குறுங்கதை 69- சிண்ட்ரெல்லாவின் நரை.
சிண்ட்ரெல்லாவிற்கு வயதாகியிருந்தது. எள்ளுப்பூவின் வெண்மையிலிருந்தது அவளது தலை. இப்போது அவள் மன்னர் நடத்தும் எந்த விருந்திலும் கலந்து கொள்வதில்லை. நீண்டகாலமாகவே அவளது மாயச்செருப்புகள் பயன்படுத்தப்படாமல் தங்கப்பெட்டியினுள் இருந்தன. அரண்மனை வாழ்க்கை சிண்ட்ரெல்லாவை மிகவும் மாற்றியிருந்தது. மாற்றாந்தாயின் கொடுமையில் வசித்த நாட்களில் பசித்த வேளைகளில் அவளுக்கு உணவு கிடைக்காது. நல்ல உடைகள் இருக்காது. அலங்காரம் செய்து கொள்ள முடியாது. ஏன் சப்தமாகப் பாட்டுப்பாடக்கூட முடியாது. ஆனால் இளவரசனைத் திருமணம் செய்து கொண்டபிறகு, போதும், போதும் எனச் சலிக்குமளவு உடைகளும் …