குறுங்கதை 59 கானலை அருந்தும் யானை.
பாடிப் பரிசல் பெறுவதற்காக வந்த அவர் மூன்று நாட்களாகக் காத்திருந்தார். கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் என்பது அவரது பெயர் மலைநாட்டில் பௌர்ணமி தோறும் நிலா வட்டம் கூடுவது வழக்கம். ஊர் கிழார் பாணர்களையும் பாடினிகளையும் வரவேற்று கௌரவிப்பார். பரிசல் தந்து அனுப்பி வைப்பார். ஒரு முறை அவர் பாணன் ஒருவனுக்குப் புள்ளிமான் ஒன்றைப் பரிசாக அளித்து அனுப்பினார் என்றார்கள். புள்ளிமானுடன் ஒரு பாணன் நெடுந்தொலைவு நடந்து செல்லும் காட்சி நற்சேந்தனார் மனதில் வந்து போனது. ஊர் கிழாரின் …