குறுங்கதை 57 நீராக மாறியவர்கள்.
நினைத்த மாத்திரத்தில் தண்ணீராக மாறக்கூடிய நான்கு குள்ளர்கள் இருந்தார்கள். அவர்களின் வேலை வாசனையற்ற மலர்களைக் கண்டறிந்து தனது விரல்தொடலின் மூலம் அந்த மலருக்கு வாசனை தருவது. வாசனையில்லாத மலரின் ஏக்கம் விவரிக்கமுடியாதது. இருட்டில் பறக்கும் பறவையின் கேவலைப் போல உலகம் அறியாதது. குள்ளர்கள் உலகின் அத்தனை மலர்களும் மணம் கொண்டிருக்க வேண்டும் என நினைத்தார்கள். இதற்காகக் காடு மலைசுற்றி அறியப்படாத சிறு மலரை அடையாளம் கண்டு அதற்கொரு வாசனையைக் கொடுத்தார்கள். புதிய வாசனையைப் பெற்றுக் கொண்ட மலர்கள் …