிய கடல் …

தண்ணீரோடு பேசுங்கள். Read More »

சிவகங்கை சீமை

தமிழில் வெளிவந்த சரித்திரபடங்களில் எனக்கு மிகவும் பிடித்தது சிவகங்கை சீமை. கண்ணதாசன் திரைக்கதை வசனம் எழுதி தயாரித்த இந்த படம் 1959ல் வெளியானது. கே. சங்கர் இயக்கியுள்ளார். படத்தில் பதினாறு பாடல்கள். வெற்றிப்படமில்லை என்றபோதும் தமிழ் சினிமாவில் இன்றும் அது ஒரு முன்மாதிரி படம். சரித்திரபடம் என்றவுடனே பளபளக்கும் ஜிகினா ஆடைகள், பிரம்மாண்டமான அரண்மனை, நீதி கேட்கும் தர்பார், அலங்காரமான தங்க வைர நகைகள், அந்தபுரம், ஆடல் பெண்கள், விஷம் கொடுத்து கொலை செய்யும் சதிகாரர்கள் , …

சிவகங்கை சீமை Read More »

டால்ஸ்டாயின் மௌனபடம்

ருஷ்ய இலக்கியமேதை டால்ஸ்டாயின் கதைகளை வாசிக்கும் போது அவரது குரல் நமக்கு நெருக்கமாக கேட்பது போலவே இருக்கும். பலநேரங்களில் அவர் ஒரு ருஷ்ய எழுத்தாளர் என்பது  கூட மறந்துவிடும். குறிப்பாக அன்னாகரீனனா படிக்கும் போது அன்னாவின் பெருமூச்சையும் விம்மலையும் காகிதத்தில் உணர்ந்திருக்கிறேன். கசாக்கை வாசிக்கையில் ராணுவவீரனின் தனிமை என் காதில் கிசுகிசுத்த குரலில் கேட்டிருக்கிறது. டால்ஸ்டாயின்குரல் எப்படியிருக்கும் என்று நானே யோசித்து கொண்டிருந்ததுண்டு. ஒரு முறை எனது நண்பர் புகழ்பெற்ற மனிதர்களின் குரல்களின் பதிவு கொண்ட குறுந்தகடு …

டால்ஸ்டாயின் மௌனபடம் Read More »

எனது புத்தகங்கள்

  அன்புள்ள வாசக நண்பர்களுக்கு, உயிர்மை பதிப்பகம் இந்த ஆண்டு ஜனவரி சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிட்ட எனது 8 நூல்களும் இப்போது உயிர்மை இணைய தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.  உயிர்மை பதிப்பகம் ஆன்லைன் மூலம் இந்த புத்தகங்களை ஆர்டர் செய்யும் வாசகர்களுக்கு சலுகை விலையினை ஏப்ரல் 30 வரை அறிவித்திருக்கிறது.  8 நூல்களின் மொத்த விலை ரூ.1735. இந்தியாவில் இது மொத்தமாக வாங்குபவர்களுக்கு ரூ.1500/-க்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் தபால் செலவு இலவசம்.  இந்தியாவிற்கு வெளியே இந்த …

எனது புத்தகங்கள் Read More »