குறுங்கதை

குறுங்கதை 67 பாஷோவின் தோழி

ஜென் கவிஞர் பாஷோவின் தோழியும், சாமுராய் சுனேரியின் மனைவியும் ஆறு குழந்தைகளின் தாயுமான டென் சுடேஜோ எப்போதாவது தான் கவிதைகள் எழுதுவாள். அதுவும் சமைக்கிற நேரம் தான் அவளுக்குக் கவிதைகள் மனதில் தோன்றும். சமையலறைச் சுவரில் வரையப்பட்டிருந்த கொக்கின் அருகில் சென்று தன் மனதிலிருந்த கவிதையை அவள் மெல்லிய குரலில் பாடுவாள். ஒவியக்கொக்கு தான் அவளது கவிதையின் வாசகன். இறக்கை விரிந்து பறக்கும் வெண்ணிறமான அந்தக் கொக்கு கேட்டால் போதும் என்று டென் சுடேஜோ மகிழ்ச்சி அடைந்தாள். …

குறுங்கதை 67 பாஷோவின் தோழி Read More »

குறுங்கதை 66 கப்பல் நூலகம்

ஜே.எஸ்.பிரதானா என்ற கப்பலில் ராமபத்ரன் நூலகராகயிருந்தார்.. ஆங்கிலம், பிரெஞ்சு ஸ்பானிஷ் உள்ளிட்ட பதினாறு மொழிகளில் வெளியான புத்தகங்கள் அங்கிருந்தன. 1950களில் அந்தக் கப்பலின் கேப்டனாக இருந்த வின்சன்ட் ஸ்மித் தீவிர வாசிப்பாளர் என்பதால் அரிய புத்தகங்களை வாங்கிச் சேகரித்திருந்தார் ராமபத்ரன் கப்பல் நூலகத்தின் பொறுப்பாளராகப் பணிக்குச் சேர்ந்து பனிரெண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. வருஷத்தின் ஒன்பது மாதங்கள் கப்பலில் வேலை. மூன்று மாதங்கள் விடுமுறை. அப்போதும் அவர் சொந்த ஊருக்குப் போனதில்லை. துறைமுக நகரங்களில் புத்தகங்கள் வாங்குவதற்காகக் கடைகடையாகத் …

குறுங்கதை 66 கப்பல் நூலகம் Read More »

குறுங்கதை 65 கர்னலின் நாற்காலி.

அந்த மரநாற்காலி கர்னல் ஜேம்ஸ் ஃபார்லாங்கிற்காகவே செய்யப்பட்டது. அவர் ஆறடிக்கும் அதிகமான உயரம் என்பதால் அவரது உடலமைப்பிற்கு ஏற்ப தேக்கு மரத்தில் நாற்காலி செய்து கொடுத்தார் பெருமாள் ஆசாரி. 19வது படைப்பிரிவின் தலைவராகவும் நிலக்காட்சி ஓவியராகவும் இருந்த ஜேம்ஸ் ஃபார்லாங் தான் பயணம் செய்யும் இடங்களுக்கெல்லாம் அந்த நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வருவதற்காகவே சவரிமுத்துவை நியமித்திருந்தார்கள். அவன் நாற்காலியின் இருபக்கமும் கயிறுகள் போட்டு அதை முதுகில் சுமந்தபடியே வருவான். ஏற முடியாத மலைப்பகுதியாக இருந்தால் நாற்காலியில் ஜேம்ஸ் …

குறுங்கதை 65 கர்னலின் நாற்காலி. Read More »

குறுங்கதை 64 ரிங் மாஸ்டர்

சர்க்கஸிலிருந்த அந்தச் சிங்கம் மூன்று வேடிக்கைகளைச் செய்தது. முக்காலியில் ஏறி நின்று இரண்டு கால்களைத் தூக்கி சல்யூட் அடிப்பது. கால்பந்து ஒன்றைக் காலால் உதைத்து விளையாடுவது, நெருப்பு வளையம் ஒன்றில் பாய்ந்து தாவுவது என இந்த மூன்றையும் சிங்கம் செய்யும் போது அரங்கம் அதிரும். பார்வையாளர்கள் கூச்சலிடுவார்கள். கைதட்டுவார்கள். ரிங் மாஸ்டர் பணிவுடன் தலை வணங்கி அந்தப் பாராட்டினை ஏற்றுக் கொள்வான். பின்பு சிங்கத்தின் பிடரியைத் தடவி விட்டு ஒரு வளர்ப்பு நாயைப் போல கூண்டிற்குக் கூட்டிச்செல்வான். …

குறுங்கதை 64 ரிங் மாஸ்டர் Read More »

குறுங்கதை 63 கூட்டாஞ்சோறு

அந்த ஊரின் சிறந்த சமையற்காரர்களாக இருந்த எவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதிலும் துரையப்பா, சாமியார் போலச் சாயவேஷ்டி தான் கட்டிக் கொள்வார். சமைக்கிறவன் துறவியாக இருக்க வேண்டும் என்பது போலிருக்கும் அவரது தோற்றம். கல்யாண வீடுகளில் துரையப்பா சமையல் என்றால் தனி விசேசம். எல்லாத் திருமண வீடுகளுக்கும் சமைக்க அவர் ஒத்துக் கொள்வதில்லை. துரையப்பாவை கட்டாயப்படுத்தி எவரும் சமைக்க வைத்துவிட முடியவே முடியாது. அவரது சம்பளம் 1001 ரூபாய். அதில் பாதியைக் கோவிலுக்குக் கொடுத்து விடுவார் …

குறுங்கதை 63 கூட்டாஞ்சோறு Read More »

குறுங்கதை 62 சிறியதே அழகு

பிரம்மாண்டமான மலையின் அருகில் அமைந்திருந்தது அந்தப் பௌத்த மடாலயம். அதில் இளந்துறவிகள் நிறைய இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு ஒரு புதுப் பயிற்சி அளிக்கப்பட்டது. அன்றைய நாளின் பயிற்சியாகப் பிக்கு தரசக் எதிரேயுள்ள மலையைச் சிறியதாக்கும்படி கட்டளையிட்டார். இவ்வளவு பெரிய மலையை எப்படிச் சிறியதாக்குவது என இளந்துறவிகளுக்குத் தெரியவில்லை. அவர்கள் மலையின் அருகே சென்று கண்மூடி தியானம் செய்தார்கள். சிலர் மந்திரம் சொன்னால் சிறியதாகிவிடும் என நினைத்து உச்சாடனம் செய்தார்கள். ஒருவராலும் மலையைச் சிறியதாக்க முடியவில்லை. மாலை நேரம் பிக்கு தரசக் அங்கே வந்து …

குறுங்கதை 62 சிறியதே அழகு Read More »

குறுங்கதை 61 பேசாத்துணை

ரோசி டிசோசா என்ற அந்தப் பெண்ணிற்குக் கடைசிவரை துணையாக இருந்தது அந்த நாய் மட்டுமே. அவள் நோயுற்ற தருணங்களில் கூட அந்நாய் படுக்கையின் அருகிலே இருந்தது. சில நேரம் ரோசி இரவில் நோயின் வேதனை தாங்கமுடியாமல் அழுவாள். அப்போது அந்த நாய் அவளது கைகளை நக்கி தனது அன்பைத் தெரிவிக்கும். அவளை மருத்துவமனையில் அனுமதித்த நாட்களில்  நாய் வார்டின் உள்ளே வந்துவிட்டது. மருத்துவமனையினுள் நாயிற்கு அனுமதியில்லை என வெளியே துரத்திவிட்டார்கள். அப்படியும் அந்நாய் மருத்துவமனை வளாகத்தை விட்டுப் …

குறுங்கதை 61 பேசாத்துணை Read More »

குறுங்கதை 60 பெயர் எழுதப்பட்ட கால்பந்து

அப்பாவின் நினைவாக வீட்டிலிருந்தது அந்தக் கால்பந்து. அதில் விளையாட்டு வீரர்களின் பெயர்கள் யாவும் கையெழுத்திடப்பட்டிருந்தன. மங்கிய அந்த எழுத்துகளைக் கொண்டு ஒன்றிரண்டு பெயர்களை மட்டுமே வாசிக்க முடிந்தது. கால்பந்து விளையாட்டில் அப்பா கோல்கீப்பராக இருந்தார். அப்பா பரிசாகப் பெற்ற சில கோப்பைகள் வீட்டிலிருந்தன. ஆனால் அவர் கால்பந்து விளையாடுவது போல ஒரு புகைப்படம் கூட வீட்டில் இல்லை. எத்தனையோ மேட்ச் விளையாடியிருப்பாரே ஒன்றில் கூடவா புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை. அல்லது அந்தப் புகைப்படங்களைத் தொலைத்துவிட்டார்களா ?. எங்கள் …

குறுங்கதை 60 பெயர் எழுதப்பட்ட கால்பந்து Read More »

குறுங்கதை 59 கானலை அருந்தும் யானை.

பாடிப் பரிசல் பெறுவதற்காக வந்த அவர் மூன்று நாட்களாகக் காத்திருந்தார். கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் என்பது அவரது பெயர் மலைநாட்டில் பௌர்ணமி தோறும் நிலா வட்டம் கூடுவது வழக்கம். ஊர் கிழார் பாணர்களையும் பாடினிகளையும் வரவேற்று கௌரவிப்பார். பரிசல் தந்து அனுப்பி வைப்பார். ஒரு முறை அவர் பாணன் ஒருவனுக்குப் புள்ளிமான் ஒன்றைப் பரிசாக அளித்து அனுப்பினார் என்றார்கள். புள்ளிமானுடன் ஒரு பாணன் நெடுந்தொலைவு நடந்து செல்லும் காட்சி நற்சேந்தனார் மனதில் வந்து போனது. ஊர் கிழாரின் …

குறுங்கதை 59 கானலை அருந்தும் யானை. Read More »

குறுங்கதை 58 காதல்பறவைகள்.

அன்புமிக்கச் சுனிதா அகர்வால் அவர்களுக்கு, நீங்கள் எனது திருமணப்பரிசாகக் கொடுத்தனுப்பிய இரண்டு காதல் பறவைகளை உங்களிடமே திருப்பி அனுப்பி வைக்கிறேன். இது முறையான செயலில்லை என்ற போதும் இந்தப் பறவைகள் வந்த நாள் முதல் நான் நிம்மதியற்றுப் போய்விட்டேன் என்பதால் இதை நீங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மன்றாடுகிறேன். எனக்கோ, என் மனைவிக்கோ பறவைகள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்ததே கிடையாது. ஒருமுறை அழகான நாய்க்குட்டி ஒன்றை வீட்டிற்குக் கொண்டுவந்த போது உடனே அதை …

குறுங்கதை 58 காதல்பறவைகள். Read More »