புதிய தலைமுறை இதழில்
இந்த வாரம் புதிய தலைமுறை இதழில் வெளியான குறிப்பு
இந்த வாரம் புதிய தலைமுறை இதழில் வெளியான குறிப்பு
சென்ற வாரம் தினமணிக் கதிரில் வெளியான கட்டுரை
அந்த நகரில் ஒரு எலி சிற்பியாக வாழ்ந்து வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒருநாள் பேக்கரி ஒன்றின் உள்ளே இரவில் திருடப் போகையில் அங்கே செய்து வைக்கப்பட்டிருந்த விதவிதமான கேக்குகளையும் அதன் அலங்கார வடிவத்தையும் கண்ட அந்த எலி அவற்றை உண்ணும் சிற்பங்களாகவே கருதியது. ஆகவே தானும் அப்படியான சிற்பங்களைச் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டது. திருடி வந்த கேக்துண்டினை வைத்துக் கொண்டு சிற்பம் செய்து பார்த்தது. ஆரம்பத்தில் அந்த எலி நினைத்தது போலச் சிறிய உருவத்தைக் …
பிப்ரவரி 1832 இல் எழுத்தாளர் பால்சாக் (Honore de Balzac) முகவரிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அது உக்ரேனின் ஒடேஸாவிலிருந்து எழுதப்பட்ட கடிதம். எழுதியவர் பெயர் முகவரி எதுவுமில்லை. ஆனால் அக் கடிதம் பால்சாக்கின் படைப்புகளைக் கோபமாக விமர்சனம் செய்திருந்தது. குறிப்பாக அவரது La Peau de chagrin நாவலின் பெண் கதாபாத்திரம் பற்றி எதிர்மறையான விமர்சனத்தை வைத்திருந்தது. யார் எழுதியது என்று தெரியவில்லை. அந்நியர் என்று மட்டுமே கையெழுத்து இடப்பட்டிருந்தது. ஆனால் அதை எழுதியது ஒரு …
பறவைகளை யாராவது சகோதரிகள் என்று நினைப்பார்களா ?. வள்ளி ஆச்சி அப்படி நினைத்தாள். அன்றாடம் தன்னுடைய வீட்டின் பின் சுவரில் வந்தமரும் மூன்று கிளிகளை அவள் அக்கா தங்கைகள் என்றே கருதினாள். அக்கிளிகளும் சகோதரிகளைப் போலவே ஒன்றாக வாலசைத்தன. மூன்று கிளிகளைப் போலத் தான் ஆச்சியும் மூன்று பெண்களில் ஒருத்தியாகப் பிறந்தாள். ஆனால் அவளது மூத்த சகோதரிகள் பத்து ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்கள். ஆச்சிக்கும் வயது எழுபதைக் கடந்தாகிவிட்டது. அரண்மனை போலப் பெரிய வீடு. வீட்டின் ஜன்னல்களை …
பை சைக்கிள் தீவ்ஸ் படத்தின் மூலம் உலகச் சினிமாவை திசை திரும்ப வைத்தவர் இத்தாலிய இயக்குநரான விட்டோரியோ டி சிகா. அவரது இயக்கத்தில் 1956 ஆம் ஆண்டு வெளியான தி ரூஃப் (The Roof ) என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். புதிதாகத் திருமணம் செய்து கொண்ட நடாலும் லூயிசாவும் குடியிருப்பதற்காக வீடு தேடுகிறார்கள். ரோமில் ஏழைகளுக்கு வீடு கிடைப்பது மிகவும் கடினம். தங்களுக்கென ஒரு வாழ்விடத்தை உருவாக்கிக் கொள்ள இளம் தம்பதிகள் மேற்கொள்ளும் போராட்டமே இப்படம். சிறிய …
காற்று, மணல்,நட்சத்திரங்கள் குறித்த சிறிய அறிமுக உரை பிரெஞ்சு எழுத்தாளர் அந்த்வான் து செந்த்-எக்சுபெரி எழுதிய குட்டி இளவரசன் உலகின் மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்று. அந்த நாவல் எழுதுவதற்கான ஆதார அனுபவங்களை விவரிக்கிறது காற்று, மணல், நட்சத்திரங்கள். இதில் விமானியான எக்சுபெரி தனது பறக்கும் அனுபவத்தை மிக அழகாக விவரித்திருக்கிறார். . இந்த நூலை தமிழில் சிறப்பாக மொழியாக்கம் செய்திருப்பவர் வெ. ஸ்ரீராம். க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது இணைப்பு https://youtu.be/_fTInyp8nfk
“சிரமம் வேண்டாம் வெளியிலே சாப்பிட்டுக் கொள்கிறேன்“ என்றான் நாதன். ஆனால் பழனி கேட்கவேயில்லை. “எப்போதும் வெளியே தானே சாப்பிடுகிறீர்கள். இன்றைக்கு என் வீட்டிற்கு மதியம் சாப்பிட வாருங்கள்“ என்றார். எவ்வளவோ மறுத்தும் பழனி கேட்கவில்லை. மதியம் ஒரு மணிக்குச் சாப்பிட வருவதாக ஒத்துக் கொண்டான். இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்தார்கள். முப்பத்தியெட்டு வயதாகியும் நாதன் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனியறை எடுத்துத் தங்கியிருந்தான். பழனி புறநகரில் குடியிருந்தார். தெரிந்தவர் வீட்டில் போய்ச் சாப்பிடுவது கூச்சமானது. எதைச் …
சார்லி சாப்ளின் ஒரு அதிசயமான கண்ணாடியை வைத்திருந்தார் என்கிறார்கள். சாப்ளினைத் தவிர வேறு யாரும் அந்தக் கண்ணாடியைப் பார்க்க அனுமதிக்கபடவில்லை. இந்த உலகில் ஒரேயொரு மனிதன் பார்க்கும் கண்ணாடி ஒன்று இருப்பது எத்தனை சந்தோஷமாக இருக்கிறது. எத்தனை ஆயிரம் பேர் பார்த்தாலும் கண்ணாடியில் எந்தச் சுவடுமிருப்பதில்லை. சாப்ளின் அந்தக் கண்ணாடியை அவரே உருவாக்கிக் கொண்டார். அவரது படுக்கை அறையில் அந்தக் கண்ணாடி இருந்தது. படப்பிடிப்பிற்குச் செல்லும் முன்பு அதன் முன்னால் வந்து நின்று பார்ப்பார். கண்ணாடி மௌனமாக …
மாஸ்கோவில் பிச்சைக்காரர்களைச் சந்திக்காமல் ஒரு தெருவைக் கடந்து செல்ல முடியாது, நகரத்துப் பிச்சைக்காரர்கள் கிராமப்புற பிச்சைக்காரர்களைப் போல இயேசு உருவம் பதித்த துணிப்பை வைத்திருப்பதில்லை. தனது தொப்பியைக் கழற்றி நம்முன்னால் நீட்டி பிச்சை கேட்கிறார்கள். நாம் காசு தரவில்லை என்றால் அலட்சியமாகப் பார்த்தபடியே கடந்து போய்விடுகிறார்கள் என்கிறார் லியோ டால்ஸ்டாய். நாட்டுப்புறத்திலிருக்கும் பிச்சைக்காரனுக்கும் நகரத்திலிருக்கும் பிச்சைக்காரனுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை லியோ டால்ஸ்டாய் விரிவாக எழுதியிருக்கிறார். இனி நாம் செய்ய வேண்டியது என்ன? என்ற அவரது …